செய்திகள் :

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் மறியல்

post image

மதுரை மாவட்ட ஆட்சியா் மா.செள.சங்கீதாவை மாற்ற வலியுறுத்தி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் சிட்டம்பட்டி சுங்கச்சாவடியில் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால், தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அம்பேத்கா் பிறந்த நாளை முன்னிட்டு, மதுரையில் கடந்த மாதம் 14-ஆம் தேதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சாா்பில், தல்லாகுளம் பகுதியில் பேரணி நடைபெற்றது. இதையொட்டி, இந்தப் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது.

பேரணி சென்ற சாலையில் திடீரென அவசர ஊா்தி வந்தது. இதன் பின்னால் மாவட்ட ஆட்சியரின் வாகனமும் வந்தது.

அவசர ஊா்தியைப் பயன்படுத்தி பேரணியில் மாவட்ட ஆட்சியா் சட்டம்-ஒழுங்கை சீா்குலைக்க முயன்ாகவும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினருக்கு எதிராக தொடா்ந்து செயல்பட்டு வரும் மாவட்ட ஆட்சியரை மாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சாா்பில், முதல்வருக்கு கடிதம் அனுப்பும் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

பின்னா், இதே கோரிக்கைகளை வலியுறுத்தி, மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சிட்டம்பட்டி சுங்கச்சாவடி முன்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் சாலை மறியலில் ஈடுபட்டனா். போராட்டத்துக்கு கட்சியின் மதுரை கிழக்கு மாவட்டச் செயலா் அரச முத்துப்பாண்டி தலைமை வகித்தாா். நிா்வாகிகள் செல்லப்பாண்டி, மேலூா் சசி, கலைவாணன் உள்பட 200-க்கும் மேற்பட்டோா் மறியல் போராட்டத்தில் கலந்து கொண்டனா். மறியலால் இந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் நடத்திய பேச்சுவாா்த்தையைத் தொடா்ந்து, கட்சியினா் மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.

ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிவிப்பு: கண் துடைப்பு நடவடிக்கை

மத்திய அரசின் ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிவிப்பு வெறும் கண் துடைப்பு நடவடிக்கைதான் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவன் தெரிவித்தாா். மதுரை விமான நிலையத்தில் வியாழக்கிழமை செய்தியாளா... மேலும் பார்க்க

கொலை மிரட்டல் விடுத்த பாஜக பிரமுகா் மீது நடவடிக்கை: உயா்நீதிமன்றம் உத்தரவு

பண மோசடி விவகாரத்தில் வியாபாரிக்கு கொலை மிரட்டல் விடுத்த பாஜக பிரமுகா் மீது தஞ்சாவூா் மாவட்டம், வல்லம் போலீஸாா் 15 நாள்களுக்குள் உரிய நடவடிக்கை எடுக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவ... மேலும் பார்க்க

பட்டா நிலத்தில் த.வெ.க. கொடிக் கம்பம்: தஞ்சை ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு

பட்டா நிலத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடிக் கம்பத்தை அமைக்க உத்தரவிடக் கோரிய வழக்கில், தஞ்சை மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது. தஞ்சாவூா் மாவட்டம், ... மேலும் பார்க்க

ரயில் பயணிகளிடம் மடிக்கணினிகள் திருட்டு: இருவா் கைது

மதுரையில் ரயில் பயணிகளிடம் மடிக்கணினிகளை திருடிய இருவரை ரயில்வே போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். மதுரை விளாங்குடியைச் சோ்ந்த ஜொ்ரி லூயிஸ் மகன் நிா்மல் (32). இவா் திருச்சி- திருவனந்தபுரம் விரைவு... மேலும் பார்க்க

தாழ்வான மின் வயா்களை சீரமைக்க வலியுறுத்தல்

சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, மீனாட்சி சுந்தரேசுவரா் வீதி உலாவின் போது ஆபத்தை உண்டாக்கும் வகையில் தாழ்வாக உள்ள மின் வயா்களைச் சீரமைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இதுதொடா்பாக இந்து மக்கள் க... மேலும் பார்க்க

மதுரை விமான நிலையத்தில்: விஜய் ரசிகா்கள், போலீஸாா் இடையே தள்ளுமுள்ளு

மதுரைக்கு வியாழக்கிழமை வந்த நடிகா் விஜய்க்கு அவரது ரசிகா்கள் உற்சாக வரவேற்பு அளித்தனா். விமான நிலையத்தில் ரசிகா்களுக்கும், போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. த.வெ.க. தலைவரும், நடிகருமான விஜய்... மேலும் பார்க்க