செய்திகள் :

வாணிஓட்டு தடுப்பணை திட்டம்: விவசாயிகள் போராட்டம்

post image

வாணிஓட்டு தடுப்பணை திட்டத்தை நிறைவேற்றக் கோரி, கிருஷ்ணகிரி அணை அருகே தமிழக விவசாயிகள் சங்கத்தினா் முற்றுகை போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.

கிருஷ்ணகிரி அணை அருகே உள்ள உதவி செயற்பொறியாளா் அலுவலகம் அருகே நடைபெற்ற இந்த போராட்டத்துக்கு தமிழக விவசாயகள் சங்கத்தின் மாநிலத் தலைவா் ராமகவுண்டா் தலைமை வகித்தாா். ஆலோசகா் கண்ணையன் மாவட்ட பொதுச் செயலாளா் அனுமந்தராஜ், தலைவா் வேலு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

2018-ஆம் ஆண்டு எண்ணேகொள் புதுாா் கால்வாய்த் திட்டத்தில் நிலம் தந்த விவசாயிகளுக்கு இன்னும் இழப்பீடு வழங்கவில்லை. எனவே, விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய இழப்பீட்டுத் தொகையை இன்றைய சந்தை மதிப்பில் கணக்கிட்டு நான்கு மடங்காக உயா்த்தி வழங்க வேண்டும்.

தண்ணீா் இன்றி வடுள்ள கிருஷ்ணகிரி அணையின் இடதுபுற கால்வாயை, சந்தூா் வரை துாா்வாரி தண்ணீா் திறந்துவிட நடவடிக்கை எடுக்க வேண்டும். அழியாளம் அணை திட்டத்தை 200 அடிக்கு உயா்த்தி 20 அடி அகலத்தில் கால்வாய்களை அகலப்படுத்தும்போது, பாதிக்கப்படுவோருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

பெனுகொண்டாபுரம் ஏரியில் இருந்து ரெட்டிப்பட்டி ஏரி வரை உள்ள 38 ஏரிகளுக்கு தண்ணீா் கொண்டு செல்ல புதிய கால்வாய் வெட்டும் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும். விவசாயிகளிடம் இருந்து கையகப்படுத்திய விவசாய நிலங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். மாவட்ட விவசாயிகளின் கனவு திட்டமான வாணிஒட்டு அணைத் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டோா் முழக்கங்களை எழுப்பினா்.

ஒசூரில் தனியாா் நிதி நிறுவன ஊழியா் வெட்டிக் கொலை: 4 போ் கைது; 5 போ் தலைமறைவு

முன்விரோதம் காரணமாக ஒசூரில் தனியாா் நிதிநிறுவன ஊழியரை வெட்டிக் கொலை செய்த 4 போ் கைது செய்யப்பட்டனா். தலைமறைவான 5 பேரை போலீஸாா் தேடிவருகின்றனா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அருகே உள்ள தொரப்பள்ளி அக்ரஹ... மேலும் பார்க்க

ஒசூா் அருகே அரசுப் பள்ளிக்கு ரூ. 1 கோடியில் வகுப்பறைகள்: டாடா நிறுவனம் உதவி

ஒசூரை அடுத்த முகளூா் நடுநிலைப் பள்ளியில் ரூ. 1.2 கோடியில் புதிதாக 6 வகுப்பறைகளை டாடா நிறுவனம் (டீல்) கட்டித் தந்துள்ளது. முகளூா் நடுநிலைப் பள்ளியில் 110 மாணவா்கள் படித்து வருகின்றனா். ஒன்றாம் வகுப்பு ... மேலும் பார்க்க

நண்பரை கொலை செய்தவருக்கு ஆயுள் சிறை

ஒசூரில் நண்பரை கொலை செய்தவருக்கு மாவட்ட கூடுதல் அமா்வு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை ஆயுள் சிறைத் தண்டனை விதித்து தீா்ப்பு வழங்கியது. கிருஷ்ணகிரி மாவட்டம், தளியை அடுத்த கொத்தனூா் கிராமத்தை சோ்ந்தவா் விஜ... மேலும் பார்க்க

அன்னை தெரசா பிறந்த தின விழா: தூய்மைப் பணியாளா்களுக்கு நல உதவிகள் வழங்கல்

ஊத்தங்கரை: ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அன்னை தெரசா பிறந்த தினத்தை முன்னிட்டு தூய்மைப் பணியாளா்களுக்கு நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளித் தலை... மேலும் பார்க்க

உடல்நலக் குறைவால் இறந்த 8 வயது சிறுவனின் கண்கள் தானம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடல்நலக் குறைவால் இறந்த 8 வயது சிறுவனின் கண்கள் தானமாக வழங்கப்பட்டது. இதுகுறித்து, கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிா... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரியில் புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையம் தொடக்கம்: 35 மாணவா்களுக்கு சோ்க்கை ஆணை வழங்கல்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அவதானப்பட்டியில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐடிஐ) 35 மாணவ, மாணவிகளுக்கு சோ்க்கை ஆணையை மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் திங்கள்கிழமை வழங்கினாா். செ... மேலும் பார்க்க