செய்திகள் :

வாணியம்பாடி: நகராட்சிக் கழிவறையின் அவலநிலை... அவசரத்துக்கு அல்லாடும் மக்கள்!

post image

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நகரம், தோல் தொழிற்சாலைகள் நிறைந்த நெரிசல் மிகுந்த நகராட்சி ஆகும் . பெருகிவரும் மக்கள்தொகை மற்றும் வாகனங்களால் வாணியம்பாடி பேருந்து நிலையம் எப்போதும் நெரிசல் மிகுந்தே காணப்படும். இதற்கிடையே சென்னை - பெங்களூரு நெடுஞ்சாலை திட்டமிட்டபோது வாணியம்பாடி நகரை ஒட்டி புறவழிச்சாலை அமைக்கப்பட்டது. இந்த புறவழிச்சாலையில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் தினசரி கடந்து செல்கின்றன .

இந்த புறவழிச்சாலையின் இரு புறமும் வாணியம்பாடி நகராட்சி சார்பாக பயணியர் நிழற்கூடம் அமைக்கப்பட்டுள்ளது .

இதில் சென்னை மார்க்கமாக செல்லும் பேருந்துகள் நின்று செல்லவும்... பயணிகள் வசதிக்காகவும் அமைக்கப்பட்டுள்ள பயணியர் நிழற் கூடத்திற்கு, பெங்களூரு , ஓசூர் , சேலம் , தருமபுரி , திருப்பத்தூர் போன்ற நகரங்களிலிருந்து நூற்றுக்கணக்கான பேருந்துகள் சென்னை மற்றும் வேலூர் மார்க்கமாக தினசரி இந்த நிறுத்தத்தை கடந்து செல்கின்றன.

இந்த பயணியர் நிழற்கூடத்தை ஒட்டி பொது கழிவறை ஒன்று அமைப்பட்டுள்ளது. இந்த கழிவறையின் தற்போதைய நிலை எட்டி பார்க்கக்கூடமுடியாத அளவில் இருக்கிறது . பயன்பாட்டிற்கு வந்து பராமரிப்பு இல்லாமல் பழுதடைந்ததா அல்லது பயன்பாட்டிற்கு வராமலே பழுதடைந்ததா இந்த கழிவறை என்ற குழப்பம் தான் ஏற்படுகிறது.

உள்ளே நுழையமுடியாதவாறு குவிந்து கிடக்கும் குப்பைகளை தாண்டி உள்ளே எட்டி பார்த்தால் வாணியம்பாடி நகராட்சியில் சேகரிக்கப்படும் மொத்த குப்பைகளை இங்குதான் கொட்டுகிறார்களோ என்று எண்ணுமளவுக்கு குப்பைகள் குவிந்து கிடக்கிறது.

இந்த கழிவறையின் உள்ளே குவிந்துள்ள குப்பைகள் மக்கி போய் துர்நாற்றம் வீசுகிறது. இரவு நேரங்களில் மதுபிரியர்கள் மது அருந்திவிட்டு வீசி சென்றுள்ள ஏராளமான மது பாட்டில்கள் கிடக்கின்றன. இந்திய மற்றும் மேற்கத்திய பாணியில் அமைக்கப்பட்டுள்ள இரண்டு கழிவறைகளும் தண்ணீரை பார்த்து எத்தனை மாதங்கள் ஆனது என்று தெரியவில்லை.

தண்ணீர் இணைப்பு குழாய்கள் உடைந்தும் சில பாகங்கள் காணாமல் போயும் உள்ளது. மேற்கத்திய பாணியில் உள்ள கழிவறையில் பாதி காணாமலும் மீதி சிதிலமடைந்தும் உள்ளது. இங்கு வரும் பயணிகளுக்கு அவசர ஆத்திரத்திற்கு ஒதுங்க கூட அருகாமையில் எந்த கழிப்பறை வசதியும் இல்லை . இது குறித்து பேருந்திற்க்காக காத்திருந்த பெண் பயணிகள் சில பேரிடம் பேசினோம்.

