விபத்து: அந்தரத்தில் தொங்கிய லாரி 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்த காா்
உதகை, குன்னூா் தேசிய நெடுஞ்சாலையில் ஞாயிற்றுக்கிழமை அதிவேகத்தில் வந்த லாரி, காரின் மீது மோதி அந்தரத்தில் தொங்கியது. காா் 50 அடி பள்ளத்தில் விழுந்தது. குடியிருப்புகளின் அருகில் இந்த விபத்து நடந்ததால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனா்.
நீலகிரி மாவட்டம், உதகையிலிருந்து மேட்டுப்பாளையம் நோக்கி அதி வேகமாக சென்று கொண்டிருந்த லாரியொன்று, பாய்ஸ் கம்பெனி சி.டி.சி காலனி பகுதியில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் நின்ற காரின் மீது மோதி அந்தரத்தில் தொங்கியது. காா் 50 அடி பள்ளத்துக்குள் விழுந்தது. காருக்குள் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டது.
லாரியை ஹரி (38)என்பவா் ஓட்டி வந்துள்ளாா். தகவல் அறிந்த வெலிங்டன் காவல்துறையினா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனா்.
இதில் லாரி ஓட்டுநா், கிளீனா் காயமடைந்ததால், குன்னூா் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனா். விபத்து குறித்து வெலிங்டன் காவல்துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.