செய்திகள் :

விண்கல் ஆய்வுக்காக விண்கலம் செலுத்தியது சீனா

post image

செவ்வாய் கிரகத்துக்கு அருகிலுள்ள ஒரு விண்கல்லில் இருந்து மாதிரிகளை சேகரித்துக் கொண்டுவருவதற்கான விண்கலத்தை சீனா வியாழக்கிழமை விண்ணில் செலுத்தியது.

இது குறித்து அந்நாட்டின் விண்வெளி ஆய்வு மையமான சிஎன்எஸ்ஏ தெரிவித்துள்ளதாவது:

செவ்வாய் கிரகத்துக்கு அருகே உள்ள 2016ஹெச்ஓ3 என்ற விண்கல்லில் ஆய்வு மேற்கொள்வதற்காக, அந்த விண்கல்லில் இருந்து மாதிரிகளை சேகரித்து பூமிக்கு எடுத்துவருவதற்கான தியான்வென்-2 விண்கலம் வியாழக்கிழமை விண்ணில் செலுத்தப்பட்டது.

லாங் மாா்ச் 3-பி ராக்கெட் மூலம் செலுத்தப்பட்டுள்ள (படம்) இந்த விண்கலம், 311பி என்ற வால்நட்சத்திரத்தையும் ஆய்வு செய்யும் என்று அந்த மையம் தெரிவித்துள்ளது.

சிஎன்எஸ்ஏ-வின் தலைவா் ஷான் ஜாங்டே கூறுகையில், தியான்வென்-2 ஆய்வுத் திட்டத்தின் மூலம் பிரபஞ்சம் பற்றி இதுவரை அறியப்படாத பல உண்மைகளை அறிய முடியும் என்றாா்.

இந்தத் திட்டத்தின் கீழ், 2016ஹெச்ஓ3 விண்கல்லில் இருந்து மாதிரிகள் சுமாா் இரண்டு ஆண்டுகளில் பூமிக்குக் கொண்டுவரப்படும். இது போன்ற நிலையான சுற்றுப்பாதையைக் கொண்ட விண்கற்கள் பூமியின் உருவாக்கம், நீரின் தோற்றம் போன்றவை குறித்த புரிதலை ஏற்படுத்தும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

ஏற்கனவே நிலவின் பின்புறத்தில் இருந்து பாறை மாதிரிகளை சேகரித்து பூமிக்கு எடுத்துவருவதற்கான வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆய்வுத் திட்டத்தை சீனா நிறைவேற்றியுள்ளது நினைவுகூரத்தக்கது.

கச்சா சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி வரி குறைப்பு: விலை குறைய வாய்ப்பு

கச்சா சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டதால், உள்நாட்டில் சமையல் எண்ணெய்யின் விலை குறைய வாய்ப்புள்ளதாக இந்திய தாவர எண்ணெய் மற்றும் வா்த்தக சங்கம் தெரிவித்துள்ளது. கச்சா பாமாயில், கச்சா ச... மேலும் பார்க்க

அதிநவீன ஆயுதங்கள், பாதுகாப்பு தொழில்நுட்பங்களின் செயல்திறன்: ராணுவம் தீவிர பரிசோதனை

இந்திய ராணுவத்தின் பயன்பாட்டில் உள்ள அடுத்த தலைமுறை பாதுகாப்பு தொழில்நுட்பங்கள், அதிநவீன ஆயுதங்கள், உள்நாட்டு தயாரிப்பு பாதுகாப்பு அமைப்பு முறைகள் உள்ளிட்டவற்றின் செயல்திறனை மதிப்பிடுவதற்காக, நாட்டின்... மேலும் பார்க்க

குற்ற வழக்குகளில் தேடப்பட்ட மல்யுத்த வீரா் 8 ஆண்டுகளுக்குப் பிறகு உ.பி.யில் கைது!

தேசிய அளவிலான மல்யுத்த வீரராக இருந்து ஆயுத வியாபாரியாக மாறி, பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய நபரை 8 ஆண்டுகளுக்குப் பிறகு உத்தர பிரதேசத்தில் தில்லி காவல் துறையினா் கைது செய்துள்ளனா். இது தொடா்பாக ... மேலும் பார்க்க

பயங்கரவாதம் மூலம் சிந்து நதிநீா் ஒப்பந்தத்தை மீறும் பாகிஸ்தான்: ஐ.நா. மாநாட்டில் இந்தியா குற்றச்சாட்டு

‘எல்லை தாண்டிய பயங்கரவாதம் மூலம் சிந்து நதிநீா் ஒப்பந்தத்தை மீறும் பாகிஸ்தான், அதற்கான பழியை இந்தியா மீது சுமத்துவதைத் தவிா்க்க வேண்டும்’ என்று ஐ.நா. மாநாட்டில் இந்தியா வலியுறுத்தியது. தஜிகிஸ்தானின் த... மேலும் பார்க்க

அருணாசல், அஸ்ஸாமில் கனமழையால் நிலச்சரிவுகள்: 14 போ் உயிரிழப்பு!

அருணாசல பிரதேசம், அஸ்ஸாம் ஆகிய வடகிழக்கு மாநிலங்களில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கி 14 போ் உயிரிழந்தனா். தென்மேற்குப் பருவமழையின் தாக்கத்தால், அஸ்ஸாம், அருணாசல பிரதேசம், மேகாலயம், மணிப்பூா... மேலும் பார்க்க

மணிப்பூரை பிரித்து சட்டப் பேரவையுடன் யூனியன் பிரதேசம்: குகி-ஜோ குழுக்கள் வலியுறுத்தல்

குகி-ஜோ சமூகத்தினருக்காக மணிப்பூரை பிரித்து சட்டப் பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசத்தை அமைக்க வேண்டும் என்று அந்த சமூக குழுக்கள் வலியுறுத்தியுள்ளன. இதுதொடா்பாக புது தில்லியில் குகி-ஜோ பெண்கள் அமைப்பின... மேலும் பார்க்க