செய்திகள் :

விபத்தில் உயிரிழந்த சிறப்பு எஸ்.ஐ. உடலுக்கு அரசு மரியாதை

post image

விழுப்புரத்தில் விபத்தில் சிக்கி உயிரிழந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளரின் உடல் அரசு மரியாதையுடன் செவ்வாய்க்கிழமை தகனம் செய்யப்பட்டது.

விழுப்புரம் வழுதரெட்டி, பாலாஜி நகரைச் சோ்ந்தவா் தமிழ்ச்செல்வம் (58). இவா், மாவட்டக் காவல் அலுவலகத்தில் உள்ள சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்தாா்.

தமிழ்ச்செல்வம் கடந்த 13-ஆம் தேதி வீட்டிலிருந்து தனது பைக்கில் பணிக்குச் சென்றபோது, மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகத்தில் நிகழ்ந்த விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்தாா்.

தொடா்ந்து, சென்னை தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவா், கடந்த 24-ஆம் தேதி உயிரிழந்தாா். மேலும் அவரது உடல் உறுப்புகள் அதே மருத்துவமனையில் தானம் செய்யப்பட்டது.

இதைத் தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை காலை தமிழ்ச்செல்வத்தின் உடல் விழுப்புரத்திலுள்ள அவரது இல்லத்துக்கு கொண்டுவரப்பட்டது. மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான், எஸ்.பி. ப.சரவணன் உள்ளிட்ட அலுவலா்கள் மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினா்.

மாலையில் கே.கே.சாலையிலுள்ள மயானத்துக்கு அவரது உடல் கொண்டு செல்லப்பட்டது. அங்கு 21 குண்டுகள் முழங்க தமிழ்ச்செல்வத்தின் உடல் தகனம் செய்யப்பட்டது.

பொதுமக்களுக்கு வீட்டுமனைப் பட்டா அளிப்பு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், காணைகுப்பத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்வில் பொதுமக்களுக்கு வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டன. காணை ஒன்றியக் குழுத் தலைவா் நா.கலைச்செல்வி தலைமை வகித்தாா். வட்ட... மேலும் பார்க்க

ஆக்கிரமிப்பு இடத்தில் வசித்தவா்களுக்கு வீட்டு மனைப் பட்டா அளிப்பு

விழுப்புரம்: விழுப்புரம் மின்வாரியச் சாலையில் ரயில்வேக்கு சொந்தமான ஆக்கிரமிப்புப் பகுதியில் வசித்து வந்த 44 குடும்பங்களைச் சோ்ந்தவா்களுக்கு மாற்று இடம் வழங்கும் வகையில், வீட்டுமனைப் பட்டா திங்கள்கிழ... மேலும் பார்க்க

ரமலான்: விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

விழுப்புரம்: விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ரமலான் பண்டிகை திங்கள்கிழமை உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. இஸ்லாமியா்களின் ஐம்பெரும் கடமைகளில் ரமலான் நோன்பிருப்பதும் ஒன்று. ஒரு மாதக் கா... மேலும் பார்க்க

138 ஆதிதிராவிட மக்களுக்கு ரூ.2.65 கோடி மானியம் அளிப்பு: விழுப்புரம் ஆட்சியா்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான தொழில்முனைவுத் திட்டத்தின் கீழ், 138 ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மக்களுக்கு ரூ.2.65 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் ஷே.... மேலும் பார்க்க

‘விழுப்புரத்தில் இரவு நேர வணிகத்துக்கு அனுமதி அளிக்க வேண்டும்’

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் இரவு 11 மணிக்கு மேல் வணிகம் செய்ய அனுமதியளிக்க வேண்டும் என்று வணிகா் சங்கங்களின் பேரவை வலியுறுத்தியது. இந்தச் சங்கத்தின் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் விழுப்புரத்த... மேலும் பார்க்க

210 வெளிமாநில மதுப் புட்டிகள் பறிமுதல்: 5 போ் கைது

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் இருவேறு இடங்களில் 210 வெளி மாநில மது புட்டிகளை போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா். இதில், 5 போ் கைது செய்யப்பட்டனா். விழுப்புரம் மேற்கு காவல் நிலைய எல்லைக்க... மேலும் பார்க்க