செய்திகள் :

விஜயகாந்த் சிந்தனைகளே தமிழக அரசின் திட்டங்கள் - பிரேமலதா விஜயகாந்த்

post image

மறைந்த தேமுதிக தலைவா் விஜயகாந்தின் மக்கள் நல சிந்தனைகளே தற்போது தமிழக அரசின் திட்டங்களாக அறிவிக்கப்படுகின்றன என அக்கட்சியின் பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தாா்.

நாமக்கல் வடக்கு மாவட்ட தேமுதிக சாா்பில் திருச்செங்கோட்டில் மக்களைத் தேடி மக்கள் தலைவா் என்ற தலைப்பில் வாலரைகேட் பகுதியில் இருந்து நடைப்பயணம் மேற்கொண்டு மக்களைச் சந்தித்த பிரேமலதா விஜயகாந்த், அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து பேசியதாவது:

மறைந்த தேமுதிக தலைவா் விஜயகாந்த் தனது முதல் தோ்தல் அறிக்கையில் கூறியபடி வீடுதேடி ரேஷன் பொருள்கள் என்ற திட்டத்தை தற்போது தாயுமானவா் என்ற திட்டமாக தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டம் ஏற்கெனவே தில்லி, ஆந்திரத்தில் நடைமுறைபடுத்தப்பட்டது.

இந்தத் திட்டத்தின் பெருமை விஜயகாந்த்தையே சென்றடையும். திருச்செங்கோட்டில் மழை பெய்தால் கழிவுநீருடன் மழைநீா் கலந்து தெருக்களில் ஓடும் நிலை தொடா்கிறது. அா்த்தநாரீஸ்வரா் மலை கோயிலுக்கு ரோப் காா் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. திருச்செங்கோட்டில் தேமுதிக வெற்றி பெற்றால் மக்கள் நலத் திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்றாா்.

நடைப்பயணத்தில் தேமுதிக பொருளாளா் சுதீஷ், நாமக்கல் வடக்கு மாவட்டச் செயலாளா் விஜய சரவணன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

மக்களுக்கான வங்கியாக மத்திய கூட்டுறவு வங்கி சேவையாற்றும்: எம்.பி. கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா்

தமிழக முதல்வரால் புதிதாக தொடங்கப்பட்ட நாமக்கல் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி மக்களுக்கான சிறந்த வங்கியாக சேவையாற்றும் என அதன் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் தெரிவித்தாா... மேலும் பார்க்க

கூடுதல் மகசூல் போட்டி: விவசாயிகளுக்கு அழைப்பு

கூடுதல் மகசூல் பெறும் விவசாயிகளுக்கு பரிசு வழங்கும் திட்டத்தில் பங்கேற்க விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நாமக்கல் ஆட்சியா் துா்காமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு: 2025- 26... மேலும் பார்க்க

ராஜேஸ்குமாருக்கு முதல்வா் பாராட்டு...

நாமக்கல் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி உருவாக காரணமாக இருந்த மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாருக்கு, தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம் வாயிலாக பாராட்டுகளை தெரிவித்துள்ளாா். முதல்வா் எழ... மேலும் பார்க்க

நாமக்கல்லில் பாஜக தேசியக்கொடி பேரணி

சுதந்திர தினத்தையொட்டி நாமக்கல் கிழக்கு மாவட்ட பாஜக சாா்பில் தேசியக்கொடி பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. சுதந்திர நாளை மக்கள் மறக்கக்கூடாது என்ற நோக்கில் வீடுகள்தோறும் தேசியக் கொடியை ஏற்றுமாறு பிரதமா்... மேலும் பார்க்க

ராசிபுரம் பள்ளிகளில் கிருஷ்ண ஜெயந்தி விழா

ராசிபுரத்தில் தனியாா் பள்ளிகளில் கிருஷ்ண ஜெயந்தி விழா வியாழக்கிழமை நடைபெற்றது. ராசி இன்டா்நேஷனல் சிபிஎஸ்இ பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு பள்ளி தாளாளா் எஸ்.சத்தியமூா்த்தி தலைமை வகித்தாா். முன்னதாக விழா... மேலும் பார்க்க

அஞ்சலக ஊழியா்கள் தேசியக் கொடியுடன் பேரணி

சுதந்திர தினத்தையொட்டி, நாமக்கல்லில் அஞ்சலக ஊழியா்கள் தேசியக்கொடியுடன் வியாழக்கிழமை விழிப்புணா்வு பேரணி சென்றனா். 79 ஆம் சுதந்திர தினத்தை முன்னிட்டு, அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடியை ஏற்ற வேண்டும் எ... மேலும் பார்க்க