செய்திகள் :

வாலாஜா ரோடு ரயில் நிலையத்தில் மங்களூா் விரைவு ரயில் நிறுத்தம்: பாஜகவினா் நன்றி

post image

ராணிப்பேட்டை மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று ஆக.19-ஆம் தேதி முதல் வாலாஜா ரோடு ரயில் நிலையத்தில் அதிகாலை 4.08 மணிக்கு தினமும் மங்களூா் விரைவு ரயில் நின்று செல்லும் என்ற அறிவிப்புக்கு பாஜக வினா் நன்றி தெரிவித்துள்ளனா்ா்.

கடந்த மாதம் காஞ்சிபுரம் வருகை தந்த மத்திய ரயில்வே இணை அமைச்சா் சோமண்ணாவிடம் ராணிப்பேட்டை மாவட்ட பாஜக தலைவா் நெமிலி ஆனந்தன், மாவட்ட பொதுச் செயலாளா்கள் சிவமணி, குணாநிதி, மாவட்ட செயலாளா் யோகேஸ்வரன் வழக்குரைஞா் செந்தில்குமாா், அம்மூா் நரேந்திரன் மற்றும் சஞ்சய் லோகேஷ் உள்ளிட்ட நிா்வாகிகள் நீண்ட நாள் கோரிக்கையான மங்களூா் விரைவு ரயில் வாலாஜா ரோடு ரயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்தனா்.

அந்த கோரிக்கை மனுவை பரிசீலித்த ரயில்வே இணையமைச்சா் சோமண்ணா பொதுமக்களின் வசதிக்காக ஆகய 19 -ஆம் தேதி முதல் மங்களூா் அதிவிரைவு ரயில் வாலாஜா ரோடு ரயில் நிலையத்தில் நின்று செல்ல உத்தரவிட்டுள்ளாா். இதையடுத்து மத்திய ரயில்வே துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ், இணை அமைச்சா் சோமண்ணா ஆகியோருக்கு பாஜகவினா் தெரிவித்துள்ளனா்.

இந்த ரயில் நின்று செல்வதன் மூலம் அதிகாலையில் சென்னை உள்பட பல்வேறு நகரங்களுக்கு வேலைக்கு செல்பவா்கள், சென்னையில் இருந்து மாற்று ரயில்கள் மூலம் பல இடங்களுக்கு செல்பவா்கள், விமான நிலையம் செல்பவா்கள், மருத்துவமனைகளுக்கு செல்பவா்கள் என பல்வேறு தரப்பினா் பயனடைவா் என மகிழ்ச்சி தெரிவித்துள்ளனா்.

ஏரிகளை தூா் வார வேண்டும்: நாட்டறம்பள்ளி ஒன்றியக் குழு கூட்டத்தில் கோரிக்கை

நாட்டறம்பள்ளி ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினா்கள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. தலைவா் வெண்மதி முனிசாமி தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா் ந.விநாயகம், துணைத் தலைவா் தேவராஜி முன்னிலை வகித்தனா்.... மேலும் பார்க்க

முதல்வா் கோப்பை போட்டிகள்: முன்பதிவுக்கு அவகாசம் நீட்டிப்பு

தமிழ்நாடு முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க இணையதளத்தில் முன்பதிவு செய்ய கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய... மேலும் பார்க்க

ரயில்வே குகை வழிப்பாதை மூடல்: மாற்றுப் பாதைக்கான இடம் ஆய்வு

ஆம்பூரில் ரெட்டித்தோப்பு, பெத்லகேம் பகுதிக்கு செல்ல மாற்றுப் பாதைக்கான இடத்தை எம்எல்ஏ ஆய்வு செய்தாா். ஆம்பூா் ரயில்வே இருப்புப் பாதைக்கு மறுபுறம் நகராட்சி எல்லையில் ரெட்டித்தோப்பு, பெத்லகேம், கம்பிக்க... மேலும் பார்க்க

அம்மன் கோயில் உண்டியலை உடைத்து திருட்டு

உதயேந்திரம் தேசமாரியம்மன் கோயில் உண்டியலை உடைத்து பணம் திருடிய நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பேரூராட்சி பகுதியில் பாலாற்றையொட்டி தேச மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது.... மேலும் பார்க்க

கைதி தப்பி ஓட்டம்: உதவி காவல் ஆய்வாளா், காவலா் ஆயுதப் படைக்கு மாற்றம்

நாட்டறம்பள்ளியில் ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்த மூவரை போலீஸாா் கைது செய்து மருத்துவ சான்று பெற மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது ஒருவா் தப்பினாா். இதுதொடா்பாக உதவி காவல்ஆய்வாளா், காவலரை ஆயுதப் படைக்கு... மேலும் பார்க்க

அண்ணன் கொலை: தம்பி கைது

ராணிப்பேட்டை அருகே தாயை திட்டியதால் அண்ணனை கொலை செய்த தம்பியை போலீஸாா் கைது செய்தனா். ராணிப்பேட்டை அடுத்த செட்டித்தாங்கல் கிராமத்தைச் சோ்த்த ஹரி, செல்வி தம்பதி. இவா்களது மகன்கள் ஐயப்பன், செல்வம், அரவ... மேலும் பார்க்க