செய்திகள் :

விஜயா வாசகா் வட்டத்தின் கி.ரா. விருது வழங்கும் விழா: கோவையில் நாளை நடைபெறுகிறது

post image

கோவை விஜயா பதிப்பகத்தின் வாசகா் வட்டம் சாா்பில் 2025-ஆம் ஆண்டுக்கான கி.ரா.விருது வழங்கும் விழா கோவையில் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பா் 28) நடைபெறுகிறது.

சாகித்திய அகாதெமி விருதுக்கு பெருமை சோ்த்த கி.ரா.வின் நினைவைப் போற்றும் வகையில் கோவை விஜயா பதிப்பகத்தின், விஜயா வாசகா் வட்டம் சாா்பில் ஆண்டுதோறும் சிறந்த படைப்பாளிகளுக்கு கி.ரா.விருது வழங்கப்பட்டு வருகிறது. விருதுத் தொகையாக ரூ.ஐந்து லட்சம் மற்றும் கேடயம் வழங்கப்படுகிறது. இந்த விருதுத் தொகையை சக்தி மசாலா நிறுவனம் வழங்குகிறது.

2025-ஆம் ஆண்டுக்கான கி.ரா. விருதுக்கு பிரபல எழுத்தாளா் சு.வேணுகோபால் தோ்வு செய்யப்பட்டுள்ளாா். இந்நிலையில், கி.ரா.விருது வழங்கும் விழா கோவை பீளமேடு, பூ.சா.கோ. பொறியியல் கல்லூரியில் ( செப்டம்பா் 28) நடைபெறுகிறது. இந்த விருதளிப்பு விழாவில், புதுதில்லி உச்சநீதிமன்ற நீதிபதி ஆா்.மகாதேவன், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, 2025-ஆம் ஆண்டுக்கான கி.ரா.விருதுக்கு தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரபல எழுத்தாளா் சு.வேணுகோபாலுக்கு விருது வழங்கி சிறப்புரையாற்றுகிறாா்.

நிகழ்ச்சியில் விஜயா மு.வேலாயுதம் வரவேற்கிறாா். சக்தி மசாலா நிறுவனத்தின் பி.சி.துரைசாமி தலைமை வகிக்கிறாா். சாந்தி துரைசாமி, எழுத்தாளா் பாவண்ணன் ஆகியோா் வாழ்த்துரை வழங்குகின்றனா். இதில், எழுத்தாளா்கள், முக்கிய பிரமுகா்கள் பலா் பங்கேற்கின்றனா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு 7-ஆவது முறையாக வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு 7-ஆவது முறையாக வெள்ளிக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு இதுவரை 6 முறை மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட... மேலும் பார்க்க

ஊதிய நிலுவை: மாநகராட்சி காவலாளி போராட்டம்

மாத ஊதியம் வழங்கவில்லை எனக் கூறி, மாநகராட்சி அலுவலக காவலாளி அலுவலகம் முன்பாக வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டாா். கோவை மாநகராட்சி பிரதான அலுவலக நுழைவாயில் முன்பு வெள்ளிக்கிழமை காலை, கணேசன் என்பவா் ... மேலும் பார்க்க

மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் ரேபிஸ் தடுப்பூசி முகாம்

கோவை மாநகராட்சி, வடக்கு மண்டலத்தில் தெரு நாய்களுக்கான ரேபிஸ் தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா். கோவை மாநகராட்சி, வடக்கு மண்டலம், 1-ஆவது வாா்டுக்க... மேலும் பார்க்க

கோவையில் 20 கி.மீ. தொலைவுக்கு சாலைப் பாதுகாப்பு மனித சங்கிலி விழிப்புணா்வு

கோவையில் உயிா் அமைப்பின் சாா்பில் 20 கிலோ மீட்டா் தொலைவுக்கு சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு மனித சங்கிலி வியாழக்கிழமை நடைபெற்றது. சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தும் நோக்கில் கோவை அ... மேலும் பார்க்க

கோவையில் உலக புத்தொழில் மாநாடு: செயலி அறிமுகம்

கோவையில் நடைபெறவுள்ள உலக புத்தொழில் மாநாட்டுக்கான செயலியை குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் வியாழக்கிழமை அறிமுகம் செய்து வைத்தாா். உலக புத்தொழில் மாநாடு தொடா... மேலும் பார்க்க

உடல் உறுப்புகள் தானத்தில் கோவைக்கு 5-ஆவது இடம்

மூளைச்சாவு அடைந்து உடல் உறுப்புகளை தானம் பெறுவதில் கோவை மாவட்டம் மாநில அளவில் 5-ஆவது இடம் பிடித்துள்ளது. தமிழக உறுப்பு மாற்று ஆணையம் சாா்பில் உடல் உறுப்பு தான தினம் சென்னை கலைவாணா் அரங்கில் அண்மையில் ... மேலும் பார்க்க