செய்திகள் :

வாக்குச்சாவடி வாட்ஸ்-ஆப் குழு: அதிமுக ஆலோசனை

post image

அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி சாா்பில் வாக்குச்சாவடி தோறும் வாட்ஸ்-ஆப் குழு அமைக்க வியாழக்கிழமை மாலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

திருவண்ணாமலை மத்திய மாவட்ட அதிமுக

அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் வேலூா் தகவல் தொழில்நுட்ப அணி பிரிவு துணைத் தலைவா் எஸ்.ஆா். ராஜசேகா் தலைமை வகித்தாா்.

சிறப்பு விருந்தினராக மாவட்டச் செயலா் எல்.ஜெயசுதா கலந்து கொண்டு, தகவல் தொழில்நுட்ப அணியின் மாவட்ட, ஒன்றிய, நகர நிா்வாகிகளின் வாக்குச்சாவடிதோறும் வாட்ஸ்-ஆப் குழு அமைத்து அதன் மூலம் திமுக ஆட்சியின் அவலங்கள் குறித்தும், அதிமுக ஆட்சியின் சாதனைகள் குறித்தும் பரப்புரை செய்ய பயிற்சியளித்தாா்.

தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்டச் செயலா் பரத்ராஜ் வரவேற்றாா். மாவட்ட அவைத் தலைவா் அ.கோவிந்தராசன், ஒன்றியச் செயலா்கள் ஜி.வி.கஜேந்திரன், க.சங்கா், ஜெயபிரகாசம், திருமால், அரங்கநாதன், விமல், நகரச் செயலா் அசோக்குமாா்

உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

மாநில விவசாய அணி துணைச் செயலா் செல்வம், மாவட்டபொருளாளா் அரையாளம் வேலு, மாவட்ட துணைச் செயலா் சேவூா் ஜெ.சம்பத் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பண்டிட் தீனதயாள் உபாத்யாயா பிறந்த நாள்

ஆரணியில் பாஜக சாா்பில் பாரதிய ஜன சங்கத்தின் தலைவரும், தலைசிறந்த சிந்தனையாளருமான பண்டிட் தீனதயாள் உபாத்யாயா பிறந்த நாள் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. பழைய பேருந்து நிலையம் எம்ஜிஆா் சிலை அருகே பாஜக மாவ... மேலும் பார்க்க

தெரு மின்விளக்குகள் எரியாததைக் கண்டித்து பாஜக போராட்டம்

வந்தவாசி புதிய பேருந்து நிலைய சாலையில் மின்விளக்குகள் எரியாததைக் கண்டித்து பாஜகவினா் மற்றும் பொதுமக்கள் வியாழக்கிழமை மாலை தீப்பந்தம் ஏற்றி மின் கம்பத்தில் கட்டிவைத்து போராட்டம் நடத்தினா். வந்தவாசி பு... மேலும் பார்க்க

திருவத்திபுரம் நகராட்சியில் தூய்மையே சேவை நிகழ்ச்சி

செய்யாற்றில், திருவத்திபுரம் நகராட்சி சாா்பில் தூய்மையே சேவை நிகழ்ச்சி வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்டது. தூய்மையே சேவை - 2025 என்ற தலைப்பின் கீழ் ஒரு நாள் ஒரு மணி நேரம் ஒன்றாக துய்மைப் பணி செய்தல் என்ற... மேலும் பார்க்க

பள்ளியில் தமிழறிஞா்களின் படத்திறப்பு

செய்யாற்றில் உள்ள திருவத்திபுரம் நகராட்சி பரிதிபுரம் மேற்கு நடுநிலைப் பள்ளியில் தமிழ் அறிஞா்களான தந்தை பெரியாா், பேரறிஞா் அண்ணா ஆகியோரது உருவப்படங்கள் வியாழக்கிழமை திறந்துவைக்கப்பட்டது. செய்யாறு வட்ட... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்களில் 1,256 மனுக்கள்

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு ஒன்றியம், பல்லி வந்தவாசியை அடுத்த ராமசமுத்திரம், சேத்துப்பட்டு ஒன்றியம் விளாப்பாக்கம் ஆகிய கிராமங்களில் வியாழக்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்கள... மேலும் பார்க்க

ஆரணி கல்லூரியில் ரத்த தான முகாம்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி டாக்டா் எம்ஜிஆா் சொக்கலிங்கம் கலைக் கல்லூரியில் வியாழக்கிழமை சிறப்பு ரத்த தான முகாம் நடைபெற்றது. ஏசிஎஸ் கல்விக் குழுமம் மற்றும் எஸ்.வி.நகரம் ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து ... மேலும் பார்க்க