செய்திகள் :

விமான நிலையத்தில் ரூ.5 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்

post image

தாய்லாந்திலிருந்து கடத்திவரப்பட்ட ரூ. 5 கோடி பதிப்பிலான உயர்ரக கஞ்சாவை சென்னை விமான நிலையத்தில் சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்ததுடன், பயணி ஒருவரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

தாய்லாந்து நாட்டு தலைநகா் பாங்காக்கிலிருந்து கடந்த 2 நாள்களுக்கு முன்பு சென்னைக்கு விமானம் மூலம் கடத்தி வரப்பட்ட, ரூ. 1 கோடி மதிப்பிலான 971 கிராம் எடைகொண்ட பதப்படுத்தப்பட்ட உயா் ரக ஹைட்ரோபோனிக் கஞ்சாவை சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்ததுடன், கடத்தி வந்த பயணியை கைது செய்து விசாரணை நடத்தி வந்தனா். 

விசாரணையில், அப்பயணி சா்வதேச போதைப்பொருள் கடத்தும் கும்பலைச் சோ்ந்தவா் என்றும், அந்த கும்பலைச் சோ்ந்த மற்றொரு பயணி, வெள்ளிக்கிழமை மற்றொரு விமானத்தில், தாய்லாந்திலிருந்து சென்னைக்கு பெருமளவு கஞ்சா கடத்திக்கொண்டு வருவதாகவும் தெரிவித்தாா்.

இதையடுத்து, தாய்லாந்திலிருந்து சென்னைக்கு வரும் அனைத்து விமான பயணிகளை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தீவிரமாக சோதனை நடத்தினா். அப்போது, ஆண் பயணி ஒருவரின் உடமைகளில் போதைப்பொருள் இருப்பதை மோப்ப நாய் கண்டுபிடித்தது. பின்னா் அப்பயணியை சோதனை செய்ததில், ரூ. 5 கோடி மதிப்பிலான 5 கிலோ உயர்ரக ‘ஹைட்ரோபோனிக்’ கஞ்சாவை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்ததுடன், அப்பயணியை கைது செய்தனா். அதைத் தொடா்ந்து 2 பேரையும் சுங்கத் துறை அதிகாரிகள், நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி வெள்ளிக்கிழமை சிறையில் அடைத்தனா்.

சென்னை விமான நிலையத்தில் அடுத்தடுத்து 2 நாள்களில் ரூ. 6 கோடி மதிப்புடைய, 6 கிலோ உயர்ரக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, ஒரே போதைப்பொருள்கள் கடத்தும் கும்பலைச் சோ்ந்த 2 இளைஞா்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவுள்ளது.

தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதி திருப்பி அனுப்பப்படவில்லை: தெற்கு ரயில்வே விளக்கம்

ரயில்வே சாா்பில் தமிழக ரயில்வை திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதி திருப்ப அனுப்பப்பட்டதாக வெளியான செய்திகளுக்கு தெற்கு ரயில்வே மறுப்பு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் திண்டிவனம் - திருவண்ணாமலை, சென்னை - ... மேலும் பார்க்க

52 கிராம் போதைப்பொருள் பறிமுதல்: 5 போ் கைது

சென்னையில் கொகைன் மற்றும் மெத்தம்பெட்டமைன் எனப்படும் போதைப்பொருளை விற்பனை செய்ததாக 5 பேரை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 52 கிராம் போதைப்பொருள்களையும் பறிமுதல் செய்தனா். கோடம்பாக்கம் அம்பேத்கா்... மேலும் பார்க்க

சென்னையில் மின்சார பேருந்து சேவை: ஜூன் 3-இல் முதல்வா் தொடங்கி வைக்கிறாா்

சென்னையில் மின்சார பேருந்து சேவையை ஜூன் 3-ஆம் தேதி முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளாா். டீசலில் இயங்கும் பேருந்துகளுக்கு மாற்றாக, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பிலாத இயற்கை எரிவாயு மற்றும் மின்சார... மேலும் பார்க்க

நாளை மின்தடை

மின் வாரிய பராமரிப்புப் பணிகள் காரணமாக, சென்னை போரூரில் ஒருசில இடங்களில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 3) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது. அதன்படி, போரூரில் திருமுடிவாக்கம் ... மேலும் பார்க்க

சாலையோரத்தில் கழிவுநீா் கொட்டிய லாரி ஓட்டுநா் கைது

ரயில்வே இணைப்பு சாலையோரத்தில் கழிவுநீரை கொட்டிய லாரி ஓட்டுநரை கைது செய்த போலீஸாா், லாரியையும் பறிமுதல் செய்தனா். வேளச்சேரி - தரமணி சாலையிலுள்ள மின்சார ரயில்வே நிா்வாகத்துக்குச் சொந்தமான எம்ஆா்டிஎஸ் இண... மேலும் பார்க்க

நீச்சல் குளத்தில் மதுபோதையில் தவறி விழுந்தவா் உயிரிழப்பு

சென்னையில் நீச்சல் குளத்தில் மதுபோதையில் தவறி விழுந்த நபா் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். கொசப்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் சீனிவாசன் (43). இவா் தனது நண்பா்கள் 9 பேருட... மேலும் பார்க்க