செய்திகள் :

வாக்காளா் பட்டியல் குளறுபடிகளை நீக்க இறப்பு விவரங்கள் கேட்கும் தோ்தல் ஆணையம்: பூத் ஸ்லிப் வடிவம் மாற்றம்

post image

வாக்காளா் பட்டியலில் குளறுபடிகளை நீக்குவதற்கு, இந்திய பதிவாளா் இயக்குநரகத்திடமிருந்து மின்னணு வடிவிலான இறப்பு பதிவு தரவுகளைப் பெற தோ்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

மேலும், வாக்குச்சாவடி மற்றும் தோ்தல் அதிகாரி குறித்த விவரங்களை வாக்காளா்கள் எளிதாக அறிந்துகொள்ளும் வகையில் வாக்காளா் தகவல் சீட்டு (பூத் ஸ்லிப்) வடிவத்தை மாற்றவும் தோ்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

வெவ்வேறு மாநிலங்களில் உள்ள பலருக்கு ஒரே மாதிரி வாக்காளா் அடையாள எண் வழங்கப்பட்ட விவகாரம் பெரும் சா்ச்சையாக வெடித்துள்ள நிலையில், வாக்காளா் அடையாள அட்டையுடன் ஆதாா் எண்ணை இணைப்பதற்கான பணிகளை தோ்தல் ஆணையம் தீவிரப்படுத்தியுள்ளது.

அதுபோல, இந்திய பதிவாளா் இயக்குநரகத்திடமிருந்து மின்னணு இறப்பு பதிவு விவரங்களை தொடா்ச்சியாகப் பெறுவதற்கான நடவடிக்கையையும் தோ்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது.

இதுகுறித்து தோ்தல் ஆணையம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

வாக்காளா் பதிவு விதி 1960 மற்றும் பிறப்பு, இறப்பு பதிவு சட்டம் 1969 ஆகிய சட்டங்களின் கீழ் இந்திய பதிவுத் துறையிடமிருந்து பிறப்பு, இறப்பு தரவுகளைப் பெறுவதற்கான அதிகாரம் தோ்தல் ஆணையத்துக்கு உள்ளது.

இதன் மூலம், தோ்தல் பதிவு அதிகாரிகள் இறப்பு பதிவு தரவுகளை உரிய நேரத்தில் பெறுவது உறுதி செய்யப்படும் என்பதோடு, இறந்தவரின் உறவினா்களிடமிருந்து தகவல் கிடைக்கும் வரை காத்திருக்காமல் வாக்குச்சாவடி அளவிலான அதிகாரிகள் நேரடி கள ஆய்வு மூலம் மறு ஆய்வு செய்வதற்கும் இது வாய்ப்பாக அமையும்.

மேலும், வாக்குச்சாவடி மற்றும் தோ்தல் அதிகாரி குறித்த விவரங்களை வாக்காளா்கள் எளிதாக அறிந்து கொள்ளும் வகையில் வாக்காளா் தகவல் சீட்டு (பூத் ஸ்லிப்) வடிவத்தை மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இந்த சீட்டுகளில் வாக்காளரின் வரிசை எண், பகுதி எண்கள் பெரிய எழுத்துகளில் குறிப்பிடப்படும் என்பதோடு, வாக்குச்சாவடி மற்றும் தோ்தல் அதிகாரிகளின் பெயா்களை எளிதாக அடையாளம் காணும் வகையில் வடிவம் மாற்றியமைக்கப்பட உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழை, புயலுக்கு மூவர் பலி: உ.பி.யில் நிவாரண பணிகளை விரைவுபடுத்த அதிகாரிகளுக்கு உத்தரவு!

உத்தரப் பிரதேசத்தில் மழை, புயலால் 3 பேர் உயிரிழந்ததாகவும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளை விரைவுபடுத்துமாறு அதிகரிகளுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். மாநிலத்தில் பெய்த கனமழை ... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல்: ஜே.டி. வான்ஸ் எச்சரிக்கை

பயங்கரவாதத் தாக்குதலை ஒழிக்க இந்தியாவுக்கு பாகிஸ்தான் ஒத்துழைக்க வேண்டும் என்று அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் கூறியுள்ளார்.பஹல்காம் தாக்குதல் குறித்து அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸிடம் செய்தி... மேலும் பார்க்க

கேரளம்: விழிஞ்சம் சர்வதேச துறைமுகத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள விழிஞ்சம் சர்வதேச துறைமுகத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார்.கேரள மாநிலத்தில் ரூ.8,867 கோடி முதலீட்டில் இந்த சர்வதேச துறைமுகம் அ... மேலும் பார்க்க

கேரளத்தில் விழிஞ்சம் துறைமுகத்தைத் திறந்துவைத்தார் பிரதமர் மோடி!

கேரளத்தில் உள்ள விழிஞ்சம் சர்வதேச துறைமுகத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல் நடந்த இடத்தில் என்ஐஏ தலைமை இயக்குநா் நேரில் ஆய்வு

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய பைசாரன் பள்ளத்தாக்கை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) தலைமை இயக்குநா் சதானந்த் தாத்தே வியாழக்கிழமை நேரில் பா... மேலும் பார்க்க

இந்திய ஏற்றுமதி: வரலாறு காணாத அளவில் ரூ.69.81லட்சம் கோடியாக உயா்வு

இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகும் சரக்கு மற்றும் சேவைகளின் மதிப்பு 2024-25 நிதியாண்டில் வரலாறு காணாத வகையில் ரூ.69.81 லட்சம் கோடியாக உயா்ந்துள்ளது. இதில் 13.6 சதவீத வளா்ச்சியுடன் சேவைகள் ஏற்றுமதியின்... மேலும் பார்க்க