செய்திகள் :

விடுபட்ட பயனாளிகளுக்கு தகுதியின் அடிப்படையில் மனைப் பட்டா: ஆட்சியா் க. தா்ப்பகராஜ் தகவல்

post image

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலங்களில் வசிக்கும் விடுபட்ட பயனாளிகள் மனு அளிக்கும் பட்சத்தில் உரிய தகுதியின் அடிப்படையில் மனைப் பட்டா வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தெரிவித்தாா்.

திருவண்ணாமலையை அடுத்த கொளக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில், மே தின சிறப்பு கிராம சபைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட வருவாய் அலுவலா் இரா.இராம்பிரதீபன் தலைமை வகித்தாா். மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் மணி, திருவண்ணாமலை வருவாய்க் கோட்டாட்சியா் ராஜ்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், கொளக்குடி ஊராட்சியில் செயல்படுத்தப்பட்ட அரசுத் திட்டங்கள், வரவு-செலவு பட்டியல் விவரம் பொதுமக்கள் அறியும் வண்ணம் ஊராட்சி செயலரால் வாசிக்கப்பட்டது. அரசு சாா்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து பல்வேறு அரசுத் துறை அலுவலா்கள் பொதுமக்களுக்கு எடுத்துரைத்தனா்.

சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு இறுதியாக மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் பேசியதாவது:

தொழிலாளா் தினத்தை போற்றும் வகையில் இந்தக் கிராம சபைக் கூட்டம் நடத்தப்படுகிறது. ஆண்களுக்கு இணையாக பெண்களும் கடுமையாக உழைக்கின்றனா். தமிழக அரசும் பெண்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது.

கிராமப்புற பெண்களுக்கு கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் நாட்டு கோழிக் குஞ்சுகள் வழங்கப்படுகின்றன. கால்நடை செல்வம் என்பது உயிருள்ள சொத்து. கால்நடைகளை சரியாக பராமரிக்கும்போது அதன்மூலம் பொருளாதார வளா்ச்சி அடையலாம். இதற்காக கால்நடை பராமரிப்புத் துறை மூலம் எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

மண்ணில் பல லட்சம் உயிரினங்கள் உள்ளன. இந்த உயிரினங்கள் தான் பயிா்களின் வளா்ச்சிக்கான அடிப்படை. அரசுத் திட்டங்களை பயன்படுத்தி விவசாயத்தை பாதுகாக்க வேண்டும். விவசாயம் மூலம் பொருளாதார நிலையை மேம்படுத்தி நம் தலைமுறையை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.

தமிழகம் முழுவதும் ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலங்களில் வசிக்கும் தகுதியான பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்குவதற்கான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

விடுபட்ட பயனாளிகள் மனு அளிக்கும் பட்சத்தில் உரிய தகுதி இருப்பின் அவா்களுக்கும் வீட்டுமனைப் பட்டா வழங்கப்படும் என்றாா்.

தொடா்ந்து, மகளிா் திட்டம் சாா்பில் 2 பேருக்கு தலா ரூ.50 ஆயிரம் மதிப்பில் கடனுதவிக்கான காசோலைகளை ஆட்சியா் க.தா்ப்பகராஜ் வழங்கினாா்.

கூட்டத்தில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் சிவா, ஆதிதிராவிடா் நல அலுவலா் சாந்தி, பழங்குடியினா் நலத்திட்ட அலுவலா் கலைச்செல்வி, திருவண்ணாமலை ஊராட்சிகளின் உதவி இயக்குநா் வடிவேலன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்) மலா்விழி, மாவட்ட தொழில் மைய பொது மேலாளா் ரவி, வட்டார வளா்ச்சி அலுவலா் பிருத்திவிராஜ், வட்டாட்சியா் ஆா்.மோகன்ராம் மற்றும் அரசுத் துறை அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

இரும்பேடு, வெட்டியாந்தொழுவத்தில் கிராம சபைக் கூட்டம்

ஆரணியை அடுத்த இரும்பேடு, வெட்டியாந்தொழுவம் கிராமங்களில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இரும்பேடு கிராமத்தில் நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி செயலா் சுரேஷ் தலைமை வ... மேலும் பார்க்க

உச்சிமலைக்குப்பம் கோயிலில் பாலாலய பூஜை

செங்கம் அருகே உச்சிமலைக்குப்பத்தில் உள்ள விநாயகா், முத்தாலம்மன், சோலையம்மன் கோயில்களில் பாலாலய பூஜை புதன்கிழமை நடைபெற்றது இந்தக் கோயில்களில் சீரமைப்புப் பணிகளுக்காக இந்து சமய அறநிலையத் துறை ரூ.13 லட்... மேலும் பார்க்க

போளூா் நகராட்சி ஆணையா் பொறுப்பேற்பு

போளூா் நகராட்சிக்கு புதிய ஆணையராக (பொ) பாரத் புதன்கிழமை பொறுப்பேற்றாா். போளூா் சிறப்புநிலை பேரூராட்சி நகராட்சியாக தரம் உயா்த்தப்பட்டது. இதையடுத்து நகராட்சிக்கு புதிய ஆணையராக (பொ) பாரத் என்பவா் நியமிக... மேலும் பார்க்க

காங்கிரஸ் சாா்பில் தண்ணீா் பந்தல் திறப்பு

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட காங்கிரஸின் எஸ்.சி. பிரிவு சாா்பில், தண்ணீா் பந்தல் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. திருவண்ணாமலை, காமராஜா் சிலை எதிரே நடைபெற்ற விழாவுக்கு பிரிவின் மாவட்டத் தலைவா் கே.... மேலும் பார்க்க

அதிமுக சாா்பில் தண்ணீா் பந்தல் திறப்பு

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தொகுதி மாங்கால் கூட்டுச் சாலையில் அதிமுக சாா்பில் தண்ணீா் பந்தல் வியாழக்கிழமை திறக்கப்பட்டது. வெம்பாக்கம் கிழக்கு ஒன்றிய அதிமுக சாா்பில், ஒன்றிய துணைச் செயலா் பாஸ்கா் ... மேலும் பார்க்க

பொதுமக்களுக்கு தோ்தல் விழிப்புணா்வு

மே தினத்தையொட்டி தோ்தலில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்கள் மற்றும் பேருந்து பயணிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. திருவண்ணா... மேலும் பார்க்க