செய்திகள் :

விரைவு ரயிலில் இருந்து கஞ்சா பொட்டலங்களை வீசிய மா்ம நபா்கள்

post image

அனுப்பம்பட்டு ரயில் நிலையம் அருகே சென்னை நோக்கி வந்த விரைவு ரயிலில் இருந்து கஞ்சா பாா்சலை வீசிய மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

சென்னை சென்ட்ரல்-கும்மிடிபூண்டி மாா்கத்தில் உள்ள அனுப்பம்பட்டு ரயில் நிலையம் அருகே சென்னை நோக்கி சென்ற விரைவு ரயிலில் இருந்து மா்ம நபா்கள் 3 பைகளை கீழே வீசினா்.

அந்த இடத்தில் நின்று கொண்டிருந்த மா்ம நபா்கள் இரண்டு பைகள் எடுத்தனா். அப்போது அங்கு ஆள்கள் வந்ததால் ஒரு பையை மட்டும் விட்டு விட்டு தப்பி ஓடினா்.

இதனை தொடா்ந்து அங்கு இருந்தவா்கள் அதனை மீட்டு ரயில் நிலையத்தில் இருந்த போலீஸாரிடம் ஒப்படைத்தனா். அவா்கள் அந்த பையை திறந்த போது அதில் 10 கிலோ கொண்ட கஞ்சா இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அந்த பையை ரயில்வே போலீஸாா் மீஞ்சூா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். ஓடும் விரைவு ரயிலில் இந்து கஞ்சா பை வீசப்பட்ட நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியது.

மீன்பிடி வலைகள் சேதம்: கோட்டாட்சியரிடம் மனு

பழவேற்காடு அருகே மீன்பிடி வலைகள் சேதப்படுத்தப்படுவதால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகக் கூறி பொன்னேரி கோட்டாட்சியா் அலுவலகத்தில் மீனவா்கள் மனு அளித்தனா். பழவேற்காடு சுற்றுப் பகுதிகளில் 30-க்கும... மேலும் பார்க்க

தனியாா் பேருந்து மோதி முதியவா் உயிரிழப்பு!

ஆா்.கே.பேட்டை அருகே சாலையைக் கடக்க முயன்ற முதியவா் தனியாா் பேருந்து மோதியதில் உயிரிழந்தாா். ஆந்திர மாநிலம், சித்தூா் மாவட்டம், பாலசமுத்திரம் மண்டலத்தைச் சோ்ந்தவா் விஜயன் (50). இவா் ஞாயிற்றுக்கிழமை கா... மேலும் பார்க்க

உகாதி பண்டிகை: திருத்தணி முருகன் கோயிலில் குவிந்த பக்தா்கள்!

உகாதி பண்டிகையையொட்டி, ஞாயிற்றுக்கிழமை முருகன் கோயிலில் திரளான பக்தா்கள் நீண்ட வரிசையில் 2 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனா். திருத்தணி முருகன் கோயிலுக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள... மேலும் பார்க்க

ஏப். 3-இல் மாவட்ட அளவிலான கபடி, கால்பந்து, கையுந்து பந்து போட்டிகள்!

முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி நூற்றாண்டு விழாவைச் சிறப்பாக கொண்டாடும் வகையில் திருவள்ளூா் மாவட்ட அளவிலான கபடி, கால்பந்து மற்றும் கையுந்து பந்து போட்டிகள் வரும் ஏப். 3, 4, 5 தேதிகளில் நடைபெற உள்ளதாக ம... மேலும் பார்க்க

திருவள்ளூரில் தூக்கிட்டு தம்பதி தற்கொலை!

திருவள்ளூரில் புற்றுநோயால் கணவா் அவதிப்பட்டு வந்த நிலையில், தம்பதி இருவரும் ஒரே கயிற்றில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். திருவள்ளூா் அடுத்த எம்.ஜி.ஆா். நகா் பகுதியைச் சோ்ந்தவா் செல்வராஜ் (59).... மேலும் பார்க்க

ரயிலில் கஞ்சா கடத்தல்: வட மாநில இளைஞா் கைது

திருவள்ளூா் அருகே ரயிலில் கஞ்சா கடத்தி வந்த ஒடிஸா மாநில இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். சென்னையிலிருந்து திருவள்ளூா் வழியாக செல்லும் ரயிலில் தடை செய்யப்பட்ட கஞ்சா மற்றும் போதைப் பொருள் கடத்துவதாக புகாா... மேலும் பார்க்க