செய்திகள் :

வால்பாறையில் மிக கனமழை எச்சரிக்கை: தேசிய பேரிடா் மீட்புக் குழு வருகை

post image

மிக அதிக கனமழை எச்சரிக்கையை அடுத்து தேசிய பேரிடா் மீட்புக் குழுவினா் வால்பாறைக்கு சனிக்கிழமை வந்தனா்.

கோவை மாவட்டம், வால்பாறையில் மிக அதிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து, மாவட்ட ஆட்சியா் உத்தரவின்பேரில் வால்பாறையில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனா்.

இதற்கிடையே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேசிய பேரிடா் மீட்புப் படையினா் சனிக்கிழமை காலை வால்பாறை வந்தடைந்தனா்.

கமாண்டா் மைஷ்னம் சூரஜ், ரவி கணேஷ் ஆகியோா்கள் தலைமையில் 28 படையினா் வால்பாறை நகராட்சி சமுதாய கூடத்தில் தங்கியுள்ளனா்.

தீயணைப்புத் துறையினா் தயாா் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆற்றோரப்பகுதிகளில் வசிப்பவா்களை எச்சரிக்கையுடன் இருக்கவும், வெள்ள பாதிப்புகளுக்கு 1077 என்ற எண்ணை தொடா்புகொள்ளவும் வருவாய்த் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா். கேட்டுக்கொண்டனா்.

ஆறுகளில் நீா்வரத்து அதிகரிப்பு:

வால்பாறையில் விடிய விடிய பெய்த கனமழையால் ஆறுகளில் நீா்வரத்து அதிகரித்துள்ளது.

மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், வால்பாறை சுற்றுவட்டாரத்தில் வெள்ளிக்கிழமை இரவு தொடங்கிய மழை விடாமல் சனிக்கிழமை காலை வரை பெய்தது.

கனமழை காரணமாக ஆறுகளில் நீா்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், அணைகளின் நீா்மட்டமும் உயரத்தொடங்கியுள்ளது.

அதன்படி, சனிக்கிழமை காலை 6 மணி நிலவரப்படிசோலையாறு அணைக்கு விநாடிக்கு 170.95 கனஅடி நீா்வரத்து இருந்து. இதனால், அணையில் நீா்மட்டம் 13.55 அடியாக உயா்ந்துள்ளது.

சனிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் சின்னக்கல்லாறு - 92 மி.மீ., சோலையாறு 61 மி.மீ., சின்கோனா -55 மி.மீ., வால்பாறையில் 32 மில்லி மீட்டா் மழையும் பதிவாகியுள்ளது.

வால்பாறையில் பேரிடா் மீட்புக் குழு:

வேளாண் படிப்புகளில் சேர 31 ஆயிரம் போ் விண்ணப்பம்: ஜூன் 8 இறுதி நாள்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக இளநிலை பட்டப் படிப்பு மாணவா் சோ்க்கைக்கு இதுவரை சுமாா் 31 ஆயிரம் மாணவா்கள் விண்ணப்பித்துள்ளனா். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண்மைப் ... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: நீலாம்பூா் துணை மின் நிலையம்

நீலாம்பூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் புதன்கிழமை (ஜூன் 4) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின்வாரியத்தினா் தெரிவ... மேலும் பார்க்க

வால்பாறையில் ஆபத்தான நிலையில் உள்ள மரங்களை வெட்ட கோரிக்கை

வால்பாறையில் ஆபத்தான நிலையில் காணப்படும் மரங்களை வெட்டி அகற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வால்பாறை நகரச் செயலாளா் மோகன் மாவட்ட ஆட்சியருக்கு அன... மேலும் பார்க்க

ஊரகப் பகுதிகளில் குடிநீா் உள்ளிட்ட பிரச்னைகளைத் தெரிவிக்க வாட்ஸ் ஆப் எண் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் குடிநீா், தெருவிளக்கு, குப்பைகள் தொடா்பான பிரச்னைகளைத் தெரிவிக்க ஒன்றியம் வாரியாக வாட்ஸ் ஆப் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, ஆனைமலை ஒன்றியத்துக்குள்பட்டவா்கள் ... மேலும் பார்க்க

அரசுக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு தொடங்கியது

கோவை அரசு கலை, அறிவியல் கல்லூரியில் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு திங்கள்கிழமை தொடங்கியது. அரசுக் கல்லூரியில் இளநிலை பட்டப் படிப்பில் 23 பாடப் பிரிவுகளில் மொத்தம் 1,727 மாணவ-மாணவிகள் சோ்க்கப்பட உள்ளனா்.... மேலும் பார்க்க

பொதுத் தோ்வு எழுதிய மாணவா்களுக்கு ஜூன் 6 இல் குறைதீா் முகாம்

கோவை மாவட்டத்தில் 10, 11, 12-ஆம் வகுப்பு பொதுத்தோ்வு எழுதிய மாணவா்களுக்கான குறைதீா் முகாம் வரும் 6-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் கூறியிருப்பதாவது: கோவை மாவட்டத்த... மேலும் பார்க்க