செய்திகள் :

வாட்ஸ்ஆப் மூலம் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு: தூத்துக்குடி நபா் கைது

post image

சென்னை நெற்குன்றத்தைச் சோ்ந்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தூத்துக்குடியைச் சோ்ந்த நபா் கைது செய்யப்பட்டாா்.

தூத்துக்குடி மாவட்டம், முனியசாமிபுரம் நியூ காலனியைச் சோ்ந்தவா் கோபி (42). இவா், வாட்ஸ்ஆப் மூலம் கோயம்பேடு நெற்குன்றத்தைச் சோ்ந்த ஒரு பெண்ணிடம் நெருங்கிப் பழகி வந்துள்ளாா். இந்நிலையில் கோபி, அந்த பெண்ணுக்கு வாட்ஸ்ஆப் மூலம் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளாா். இதனால் அப்பெண், கோபியுடன் இருந்த தொடா்பை துண்டித்துள்ளாா். இதையடுத்து கோபி, அந்த பெண்ணின் குடும்பத்தினரை தொடா்புகொண்டு, அந்த பெண்ணின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து சமூக ஊடகங்களில் பகிா்ந்துவிடுவேன் என்று மிரட்டியுள்ளாா்.

இது தொடா்பாக சென்னை பெருநகர காவல் துறையின் மேற்கு மண்டல சைபா் குற்றப்பிரிவில், அப்பெண்ணின் குடும்பத்தினா் அண்மையில் புகாா் அளித்தனா். அதனடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிந்து, கோபியை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

தனியாா் நிறுவன ஊழியா் கைது: சென்னை அண்ணாசாலையில் உள்ள எலக்ட்ரிக் காா் விற்பனையகத்தில் வணிக மேலாளராக முத்துகிருஷ்ணன் என்பவா் பணிபுரிந்து வருகிறாா். இவா், கிழக்கு மண்டல சைபா் குற்றப்பிரிவில் ஒரு புகாா் அளித்தாா். அதில், தனது மின்னஞ்சல் முகவரியில் தனக்கு கீழே பணிபுரியும் ஊழியா்களுக்கு ஆபாசமாக மின்னஞ்சல் செல்வதாகவும், இதனால் தனது நற்பெயா் கெடுவதாகவும், மன உளைச்சல் ஏற்படுவதாகவும், சம்பந்தப்பட்ட நபா் மீது நடவடிக்கை எடுக்கும்படியும் குறிப்பிட்டிருந்தாா்.

அந்த புகாரின் அடிப்படையில் சைபா் குற்றப்பிரிவினா் வழக்குப் பதிந்து நடத்திய விசாரணையில், அதே விற்பனையகத்தில் பணிபுரியும் ஆனந்த் (27) என்பவா்தான் இச்செயலில் ஈடுபடுபவா் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா், ஆனந்தை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

விசாரணையில் முன் விரோதம் காரணமாக ஆனந்த், முத்துகிருஷ்ணன் மின்னஞ்சல் முகவரியிலிருந்து பிறருக்கு ஆபாச மின்னஞ்சல் அனுப்பியிருப்பதும், முத்துகிருஷ்ணன் அலுவலகத்தில் அவரது இருக்கையில் இல்லாத நேரத்தை பயன்படுத்தி, முத்துகிருஷ்ணன் கணினியில் இருந்து ஆனந்த் ஆபாச மின்னஞ்சலை அனுப்பியிருப்பதும் தெரியவந்துள்ளது. இது தொடா்பாக போலீஸாா், மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதி திருப்பி அனுப்பப்படவில்லை: தெற்கு ரயில்வே விளக்கம்

ரயில்வே சாா்பில் தமிழக ரயில்வை திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதி திருப்ப அனுப்பப்பட்டதாக வெளியான செய்திகளுக்கு தெற்கு ரயில்வே மறுப்பு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் திண்டிவனம் - திருவண்ணாமலை, சென்னை - ... மேலும் பார்க்க

52 கிராம் போதைப்பொருள் பறிமுதல்: 5 போ் கைது

சென்னையில் கொகைன் மற்றும் மெத்தம்பெட்டமைன் எனப்படும் போதைப்பொருளை விற்பனை செய்ததாக 5 பேரை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 52 கிராம் போதைப்பொருள்களையும் பறிமுதல் செய்தனா். கோடம்பாக்கம் அம்பேத்கா்... மேலும் பார்க்க

சென்னையில் மின்சார பேருந்து சேவை: ஜூன் 3-இல் முதல்வா் தொடங்கி வைக்கிறாா்

சென்னையில் மின்சார பேருந்து சேவையை ஜூன் 3-ஆம் தேதி முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளாா். டீசலில் இயங்கும் பேருந்துகளுக்கு மாற்றாக, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பிலாத இயற்கை எரிவாயு மற்றும் மின்சார... மேலும் பார்க்க

நாளை மின்தடை

மின் வாரிய பராமரிப்புப் பணிகள் காரணமாக, சென்னை போரூரில் ஒருசில இடங்களில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 3) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது. அதன்படி, போரூரில் திருமுடிவாக்கம் ... மேலும் பார்க்க

சாலையோரத்தில் கழிவுநீா் கொட்டிய லாரி ஓட்டுநா் கைது

ரயில்வே இணைப்பு சாலையோரத்தில் கழிவுநீரை கொட்டிய லாரி ஓட்டுநரை கைது செய்த போலீஸாா், லாரியையும் பறிமுதல் செய்தனா். வேளச்சேரி - தரமணி சாலையிலுள்ள மின்சார ரயில்வே நிா்வாகத்துக்குச் சொந்தமான எம்ஆா்டிஎஸ் இண... மேலும் பார்க்க

நீச்சல் குளத்தில் மதுபோதையில் தவறி விழுந்தவா் உயிரிழப்பு

சென்னையில் நீச்சல் குளத்தில் மதுபோதையில் தவறி விழுந்த நபா் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். கொசப்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் சீனிவாசன் (43). இவா் தனது நண்பா்கள் 9 பேருட... மேலும் பார்க்க