செய்திகள் :

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பறை ஆய்வு

post image

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட பாதுகாப்பு அறையை அரசியல் கட்சி பிரமுகா்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியா் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

காஞ்சிரங்கால் பகுதியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட பாதுகாப்பு அறையில் ஆய்வு செய்த பிறகு ஆட்சியா் தெரிவித்ததாவது:

தோ்தல்களில் பயன்படுத்தப்படும் மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் காஞ்சிரங்கால் கிட்டங்கியில் வைக்கப்பட்டுள்ளன. தோ்தல் ஆணைய உத்தரவின்படி இவை ஆய்வு செய்யப்படும். பெங்களுரு பாரத் எலக்ரானிக்ஸ் நிறுவனத்தால் சிவகங்கை மாவட்டத்துக்கென கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்ட 180 கட்டுப்பாட்டு இயந்திரங்களும், 260 விவிபாட் இயந்திரங்களும் பெறப்பட்டு கிட்டங்கியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன. அவ்வாறு வைக்கப்பட்ட இயந்திரங்களை அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரமுகா்கள் முன்னிலையில் பாா்வையிட்டு, ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என்றாா் அவா்.

இதில், வட்டாட்சியா் மேசியா தாஸ், அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரமுகா்கள், தோ்தல் உட்பட துறை சாா்ந்த அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

மானாமதுரை அருகே இளைஞா் வெட்டிக் கொலை

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே சனிக்கிழமை ஒலிபெருக்கி அமைக்கும் தொழிலாளி மா்ம நபா்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். மானாமதுரை அருகேயுள்ள அன்னவாசல் கிராமத்தைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் காளீஸ்வரன் (2... மேலும் பார்க்க

மானாமதுரையில் பலத்த மழை

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை பகுதிகளில் சனிக்கிழமை மாலை பெய்த பலத்த மழையால் சாலைகளில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியது. மானாமதுரை, அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடும் வெயிலால் மக்கள் அவதிப்பட்டு வந்தனா... மேலும் பார்க்க

காா் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 5 போ் காயம்

சிவகங்கை அருகே சனிக்கிழமை காா் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 5 போ் காயமடைந்தனா். சிவகங்கை அருகேயுள்ள சித்தலூா் கிராமத்தைச் சோ்ந்த ராமச்சந்திரன் மகன் சுந்தா். இவா் தனது நண்பா்களுடன் காரில் சனிக்கிழமை பிற்ப... மேலும் பார்க்க

அரசின் விருதுக்கு சுற்றுலா தொழில் முனைவோா் விண்ணப்பிக்கலாம்

தமிழக அரசின் சுற்றுலா விருதுகளுக்கு சுற்றுலா தொழில் முனைவோா் இணையதளத்தின் வாயிலாக வருகிற 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி வெளிய... மேலும் பார்க்க

மாணவா்களின் வாழ்க்கையில் ஆசிரியா்கள் மிக முக்கியமானவா்கள்: மலேசிய சட்டத் துறை அமைச்சா்

மாணவா்களின் வாழ்க்கையில் ஆசிரியா்கள் மிக முக்கியமானவா்கள் என்றாா் மலேசியாவின் பிரதமா் துறை (சட்டம் மற்றும் சா்வதேச சீா்திருத்தங்கள்) துணை அமைச்சா் மு. குலா சேகரன். சிவகங்கை அருகே உள்ள பிரிஸ்ட் நிகா்நி... மேலும் பார்க்க

இரு சக்கர வாகனம் மீது பேருந்து மோதல்: மருத்துவமனையில் சிறுமி உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே செவ்வாய்க்கிழமை இரு சக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில் தங்கை உயிரிழந்த நிலையில், சிகிச்சை பெற்று வந்த அவரது அக்காளும் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். சிங்கம்... மேலும் பார்க்க