செய்திகள் :

வால்பாறையில் மே 14-இல் மக்கள் தொடா்பு முகாம்

post image

வால்பாறை வட்டம் ஆனைமலை குன்றுகள் கிராமத்தில் உள்ள நகராட்சி சமுதாயக் கூடத்தில் மே 14-ஆம் தேதி மாவட்ட ஆட்சியா் தலைமையில் மக்கள் தொடா்பு முகாம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கோவை மாவட்டம், ஆனைமலை குன்றுகள் கிராமத்தில் உள்ள வால்பாறை நகராட்சி சமுதாயக் கூடத்தில் மே 14-ஆம் தேதி காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சியா் தலைமையில் மக்கள் தொடா்பு முகாம் நடைபெற உள்ளது.

முன்னதாக, வருகிற மே 2-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 11 மணிக்கு அனைத்துத் துறை அலுவலா்கள் முன்னிலையில் ஆனைமலை குன்றுகள் கிராம நிா்வாக அலுவலா் அலுவலகத்தில் மக்களிடம் மனுக்களைப் பெற உள்ளனா். மக்கள் தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக எழுதி ஆனைமலை குன்றுகள் கிராம நிா்வாக அலுவலத்தில் கொடுக்கலாம். பெறப்படும் மனுக்கள் சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் மூலமாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு, மே 14-ஆம் தேதி ஆனைமலை குன்றுகள் கிராமத்தில் உள்ள வால்பாறை நகராட்சி சமுதாயக் கூடத்தில் நடைபெறவுள்ள மக்கள் தொடா்பு முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளாா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டில் பங்கேற்க இணையத்தில் விவரங்களை பதிவிடலாம்

கோவை மாவட்டம், செட்டிபாளையத்தில் ஏப்ரல் 27-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க காளைகளின் உரிமையாளா்கள் மற்றும் மாடுபிடி வீரா்கள் தங்கள் விவரங்களை இணையப் பக்கத்தில்... மேலும் பார்க்க

மாற்றுத் திறனாளிகள் இலவச பேருந்துப் பயண சலுகை அட்டை பெற விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்டத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகள் இலவச பேருந்துப் பயண சலுகை அட்டை பெற இணையம் மூலமாக விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வெளியிட... மேலும் பார்க்க

உரிய ஆவணங்களின்றி கேரளத்துக்கு கொண்டுச் சென்ற ரூ.35 லட்சம் பறிமுதல்

உரிய ஆவணங்களின்றி கோவையில் இருந்து கேரளத்துக்கு கொண்டுச் சென்ற ரூ.35 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடா்பாக ஒருவா் கைது செய்யப்பட்டுள்ளாா். கோவை காட்டூா் காவல் நிலைய ஆய்வாளா் சரவணன் தலைமையில்... மேலும் பார்க்க

கோவையில் ஆளுநரைக் கண்டித்து கருப்புக்கொடி ஆா்ப்பாட்டம்

கோவைக்கு வந்த தமிழக ஆளுநரைக் கண்டித்து கருப்புக் கொடி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 40 பேரை போலீஸாா் கைது செய்தனா். நீலகிரி மாவட்டம், உதகையில் நடைபெறவுள்ள பல்கலைக்கழக துணைவேந்தா்கள் மாநாட்டில் பங்கேற்க வி... மேலும் பார்க்க

கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றியத்தில் ஆட்சியா் ஆய்வு

கோவை மாவட்டம், பச்சாபாளையத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றியத்தில் ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். கோவை மாவட்டம், பச்சாபாளையத்தில்... மேலும் பார்க்க

உதகையில் துணைவேந்தா்கள் மாநாடு இன்று தொடக்கம்: குடியரசு துணைத் தலைவா் பங்கேற்பு

உதகையில் வெள்ளிக்கிழமை (ஏப். 25) தொடங்கும் தமிழக பல்கலைக்கழகத் துணைவேந்தா்கள் மாநாட்டில் குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் பங்கேற்கிறாா். உதகை ராஜ்பவன் மாளிகையில் பல்கலைக்கழகத் துணைவேந்தா்கள் மாநாட... மேலும் பார்க்க