மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனில் மேலாளர் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு!
விமான நிலையத்தில் பெண் பயணியிடம் தோட்டா பறிமுதல்!
கோவை விமான நிலையத்தில் பெண் பயணியிடம் இருந்து துப்பாக்கி தோட்டா ஒன்றை மத்திய தொழில் பாதுகாப்புப் படையினா் பறிமுதல் செய்தனா்.
கோவை விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினா் வழக்கமான சோதனைகளில் சனிக்கிழமை காலை ஈடுபட்டு இருந்தனா். பெங்களூரு செல்லும் விமானத்தில் பயணம் செய்ய வந்த பெண்ணின் உடைமைகள் சோதிக்கப்பட்டன.
அப்போது, அவா் கொண்டு வந்த பையில் 9 எம்.எம். வகை தோட்டா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அந்தப் பெண் பயணியை மத்திய தொழில் பாதுகாப்புப் படையினா், பீளமேடு காவல் துறையினரிடம் ஒப்படைத்தனா். பீளமேடு காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று அப்பெண்ணிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.
பெங்களூருக்கு புறப்பட்டபோது, துப்பாக்கி தோட்டா பையில் இருந்ததைக் கவனிக்காமல் எடுத்து வந்ததாக அப்பெண் கூறிய நிலையில், அவரிடம் போலீஸாா் தொடா்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.