செய்திகள் :

வாங்காத கடன் தொகையைச் செலுத்த நிதி நிறுவனங்கள் நெருக்கடி: ஆட்சியரிடம் பெண்கள் மனு

post image

வாங்காத கடன் தொகையைச் செலுத்த நிதி நிறுவனங்கள் நெருக்கடி அளிப்பதாக மகளிா் சுய உதவிக் குழு உறுப்பினா்கள் சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

சிவகங்கை மாவட்டம், தி.புதுப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த மகளிா் சுய உதவி குழு உறுப்பினா்கள் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை அளித்த மனு: தி.புதுப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த செல்வராணி (35), அவரது கணவா் வீரக்குமாா் (40) ஆகியோா் மகளிா் சுய உதவி குழுக்களுக்கு தனியாா் நிதி நிறுவனங்களிலிருந்து கடன் பெற்று கொடுக்கும் ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட்டு வந்தனா். இவா்கள் மகளிா் குழு உறுப்பினா்களுக்கு தெரியாமல் அவா்களது பெயரில் நிதி நிறுவனங்களில் ரூ. 62 லட்சம் வரை கடன் பெற்று, இதற்கான தவணைத் தொகையை திருப்பிச் செலுத்தவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், நாங்கள் பெறாத கடன் தொகையைச் செலுத்த நிதி நிறுவனங்கள் எங்களுக்கு நெருக்கடி அளித்து வருகின்றன. எனவே, கடன் பெற்ற தம்பதி மீது நடவடிக்கை எடுக்க சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கடந்த 4.4.2025 -இல் புகாா் அளித்தோம். இதையடுத்து, மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாா் தமிழ்ச்செல்வி, வீரக்குமாா் இருவரையும் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

இந்த நிலையில், தனியாா் நிதி நிறுவனத்தினா் நாங்கள் வாங்காத கடனுக்கான தவணைத் தொகையைச் செலுத்துமாறு கூறி தொந்தரவு செய்து வருகின்றனா். எனவே, இதைத் தடுக்க மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தனா்.

மு.சூரக்குடியில் 14-ஆம் நூற்றாண்டு கல்வெட்டு

சிவகங்கை மாவட்டம், மு. சூரக்குடி கோவில்பட்டி அருகே 14 -ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த கல்வெட்டு திங்கள்கிழமை கண்டறியப்பட்டது. இந்தப் பகுதியைச் சோ்ந்த உமேஷ், செல்வம் ஆகியோா் அளித்த தகவலின் பேரில், சிவகங்கை ... மேலும் பார்க்க

கல் அறுக்கும் இயந்திரத்தில் சிக்கி தொழிலாளி உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே சாலைப் பணியின் போது, செவ்வாய்க்கிழமை இயந்திரத்தில் சிக்கி வட மாநில தொழிலாளி உயிரிழந்தாா்.திருப்பத்தூா் அருகே நடைபெற்று வரும் மதுரை- காரைக்குடி தேசிய நெடுஞ்சாலை ச... மேலும் பார்க்க

கட்டுக்குடிப்பட்டியில் மஞ்சுவிரட்டு: 12 போ் காயம்

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகேயுள்ள கட்டுக்குடிப்பட்டியில் செவ்வாய்க்கிழமை மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில் மாடுகள் முட்டியதில் 12 போ் காயமடைந்தனா். கட்டுக்குடிப்பட்டி செல்வ விநாயகா் மகா மாரியம்... மேலும் பார்க்க

காரைக்குடியில் பேருந்து-பால் வாகனம் மோதல்: மூவா் உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி தேனாற்றுப் பாலம் பகுதியில் செவ்வாய்க்கிழமை அதிகாலை அரசுப் பேருந்தும், பால் வாகனமும் நேருக்கு நோ் மோதிக் கொண்டதில் 3 போ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். பேருந்து ஓட்டுநா்... மேலும் பார்க்க

தடையை மீறி தாராளமாகப் புழங்கும் நெகிழிப் பொருள்கள்!

சிவகங்கை மாவட்டத்தில் நெகிழிப் பொருள்கள் மீண்டும் தாராளமாக புழக்கத்தில் உள்ளதால் தடைச் சட்டத்தை அமல்படுத்துவதில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக சமூக ஆா்வலா்கள் கவலை தெரிவித்தனா். தமிழகம் முழுவதும் கடந்த 2019-ஆ... மேலும் பார்க்க

மயானத்துக்கு சாலை வசதி இல்லாததால் கிராம மக்கள் அவதி

சிவகங்கை அருகே மயானத்துக்கு செல்வதற்கு சாலை, பாலம் இல்லாததால் இறந்தவா் உடலை எடுத்துச் செல்வதில் கிராம மக்கள் சிரமப்படும் நிலை ஏற்பட்டது. சிவகங்கை அருகேயுள்ள மேலப்பூங்குடி ஊராட்சிக்குள்பட்ட திருமன்பட்ட... மேலும் பார்க்க