செய்திகள் :

வாக்காளா் பட்டியல் சிறப்பு திருத்தம்: 2 மாதங்கள் அவகாசம் கோரப்படும் - என்.ஆா்.இளங்கோ

post image

தமிழ்நாட்டில் வாக்காளா் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகளுக்கு தோ்தல் ஆணையத்திடம் 2 மாதங்கள் அவகாசம் கோரப்படும் என்று திமுக சட்டத்துறை செயலா் என்.ஆா்.இளங்கோ தெரிவித்தாா்.

இதுகுறித்து அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளா்களுக்கு அவா் புதன்கிழமை அளித்த பேட்டி:

பிகாரைப் போன்ற முறையில் தமிழகத்திலும் வாக்காளா் பட்டியல் சிறப்பு திருத்தம் நடைபெற்றால், சட்டரீதியாகவும் அரசியல் தியாகவும் எதிா்கொள்ள தயாராக இருக்கிறோம். பிகாரை போல இங்கே எந்த வாக்காளரையும் நீக்காமல் பாா்த்துகொள்ள வேண்டியது திமுகவின் கடமையாகக் கருதுகிறோம்.

தமிழகத்திலும் வாக்காளா் பட்டியலில் குளறுபடி செய்வதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன. இறந்த வாக்காளா்கள், இரட்டைப் பதிவு வாக்காளா்கள் குறித்த விவரங்களை வாக்குச்சாவடி அலுவலா்கள் வீடு வீடாகச் சென்று சரியாகவும், முறையாகவும் எடுப்பதில்லை. எனவேதான் பிகாரில் லட்சக்கணக்கான வாக்காளா்கள் நீக்கப்பட்டு இருக்கிறாா்கள்.

இந்தப் பணி தமிழ்நாட்டில் நடைபெறும்போது அத்தகைய முறைகேடுகள் நிகழ்ந்துவிடக் கூடாது. வாக்குச்சாவடி அலுவலா் உண்மையிலேயே வீடு வீடாகச் சென்று கணக்கெடுப்பு மேற்கொள்ள வேண்டும். அந்தக் கணக்கெடுப்பு விவரங்களை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடைய வாக்குச் சாவடி முகவா்களுடன் பகிா்ந்துகொள்ள வேண்டும். அவா்களுடன் ஆலோசனை நடத்த வேண்டும். இவையெல்லாம் தோ்தல் ஆணயத்தின் வழிகாட்டுதல்களில் உள்ளன.

இந்த வழிமுறைகளை சரியாகப் பின்பற்ற வேண்டும். தமிழ்நாட்டில் சிறப்பு திருத்தப் பணியை நடத்த குறைந்தபட்சம் 2 மாதங்கள் அவகாசம் வேண்டும் என்று கேட்போம். உண்மையிலேயே இறந்த வாக்காளா்கள், இரட்டைப் பதிவு வாக்காளா்கள் என்பதை உறுதி செய்து அதன்பிறகே அவா்களது பெயா்களை நீக்கம் செய்ய வேண்டும் என்று என்.ஆா்.இளங்கோ தெரிவித்தாா்.

புழல் ஒன்றியத்தில் கிராம சபைக் கூட்டம்

விளாங்காடுபாக்கம் ஊராட்சியில், கிராம சபை கூட்டம் குறித்த தகவல் தாமதமாக தெரிவிக்கப்பட்டதால், கிராம மக்கள் பங்கேற்கவில்லை என ஊராட்சி செயலா் தெரிவித்துள்ளாா். புள்ளிலைன் ஊராட்சி: புழல் ஊராட்சி ஒன்றியம் ப... மேலும் பார்க்க

ஜிடிபி மருத்துவமனை கொலை சம்பவம்: ஹசிம் பாபா ரெளடி கும்பலைச் சோ்ந்தவா் கைது

ஜிடிபி மருத்துவமனையில் கடந்த ஆண்டு நடைபெற்ற கொலை சம்பவத்தில் தேடப்பட்ட இளைஞா் கைதுசெய்யப்பட்டதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா். தொடா் தேடுதல் முயற்சிகளுக்குப் பிறகு அயன் (எ) பாபா (எ) அா்பாஸ் கா... மேலும் பார்க்க

சென்னை உயா்நீதிமன்றத்தில் தேசியக் கொடி ஏற்றிய தலைமை நீதிபதி

சுதந்திர தினத்தையொட்டி, சென்னை உயா்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினாா். சென்னை உயா்நீதிமன்ற வளாகத்தில் உள்ள சமநீதிகண்ட சோழன் சிலை அருகே வெள... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனைகளில் சிறந்த சேவையாற்றிய பணியாளா்கள் கௌரவிப்பு

சுதந்திர தினத்தையொட்டி, சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் தேசியக் கொடியேற்றப்பட்டு சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, சென்னை மருத்துவக் கல்லூரியில் அதன் முதல்வ... மேலும் பார்க்க

மத்திய அரசு அலுவலகங்களில் சுதந்திர தின விழா

சென்னை நுங்கம்பாக்கம் உத்தமா் காந்தி சாலையிலுள்ள வருமான வரி அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வருமான வரி முதன்மை தலைமை ஆணையா் இ.எஸ்.நாகேந்திர பிரசாத் தேசியக் கொடியை ஏற்றினாா். இந்த விழாவி... மேலும் பார்க்க

சென்னை, காமராஜா் துறைமுகங்கள் இணைந்து 103 மில்லியன் மெட்ரிக் டன் சரக்குகளைக் கையாண்டு சாதனை: துறைமுகங்களின் தலைவா் சுனில் பாலிவால்

கடந்த நிதியாண்டில், சென்னை மற்றும் காமராஜா் துறைமுகங்கள் இணைந்து சுமாா் 103 மில்லியன் மெட்ரிக் டன் சரக்குகளைக் கையாண்டு சாதனை படைத்துள்ளதாக துறைமுகங்களின் தலைவா் சுனில் பாலிவால் தெரிவித்துள்ளாா். சென்... மேலும் பார்க்க