"எங்களுக்கு தெரிந்து இந்த டாய்லெட்டை யாரும் யூஸ் பண்ண மாதிரி தெரியல. மது குடிக்கிறவங்க தண்ணி அடிக்கவும் இரவு நேரத்தில் தவறான செயல்களுக்கு பயன்படுத்தற மாதிரிதான் தெரியுது.. ஆண்களுக்கு பரவாயில்லை ..அவசரம்னா அந்த பக்கம் திறந்தவெளியில் ஒதுங்கிடறாங்க .. பெண்கள் நிலை தான் பாவம்" என்றனர்.

இது குறித்து வாணியம்பாடி நகராட்சி ஆணையர் முஸ்தபாவை தொடர்பு கொண்டு கேட்டோம். விவரங்களைச் சொன்னதும்... ``என்னது... அந்த கழிவறை பயன்பாட்டில் இல்லையா? " என்று வியப்பாக கேட்டார் . நாம் பதிவு செய்திருந்த சில புகைப்படங்களை ஆதாரமாக அனுப்பி வைத்தோம். ``ஃபீல்ட் விசிட் போயிட்டு உங்களுக்கு அப்டேட் செய்கிறேன்" என்றவர், உடனடி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார் .

'என்னை சுடுங்கள்; ஆனால், பாகிஸ்தானுக்கு மட்டும் அனுப்பாதீங்க' - கதறும் பெண்மணி; பின்னணி என்ன?

ஒடிசா பலசோர் மாவட்டத்தில் வாழ்ந்து வருகிறார் பாகிஸ்தானை சேர்ந்த 72-வயது பெண்மணி. இவரது அப்பா பீகாரை சேர்ந்தவர். பல்வேறு காரணங்களால் வங்காளதேசம் மற்றும் பாகிஸ்தானிற்கு அவர் இடம்பெயர்ந்துள்ளார். அவரது ... மேலும் பார்க்க

Pahalgam Attack: 'ஒருதலைபட்சமான, சட்டவிரோத நடவடிக்கை' - பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்த சீனா

கடந்த 22-ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதல் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை கிளப்பியது. இந்தத் தாக்குதலுக்கு பின்னால் பாகிஸ்தான் இருக்கலாம் என்று இந்தியா வலுவாக சந்தேகிக்க... மேலும் பார்க்க

Pahalgam Attack: ஷோயப் அக்தரின் சேனல் உட்பட 16 பாகிஸ்தான் யூடியூப் சேனல்களுக்கு தடை; காரணம் என்ன?

ஜம்மு & காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22-ம் தேதி, சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் கண்மூடித்தனமாகத் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்தத் தாக்குதலில் மொத்தம் 26 பேர் உயிரிழந்தனர்.இந்தச் சம்பவம் நா... மேலும் பார்க்க

`அகவிலைப்படி உயர்வு; திருமண முன்பணம் ரூ.5 லட்சம்’ - அரசு ஊழியர்களுக்கு வெளியான அறிவிப்புகள்

சட்டப்பேரவையில் இன்று( ஏப்ரல் 28) அரசு ஊழியர்களுக்கு பல்வேறு அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். அதன்படி, “அரசு ஊழியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வு 2025 ஜனவரி 1-ம் தேதியிலிருந்து வழங்க... மேலும் பார்க்க

மாஞ்சோலை : `அடுக்குமாடி வேண்டாம்; சமத்துவபுரம் வேண்டும்’ - தொழிலாளர்கள் வலியுறுத்துவது ஏன்?

மாஞ்சோலையிலிருந்து வெளியேற உத்தரவிடப்பட்டுள்ள தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள், மறுவாழ்வு திட்டம் குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், மதுரை மக்கள் கண்கானிப்பக செயல் இயக்குநர் ஹென்றி ... மேலும் பார்க்க

போரை நிறுத்தாத ரஷ்யா; உக்ரைனில் தொடரும் உயிர் பலிகள்! - என்ன நடந்தது?

'இதோ முடிந்துவிடும்', 'அதோ முடிந்துவிடும்' என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறி வந்த ரஷ்ய - உக்ரைன் போர், வெற்றிகரமான பேச்சுவார்த்தையை கூட இதுவரை எட்டவில்லை.ரஷ்யா, உக்ரைன் மீதான தனது தாக்குதலை தொடர்ந்து... மேலும் பார்க்க