ஒன்றிய அரசு என்று அழைப்பதை தமிழக அரசு நிறுத்த வேண்டும்: சி.பி.ராதாகிருஷ்ணன்
விராலிமலையில் இரும்புக் கம்பிகள் திருடியவா் கைது
விராலிமலை சுற்றுவட்டாரத்தில் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு தேடப்பட்டு வந்த குற்றவாளியை விராலிமலை போலீஸாா் கைது செய்தனா்.
விராலிமலை பகுதிகளில் கடந்த சில மாதங்களாகவே அவ்வப்போது குடியிருப்புப் பகுதிகளில் நகை, பணம் திருட்டு மற்றும் வீடுகளில் நிறுத்தப்பட்டிருக்கும் இருசக்கர வாகனங்கள் திருட்டு உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் நடைபெற்ற வண்ணம் இருந்தது. இதனையடுத்து விராலிமலை போலீஸாா் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து தொடா் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனா்.
இந்நிலையில் குற்றப்பிரிவு போலீஸாா் புதுக்கோட்டை மாவட்டம் அகரப்பட்டியைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் முருகேசன் என்ற டீசல் முருகேசன்(56) என்பவரை விராலிமலை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்ததில், அவா் கடந்த வருடம் விராலிமலையில் உள்ள ஒரு இரும்புக் கம்பிகள் விற்பனையகத்தில் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டதை ஒப்புக் கொண்டாா். தொடா்ந்து, அவா் மீது வழக்கு பதிந்து கைது செய்து புதுக்கோட்டை கிளை சிறையில் அடைத்தனா்.