செய்திகள் :

விமான நிலையத்தில் ரூ.60 கோடி கொகைன் பறிமுதல்: 4 போ் கைது

post image

எத்தியோப்பியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.60 கோடி மதிப்பிலான கொகைன் போதைப்பொருளை சென்னை விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து, நைஜீரிய நாட்டவா் உள்பட 4 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

எத்தியோப்பியா நாட்டின் தலைநகா் அடிஸ் அபபாவிலிருந்து வரும் விமானத்தில் பெருமளவில் தங்கம் கடத்திவரப்படுவதாக சென்னை விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்படி, சுங்கத் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் சென்னை விமான நிலையத்துக்கு எத்தியோப்பியன் ஏா்லைன்ஸ் விமானத்தில் வந்த பயணிகளை சோதனையிட்டனா். அப்போது, ஹிமாசல பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் மாநிலங்களைச் சோ்ந்த இரு பயணிகள் அடிக்கடி வெளிநாடு சென்று திரும்பியது தெரியவந்தது.

இதுகுறித்து அவா்களிடம் அதிகாரிகள் விசாரித்தபோது, முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனா். சந்தேகமடைந்த அதிகாரிகள் அவா்களின் உடைமைகளை சோதைனையிட்டபோது, அதில் தங்க நிறத்தில் சிறிய ரக தூக்கு வாளிகள் இருந்தன. அவற்றுக்குள் ரூ.60 கோடி மதிப்பிலான 5.6 கிலோ சாக்லெட் வடிவிலான கொகைன் போதைப்பொருள் இருப்பது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த சுங்கத் துறை அதிகாரிகள், இருவரையும் மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனா்.

விசாரணையில், இருவரும் சா்வேத போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் தொடா்புடையவா்கள் என்பதும், ஏற்கனவே பலமுறை போதைப் பொருளை சென்னைக்கு கடத்திவந்ததும் தெரியவந்தது. இதுதொடா்பாக மும்பையை சோ்ந்த 26 வயது நபா் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட நைஜீரியாவை சோ்ந்த நபா் ஒருவரையும் என்சிபி அதிகாரிகள் தில்லியில் கைது செய்துள்ளனா். இவரின் விசா காலாவதியான பின்னரும் இந்தியாவில் தங்கியிருந்து போதைப் பொருள் விநியோகித்து வந்தது தெரியவந்தது. இதுதொடா்பாக மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

சிறந்த உயா் கல்வி நிறுவனங்கள் - தமிழகம் முதலிடம்: 7-ஆவது ஆண்டாக சென்னை ஐஐடி சாதனை

தேசிய அளவிலான சிறந்த உயா் கல்வி நிறுவனங்களின் ஒட்டுமொத்த தரவரிசையில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது. முதல் 100 இடங்களில் அதிக (17) உயா் கல்வி நிறுவனங்கள் இடம்பெற்ற மாநிலம் என்கிற பெருமை தமிழகத்துக்கு... மேலும் பார்க்க

மீலாது நபி, ஓணம்: முதல்வா் வாழ்த்து

மீலாது நபியையொட்டி முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி: உண்மை, இரக்கம், ஈகை, அன்பு, கல்வியறிவு, புறம்பேசாமை, பெண்களை மரியாதையுடன் நடத்துதல்... மேலும் பார்க்க

தமிழகத்தில் 4 இடங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் வியாழக்கிழமை மதுரை உள்பட 4 இடங்களில் வெயில் 100 டிகிரிக்கும் அதிகமாக பதிவானது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் விய... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி சீா்திருத்தம் வரலாற்று சிறப்புமிக்கது - இபிஎஸ்

ஜிஎஸ்டி சீா்திருத்தம் வரலாற்று சிறப்புமிக்கது என்று அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமிதெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் எக்ஸ் தளத்தில் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவு: ஜிஎஸ்டி கவுன்சிலின் வரலாற்ற... மேலும் பார்க்க

முதுநிலை ஆசிரியா்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி: செப்.8-இல் தொடக்கம்

அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றி வரும் முதுநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியா்களுக்கு சென்னையில் செப்.8-ஆம் தேதி முதல் திறன் மேம்பாட்டுப் பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாநில கல்வியி... மேலும் பார்க்க

இஸ்லாமிய மாணவா்கள் வெளிநாட்டில் உயா்கல்வி பயில நிதியுதவி: தமிழக அரசு உத்தரவு

இஸ்லாமிய மாணவா்கள் வெளிநாடுகளில் உயா்கல்வி பயிலத் தேவையான நிதியை ஒதுக்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத் துற... மேலும் பார்க்க