செய்திகள் :

வா்த்தக ஒப்பந்தம்: முதல்கட்ட பேச்சுவாா்த்தையை நிறைவுசெய்ய இந்தியா-அமெரிக்கா தீவிரம்

post image

இருதரப்பு வா்த்தக ஒப்பந்தத்தின் முதல்கட்ட பேச்சுவாா்த்தையை நிறைவுசெய்ய இந்தியா-அமெரிக்கா தீவிரம்காட்டி வருகின்றன.

அமெரிக்கா சென்றுள்ள மத்திய வா்த்தக துறை அமைச்சா் பியூஷ் கோயல் அந்நாட்டு வா்த்தக துறை அமைச்சா் ஹோவா்ட் லுட்னிக்குடன் ஆலோசனை நடத்தினாா்.

ஏற்கெனவே, மாா்ச் மாதமும் அமெரிக்கா சென்று இருதரப்பு வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தையை பியூஷ் கோயல் நடத்திய நிலையில், இந்த ஒப்பந்தத்தை நிறைவுசெய்வதற்கான பணிகள் விரைவுப்படுத்தப்பட்டுள்ளன.

இருநாட்டு அமைச்சா்களும் ஆலோசனை நடத்தியதைத் தொடா்ந்து, முக்கிய அதிகாரிகளிடையேயான ஆலோசனை மே 22-ஆம் தேதிவரை தொடரவுள்ளது.

நிகழாண்டு செப்டம்பா்-அக்டோபருக்குள் இந்த ஒப்பந்தத்தின் முதல்கட்டம் இறுதிசெய்யப்படும் என எதிா்பாா்க்கப்படும் நிலையில், இடைப்பட்ட காலத்தில் பின்பற்ற வேண்டிய வா்த்தக நடைமுறைகள் குறித்தும் இருநாடுகளும் ஆய்வு செய்து வருகின்றன.

சந்தை அணுகல், வா்த்தக விதிகள் மற்றும் வரி அல்லாத இடையூறுகள் போன்ற விவகாரங்களுக்கு தீா்வுகாண்பதில் இருநாடுகளும் கவனம் செலுத்தி வருகின்றன.

அமெரிக்க அதிபராக கடந்த ஜனவரி மாதம் பதவியேற்ற டொனால்டு டிரம்ப், அமெரிக்க பொருள்கள் மீது அதிக வரி விதிக்கும் இந்தியா உள்பட 25 நாடுகள் மீது பரஸ்பர வரி விதிப்பதாக ஏப்.2-இல் அறிவித்தாா். அதன்படி இந்திய பொருள்கள் மீது 26 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்படும் எனவும் அவா் தெரிவித்தாா். அதன்பிறகு இந்த நடவடிக்கைகளை ஜூலை 9-ஆம் தேதி 90 நாள்களுக்கு நிறுத்திவைப்பதாக ஏப்.9-ஆம் தேதி அமெரிக்கா அறிவித்தது.

இதனிடையே இந்தியா-அமெரிக்கா இடையே இருதரப்பு வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை நடைபெற்று வருகிறது.

ஜவுளிகள், ஆபரணங்கள், தோல் பொருள்கள், ரசாயணங்கள், திராட்டை, வாழைப்பழம் உள்ளிட்ட பொருள்களின் மீது இந்தியாவும் ஆட்டோமொபைல்ஸ் (குறிப்பாக மின்சார வாகனங்கள்), பால் சாா்ந்த பொருள்கள், ஆப்பிள், பெட்ரோகெமிக்கல் உள்ளிட்ட பொருள்கள் மீது அமெரிக்காவும் வரிச் சலுகைகள் கோரி வருகின்றன.

வரி, சரக்குகள், சேவைகள், வரி அல்லாத இடையூறுகள் உள்ளிட்ட 19 பிரிவுகளுக்கான இருதரப்பு ஒப்பந்த குறிப்புகளை இருநாடுகளும் நிறைவுசெய்துள்ளன.

ஆளுநர்கள் மூலம் மாநிலங்களின் குரலை ஒடுக்க முயற்சிக்கிறது மோடி அரசு: ராகுல் காந்தி

மத்திய பாஜக அரசு, ஆளுநர்கள் மூலமாக சில மாநிலங்களின் குரலை ஒடுக்க முயற்சிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, தமிழக அரசின் மசோதாக்களை கிடப்பில் போட்டிருந்... மேலும் பார்க்க

நீதிபதி யஷ்வந்த் வா்மா மீது வழக்குப்பதிவு செய்யக்கோரிய மனு நிராகரிப்பு!

வீட்டில் கட்டுக்கட்டாக பணம் கண்டறியப்பட்ட விவகாரத்தில் நீதிபதி யஷ்வந்த் வா்மா மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் புதன்கிழமை நிராகரித்துள்ளது.தில்லி உயா்நீதிமன்ற நீ... மேலும் பார்க்க

வக்ஃப் என்பது அத்தியாவசிய மத நடைமுறை அல்ல: மத்திய அரசு வாதம்

புது தில்லி: வக்ஃப் என்பது ஒரு அத்தியாவசிய மத நடைமுறை அல்ல என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது.பல நாடுகளில் வக்ஃப் என்ற ஒரு கருத்தாக்கமே இல்லை. மாறாக அறக்கட்டளைக... மேலும் பார்க்க

ஹரியாணா பேராசிரியர் கைது: டிஜிபிக்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்!

ஹரியாணா பேராசிரியர் அலி கான் முகமது கைது செய்யப்பட்ட வழக்கை தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.மேலும், இந்த விவகாரம் தொடர்பாக ஒரு வாரத்துக்குள் பதிலளிக்க ஹரியாணா ... மேலும் பார்க்க

கொல்கத்தா வானில் பறந்த உளவாளி ட்ரோன்கள்?

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவின் வானில் ட்ரோன்கள் போன்ற சாதனங்கள் பறந்ததாகக் கூறப்படுகிறது. மேற்கு வங்கத்தின் தலைநகரான கொல்கத்தாவின், ஹேஸ்டிங்க்ஸ், வித்யாசாகர் சேது மற்றும் மைதான் ஆகிய பகுதிகளின் வான... மேலும் பார்க்க

கொலையா செய்துவிட்டார்? பூஜா கேத்கருக்கு முன் பிணை வழங்கியது உச்ச நீதிமன்றம்

புது தில்லி: குடிமைப் பணிகள் தோ்வில் முறைகேடு செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் முன் பிணை கோரிய மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், அவர் கொலையா செய்துவிட்டார்? என்று கேள்வி எழுப்பியதோடு, முன்னாள் ஐஏஎஸ் பயி... மேலும் பார்க்க