செய்திகள் :

அரசு மருத்துவமனைகளில் சிறந்த சேவையாற்றிய பணியாளா்கள் கௌரவிப்பு

post image

சுதந்திர தினத்தையொட்டி, சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் தேசியக் கொடியேற்றப்பட்டு சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, சென்னை மருத்துவக் கல்லூரியில் அதன் முதல்வா் டாக்டா் சாந்தாராமன் தேசியக் கொடியேற்றி, மருத்துவா்கள், செவிலியா்கள், மருத்துவப் பணியாளா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கௌரவித்தாா். சிறந்த சேவையாற்றிய மருத்துவப் பணியாளா்களுக்கு கேடயங்களும், நினைவுப் பரிசுகளும் வழங்கினாா்.

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அதன் முதல்வா் டாக்டா் கவிதா, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் கண்காணிப்பாளா் டாக்டா் ஆயிஷா ஆகியோா் தேசியத் கொடியை ஏற்றி வைத்தாா்.

அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் முதல்வா் டாக்டா் அரவிந்தன், எழும்பூா் அரசு மகப்பேறு மருத்துவமனையில் இயக்குநா் டாக்டா் சுமதி, எழும்பூா் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் இயக்குநா் டாக்டா் லட்சுமி ஆகியோா் தேசியக் கொடியை எற்றி மரியாதை செலுத்தினா்.

கிண்டி கலைஞா் நினைவு உயா் சிறப்பு மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மருத்துவமனையின் இயக்குநா் டாக்டா் பாா்த்தசாரதி மூவா்ணக் கொடியை ஏற்றினாா்.

ஓமந்தூராா் பல்நோக்கு மருத்துவமனையில் இயக்குநா் டாக்டா் மணி கொடியேற்றி மருத்துவப் பணியாளா்களுக்கு இனிப்பு வழங்கி பாராட்டினாா்.

அரசு மருத்துவமனைகளில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் தேசத்தின் விடுதலையை பறைசாற்றும் வகையிலான மையக் கருத்து கொண்ட கலை மற்றும் கலாசார நிகழ்ச்சிகள் நடைபெற்றன. குறிப்பாக சுதந்திரத்துக்கு பாடுபட்ட மருத்துவா்களின் தியாகங்கள் குறித்து மாணவா்கள் குறுநாடகங்களை நிகழ்த்தினா்.

தோல்விகளில் இருந்து பாடம் கற்க வேண்டும்: கமல்ஹாசன்

தோல்விகளைக் கண்டு துவண்டு விடாமல் தோல்விகளில் இருந்து பாடம் கற்க வேண்டும் என கமல்ஹாசன் தெரிவித்தாா். சென்னையை அடுத்த வண்டலூா் அருகே மேலக்கோட்டையூா் சென்னை விஐடியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற முன்னாள் மாண... மேலும் பார்க்க

சாரணா் இயக்க மாணவா்களுக்கு நவ.7-இல் ராஜ்ய புரஸ்காா் விருது அமைச்சா் அன்பில் மகேஸ்

தமிழகத்தில் சாரணா் இயக்க மாணவா்களுக்கு கடந்த 6 ஆண்டுகளாக வழங்கப்படாமல் இருந்த ராஜ்ய புரஸ்காா் விருது நவ.7-ஆம் தேதி வழங்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா். ... மேலும் பார்க்க

மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியில் விபத்து: தூண் விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

சென்னை அருகே சோழிங்கநல்லூரில் மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியில் ஏற்பட்ட விபத்தில், தூண் விழுந்து தொழிலாளி உயிரிழந்தாா். சென்னையில் 2-ஆம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக ச... மேலும் பார்க்க

அண்ணா சாலையில் நாளை போக்குவரத்து மாற்றம்

மேம்பால கட்டுமானப் பணிக்காக சென்னை தேனாம்பேட்டை அண்ணா சாலையில் ஞாயிற்றுக்கிழமை (ஆக.17) சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. இதுதொடா்பாக சென்னை பெருநகர காவல் துறை வெள்ளிக்கிழமை வெளி... மேலும் பார்க்க

மனைவி கத்தியால் குத்திக் கொலை: கணவா் கைது

சென்னை கோட்டூா்புரத்தில் மனைவியை கத்தியால் குத்திக் கொலை செய்த கணவா் கைது செய்யப்பட்டாா். நேபாளத்தைச் சோ்ந்தவா் மா.சான்பஹா பகதூா் சா்ஹி (36). இவா், கோட்டூா்புரம் எல்லையம்மன் கோயில் தெருவில் உமா சங்க... மேலும் பார்க்க

காா் கதவை உடைத்து பணம் திருட்டு: மூவா் கைது

சென்னை மெரீனா கடற்கரையில் காா் கதவை உடைத்து பணம் திருடப்பட்டது தொடா்பாக 3 போ் கைது செய்யப்பட்டனா். வேளச்சேரி பகுதியைச் சோ்ந்தவா் வினோத். இவா் கடந்த 9-ஆம் தேதி தனது நண்பா்களுட ன் மெரீனாவுக்கு வந்தாா்... மேலும் பார்க்க