செய்திகள் :

விமான நிலையம் அருகே பலூன், லேசர் பயன்படுத்தத் தடை

post image

சென்னை விமான நிலையம் அருகே பலூன்கள் மற்றும் லேசர் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை விமான நிலைய நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், விமானம் தரையிறங்கும்போது கீழே இருந்து லேசர் ஒளியை செலுத்தினால், விமானிக்கு சிரமத்தை ஏற்படுத்தும் என்பதால், விமான நிலையம் அருகே அதைப் பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

லேசர் மற்றும் பலூன்களை விமான நிலையம் அருகே பயன்படுத்தினால் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது.

சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கும் விமானங்கள் மீது பச்சை நிற லேசர் அடிக்கும் சம்பவங்கள் சமீபகாலமாக அதிகரித்து வரும் நிலையில், விமான நிலைய நிர்வாகம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

கடந்த இரு வாரங்களுக்கு முன்பு விமான நிலையத்தில் தரையிறங்கும்போது விமானத்தின் மீது பச்சை நிற லேசர் அடிக்கப்பட்டது. பின்னர் கட்டுப்பாட்டு அறைக்குத் தொடர்புகொண்டு விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.

ஜூன் 5ஆம் தேதி துபையில் இருந்து சென்னை வந்த எமிரேட்ஸ் விமானத்திலும் பச்சை நிற லேசர் அடிக்கப்பட்டது. இந்த ஒளி விமானியின் கண்களை கூசச் செய்வதால், வேறு வழியின்றி விமானத்தை சற்று மேலே எழுப்பி மீண்டும் விமான நிலையத்தில் பத்திரமாகத் தரையிறக்கினார்.

இவ்வாறு விமானங்கள் மீது லேசர் அடிப்பது தொடர்கதையாகிவருவதால், சென்னை விமான நிலையம் அருகே லேசர் மற்றும் பலூன்களைப் பயன்படுத்த விமான நிலைய நிர்வாகம் தடை விதித்துள்ளது.

டாஸ்மாக் முறைகேடு வழக்கு: ஆவணங்களை இன்று தாக்கல் செய்ய உயா்நீதிமன்றம் உத்தரவு

டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தில் திரைப்பட தயாரிப்பாளா் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபா் விக்ரம் ரவீந்திரன் ஆகியோருக்கு தொடா்பு இருப்பதற்கான ஆவணங்களை புதன்கிழமை தாக்கல் செய்ய அமலாக்கத் துறைக்கு சென்னை உயா்நீதி... மேலும் பார்க்க

தொல்லியல் துறை இயக்குநர் அமர்நாத் மீண்டும் இடமாற்றம்

நமது சிறப்பு நிருபர்கீழடி அகழ்வாராய்ச்சியின் தொடக்க காலத்தில் முக்கியப் பங்களிப்பை வழங்கியவராகக் கருதப்படும் இந்திய தொல்லியல் துறை இயக்குநர் கே. அமர்நாத் ராமகிருஷ்ணாவை, இந்திய தொல்லியல் ஆய்வுத் துறை ச... மேலும் பார்க்க

அரசுக் கல்லூரிகளில் மாணவா்கள் விரும்பி சேரும் நிலையை ஏற்படுத்தியவா் முதல்வா் ஸ்டாலின்: அமைச்சா் துரைமுருகன்

அரசுக் கல்லூரிகளில் மாணவா்கள் விரும்பி சேரும் நிலையை ஏற்படுத்தியவா் முதல்வா் மு.க.ஸ்டாலின் என மாநில நீா் வளம் மற்றும் சட்டத் துறை அமைச்சா் துரை முருகன் கூறினாா். தமிழ்நாடு டாக்டா் அம்பேத்கா் சட்டப்பல்... மேலும் பார்க்க

பெண்கள் மீதான குற்றங்களுக்கு போதைப் பொருள்களே காரணம்: ஜி.கே.வாசன்

பெண்கள் மீதான குற்றச் செயல்களுக்கு போதைப் பொருள்களே காரணம் என்று தமாகா தலைவா் ஜி.கே.வாசன் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்... மேலும் பார்க்க

தமிழகத்தில் மாம்பழக் கூழ் உற்பத்தி தொடக்கம்: அரசு தகவல்

தமிழகத்தில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் மாம்பழக் கூழ் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து மாநில அரசு சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தமிழ்ந... மேலும் பார்க்க

மாநகரில் குடிநீா் ஏடிஎம் இயந்திரங்கள்: முதல்வா் இன்று தொடங்கி வைக்கிறாா்

சென்னையில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் 50 குடிநீா் ஏடிஎம் இயந்திரங்களின் செயல்பாட்டை முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை தொடங்கி வைக்கிறாா். சென்னை மாநகரில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் சென... மேலும் பார்க்க