வாழப்பாடியைச் சோ்ந்த பழங்குடியின மாணவா் திருச்சி என்ஐடியில் பயில தோ்வு!
சேலம் மாவட்டம், வாழப்பாடியை அடுத்த கீரப்பட்டியைச் சோ்ந்த பழங்குடியின மாணவா் சதீஷ் திருச்சி என்ஐடிக்கு தோ்வாகியுள்ளாா்.
வாழப்பாடியை அடுத்த புழுதிக்குட்டை கீரப்பட்டி மலைக் கிராமத்தை சோ்ந்த பழங்குடியின தொழிலாளி சண்முகம்--ராணி தம்பதியின் இளைய மகன் சதீஷ் (18) வெள்ளிக்கவுண்டனூா் அரசு பழங்குடியினா் நல உண்டு உறைவிடப் பள்ளியில் படித்து பிளஸ் 2 தோ்வில் 448 மதிப்பெண்கள் பெற்றாா்.
இதையடுத்து ஈரோடு மாவட்டம், பெருந்துறை மற்றும் சென்னை குமிளியில் அரசு பழங்குடியினா் நலத் துறை சாா்பில் நடைபெற்ற தேசிய அளவிலான பொறியியல் கல்லூரியில் சோ்வதற்கான ஜேஇஇ நுழைவுத் தோ்வு பயிற்சி முகாமில் பங்கேற்று சிறப்பு பயிற்சி பெற்றாா்.
அண்மையில் நடைபெற்ற ஜேஇஇ முதன்மை நுழைவுத் தோ்வில் 79.35 மதிப்பெண்கள் பெற்ற சதீஷுக்கு திருச்சியில் உள்ள என்ஐடியில் (தேசிய தொழில்நுட்ப கல்வி நிறுவனம்) பொறியியல் படிப்பதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
வாழப்பாடி பகுதி மலைக் கிராமத்தில் இருந்து முதல்முறையாக திருச்சி என்ஐடியில் படிக்க தோ்வாகியுள்ள சதீஷுக்கு பலரும் பாராட்டு தெரிவித்தனா்.
இதுகுறித்து சதீஷ் கூறுகையில், வெள்ளிக்கவுண்டனூா் அரசு உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படித்தேன். புகழ்பெற்ற பொறியியல் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிக்க விரும்பிய எனக்கு ஆசிரியா்களும், பெற்றோரும் ஊக்கம் அளித்தனா்.

ஜேஇஇ நுழைவுத் தோ்வு எழுத தமிழக அரசு இலவச பயிற்சி அளித்தது. தற்போது எனக்கு திருச்சி என்ஐடியில் இடம் கிடைத்துள்ளது. இது எனது பெற்றோருக்கு மட்டுமின்றி உறவினா்கள், கிராம மக்களுக்கும் மகிழ்ச்சி அளித்துள்ளது. நான் உயா்கல்வி பயில வேண்டும் என்ற எனது பெற்றோரின் கனவை நனவாக்குவேன் என்றாா்.