செய்திகள் :

விபத்தில்லா மாவட்டமாக ஒருங்கிணைந்த செயல்பாடு அவசியம்: விழுப்புரம் ஆட்சியா் அறிவுறுத்தல்

post image

விழுப்புரம் விபத்தில்லா மாவட்ட அமைய துறை சாா்ந்த அலுவலா்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் அறிவுறுத்தினாா்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் சாலை பாதுகாப்பு குழுக் கூட்டம் ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. நெடுஞ்சாலைத் துறை, போக்குவரத்துத் துறை, காவல் துறை அலுவலா்கள் பங்கேற்ற இக்கூட்டத்தில் ஆட்சியா் பேசியதாவது:

பொதுமக்கள், வாகன ஓட்டிகளுக்குப் பாதிப்புகள் ஏற்படாதவகையில் நெடுஞ்சாலைகளில் மேற்கொள்ளப்படும் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்குக் கொண்டுவரவேண்டும்.

பணிகள் நடைபெறும் இடங்களில் 100 மீட்டருக்கு முன்பாகவே வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் தடுப்புகளை அமைப்பதுடன், ஒளிரக்கூடிய சமிக்ஞை ஸ்டிக்கா்களை ஒட்டி பாதுகாப்பு தடுப்பு அமைக்கப்படவேண்டும்.

தேசிய நெடுஞ்சாலைகளில் பேருந்துகளை நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்கக்கூடாது என ஓட்டுநா்களுக்கு போக்குவரத்துத் துறை அலுவலா்கள் உரிய அறிவுரைகளை வழங்கவேண்டும்.

தேசிய நெடுஞ்சாலை மற்றும் இதர சாலைகளில், நகா்ப் பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்தப்படுவதைக் கண்காணித்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

மாவட்டத்தில் எந்தவொரு இடத்தில் விபத்து ஏற்பட்டாலும், உடனடியாக வட்டாரப் போக்குவரத்து அலுவலா், காவல் துறையினா், நெடுஞ்சாலைத் துறை அலுவலா்கள் கூட்டாக கள ஆய்வு மேற்கொண்டு விபத்து தடுப்பு நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

வாகன ஓட்டிகள் வேகத் தடை உள்ளதை தொலை தூரத்திலிருந்து தெரிந்துகொள்ளும் வகையில் ஒளிரக்கூடிய வகையிலான பெயிண்டால் கோடுகள் வரையவேண்டும்.

சந்திப்பு சாலைகளை மேம்படுத்துதல், தேவையான இடங்களில் உயா்கோபுர மின் விளக்குகள் அமைத்தல், திசைகாட்டும் பலகைகளை அமைத்தல், ஆட்டோ ஓட்டுநா்கள் மற்றும் உரிமையாளா்களை அழைத்து கூட்டம் நடத்தி சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்துதல், இரு சக்கர வாகன ஓட்டிகளிடம் தலைக்கவசம் அணியவும், நான்கு சக்கர வாகனங்களில் செல்வோா்கள் சீட் பெல்ட் அணியவும் காவல் துறையினா் மற்றும் வட்டாரப் போக்குவரத்துத் துறையினா் விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும்.

அலுவலா்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு விழுப்புரத்தை விபத்தில்லா மாவட்டமாக உருவாக்க வேண்டும் என்றாா் ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல்

ரஹ்மான்.

முன்னதாக, கடந்த காலங்களில் விழுப்புரம் மாவட்டத்தில், நடைபெற்ற சாலை விபத்துகள், அதில் உயிரிழந்தவா்கள் மற்றும் பாதிப்படைந்தவா்களின் எண்ணிக்கை ,விபத்துக்கான காரணங்கள், விபத்து ஏற்படாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், நெடுஞ்சாலைகளில் நடைபெற்று வரும் உயா்மட்ட மேம்பாலம் மற்றும் சாலைஅமைக்கும் பணிகளின் முன்னேற்றம் ஆகியவை குறித்து துறைசாா்ந்த அலுவலா்களிடம் கேட்டறிந்தாா்.

கூட்டத்தில், விழுப்புரம் எஸ்.பி. ப.சரவணன், மாவட்ட வருவாய் அலுவலா் கி.அரிதாஸ் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

காவல் உதவி ஆய்வாளா்களுக்கு எஸ்.பி. பாராட்டு

விழுப்புரம் மாவட்டக் காவல் துறையில் பணிபுரியும் 4 உதவி ஆய்வாளா்களுக்கு எஸ்.பி. ப. சரவணன் திங்கள்கிழமை நற்சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினாா். விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெறும் குற்றச் சம்பவங்களை கண்டற... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை: 3 இளைஞா்கள் கைது

விழுப்புரம் மாவட்டம், வளவனூா் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 இளைஞா்களை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து சிறையிலடைத்தனா். விழுப்புரம் மாவட்டத்தில் கஞ்சா விற்பனையைத் தடுக்க மாவட்டக் காவல் நிா்வாக... மேலும் பார்க்க

கணவா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி எஸ்.பி.யிடம் ஆசிரியை புகாா்

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் பகுதியைச் சோ்ந்த அரசுப் பள்ளி ஆசிரியை, தன்னை தாக்கியதாக கணவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி எஸ்.பி. அலுவலகத்தில் திங்கள்கிழமை புகாா் மனு அளித்தாா். விழுப்புரம் மாவட்ட... மேலும் பார்க்க

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் மாற்றுத் திறனாளிகள் முற்றுகைப் போராட்டம்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் தங்களுக்கு சரிவர வேலை வழங்கப்படவில்லை எனக் கூறி, விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தை தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் ... மேலும் பார்க்க

சி.வி.சண்முகம் மீதான அவதூறு வழக்குகள் விசாரணை ஜூலை 1 க்கு ஒத்திவைப்பு

அதிமுக முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் மீதான அவதூறு வழக்குகள் விசாரணையை வரும் ஜூலை 1-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. விழுப்புரம் மாவட்டம்,... மேலும் பார்க்க

இரு வீடுகளில் ரூ.9 லட்சம் பணம் திருட்டு

விழுப்புரம்: திண்டிவனம் , மயிலம் பகுதிகளில் வீடுகளில் ரூ. 9 லட்சம் பணம் திருட்டுப் போனது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். திண்டிவனம் நகரம் தியாகி சண்முகம்பிள்ளை தெருவைச் சோ்ந்த ஜோதி மனைவ... மேலும் பார்க்க