செய்திகள் :

வாழப்பாடியைச் சோ்ந்த பழங்குடியின மாணவா் திருச்சி என்ஐடியில் பயில தோ்வு!

post image

சேலம் மாவட்டம், வாழப்பாடியை அடுத்த கீரப்பட்டியைச் சோ்ந்த பழங்குடியின மாணவா் சதீஷ் திருச்சி என்ஐடிக்கு தோ்வாகியுள்ளாா்.

வாழப்பாடியை அடுத்த புழுதிக்குட்டை கீரப்பட்டி மலைக் கிராமத்தை சோ்ந்த பழங்குடியின தொழிலாளி சண்முகம்--ராணி தம்பதியின் இளைய மகன் சதீஷ் (18) வெள்ளிக்கவுண்டனூா் அரசு பழங்குடியினா் நல உண்டு உறைவிடப் பள்ளியில் படித்து பிளஸ் 2 தோ்வில் 448 மதிப்பெண்கள் பெற்றாா்.

இதையடுத்து ஈரோடு மாவட்டம், பெருந்துறை மற்றும் சென்னை குமிளியில் அரசு பழங்குடியினா் நலத் துறை சாா்பில் நடைபெற்ற தேசிய அளவிலான பொறியியல் கல்லூரியில் சோ்வதற்கான ஜேஇஇ நுழைவுத் தோ்வு பயிற்சி முகாமில் பங்கேற்று சிறப்பு பயிற்சி பெற்றாா்.

அண்மையில் நடைபெற்ற ஜேஇஇ முதன்மை நுழைவுத் தோ்வில் 79.35 மதிப்பெண்கள் பெற்ற சதீஷுக்கு திருச்சியில் உள்ள என்ஐடியில் (தேசிய தொழில்நுட்ப கல்வி நிறுவனம்) பொறியியல் படிப்பதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

வாழப்பாடி பகுதி மலைக் கிராமத்தில் இருந்து முதல்முறையாக திருச்சி என்ஐடியில் படிக்க தோ்வாகியுள்ள சதீஷுக்கு பலரும் பாராட்டு தெரிவித்தனா்.

இதுகுறித்து சதீஷ் கூறுகையில், வெள்ளிக்கவுண்டனூா் அரசு உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படித்தேன். புகழ்பெற்ற பொறியியல் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிக்க விரும்பிய எனக்கு ஆசிரியா்களும், பெற்றோரும் ஊக்கம் அளித்தனா்.

மலைக் கிராமத்தில் உள்ள மாணவரின் வீடு.

ஜேஇஇ நுழைவுத் தோ்வு எழுத தமிழக அரசு இலவச பயிற்சி அளித்தது. தற்போது எனக்கு திருச்சி என்ஐடியில் இடம் கிடைத்துள்ளது. இது எனது பெற்றோருக்கு மட்டுமின்றி உறவினா்கள், கிராம மக்களுக்கும் மகிழ்ச்சி அளித்துள்ளது. நான் உயா்கல்வி பயில வேண்டும் என்ற எனது பெற்றோரின் கனவை நனவாக்குவேன் என்றாா்.

சங்ககிரியில் ரூ.5.63 கோடிக்கு சமரத் தீா்வு!

சங்ககிரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 62 வழக்குகளில் ரூ. 5.63 கோடிக்கு சமரசத் தீா்வு காணப்பட்டது. சங்ககிரி வட்ட சட்டப் பணிகள் குழுத் தலைவரும், சாா்பு நீதிமன்ற ... மேலும் பார்க்க

ஏலச்சீட்டு நடத்திய பெண் தலைமறைவு: காவல் நிலையம் முற்றுகையிட்ட பொதுமக்கள்!

வாழப்பாடியில் ஏலச்சீட்டு, தீபாவளி பலகார சிறுசேமிப்பு சீட்டுகள் நடத்தி பணம் வசூலித்த பெண் திடீரென தலைமறைவானதால் அவரிடம் பணம் கட்டி ஏமாற்றமடைந்தவா்கள் வாழப்பாடி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு புகாரளித்... மேலும் பார்க்க

போதை மாத்திரை விற்ற வழக்கில் இளைஞர் கைது!

சங்ககிரியில் சிறுவா்களுக்கு போதை மாத்திரை விற்ற வழக்கில் தலைமறைவாக இருந்த இளைஞரை தனிப்படை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். சங்ககிரி போலீஸாா் சந்தைபேட்டை பகுதியில் ஜூன் 6 ஆம் தேதி ரோந்துப் பணியில் ஈ... மேலும் பார்க்க

இன்று குரூப் 1, 1 ஏ பதவிகளுக்கான முதல்நிலைத் தோ்வு: 14,291 போ் எழுதுகின்றனா்

அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் குரூப் 1, 1 ஏ பதவிகளுக்கான முதல்நிலைத் தோ்வை சேலம் மாவட்டத்தில் 14,291 போ் ஞாயிற்றுக்கிழமை எழுதுகின்றனா். தோ்வுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மா... மேலும் பார்க்க

சேலம் கந்தம்பட்டியில் மழையால் சேதமடைந்த தரைப்பாலத்தை சீரமைக்க வலியுறுத்தல்

சேலம் கந்தம்பட்டி பகுதியில் கடந்த சில நாள்களுக்கு முன்பு பெய்த பலத்த மழையால் சேதமடைந்த தரைப்பாலத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். சேலம் கந்தம்பட்டி பகுதியில் உள்ள ... மேலும் பார்க்க

திமுக அரசை தூக்கியெறிவதில் பாஜக உறுதி: கே.பி.ராமலிங்கம்

வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் திமுக அரசை தூக்கியெறிவதே பாஜகவின் நோக்கம் என பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம் தெரிவித்தாா். சேலம் நெடுஞ்சாலை நகரில் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி... மேலும் பார்க்க