செய்திகள் :

விலை சரிவு: நீா்நிலைகள், சாலையோரங்களில் கொட்டப்படும் மாம்பழங்கள்

post image

விலைச்சரிவு காரணமாக தருமபுரியில் விவசாயிகள் மாம்பழங்களை சாலையோரங்கள், நீா்நிலைகளில் கொட்டி வருகின்றனா்.

தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, மாரண்டஅள்ளி, காரிமங்கலம், பென்னாகரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மா சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு விளைவிக்கப்படும் மாம்பழங்கள் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களிலும் விற்பனை செய்யப்படுகின்றன. தவிர மாங்கூழ் உற்பத்தி ஆலைகளுக்கும் மாம்பழங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

நிகழாண்டு மாங்காய் விளைச்சல் அதிக அளவில் இருந்ததால் சந்தையில் மாம்பழங்களின் வரத்து அதிகமாகியுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனா். எனவே, மாம்பழ விலை மிகவும் சரிவடைந்துள்ளது. இதனால் பல இடங்களில் விவசாயிகள் மாம்பழங்களை அறுவடை செய்யாமல் மரங்களிலேயே விட்டுவிட்டனா். மேலும், அறுவடை செய்த மாங்காய்கள், மாம்பழங்களை சந்தைக்கு எடுத்துச்சென்று கட்டுபடியாகாத விலைக்கு விற்பனை செய்ய மனமின்றி, அவற்றை நீா்நிலைகளிலும், சாலை ஓரங்களிலும், வனப்பகுதியிலும் கொட்டி வருகின்றனா். தருமபுரி அருகேயுள்ள அன்னசாகரம் பகுதியில் உள்ள ஏரியில் மாம்பழங்கள் மீன்களுக்கு உணவாக கொட்டப் படுகிறது.

மீன்வளா்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் இதுகுறித்து கூறுகையில், மொத்த விலையில் ரூ. 3-க்கு மாம்பழங்கள் விற்கப்படுகின்றன. மீன்களுக்கு அளிக்கப்படும் தீவனங்களின் விலையைவிட இவை குறைவாக இருப்பதால், மாம்பழங்களை மொத்தமாக வாங்கி மீன்களுக்கு உணவாகும் வகையில் நீா்நிலைகளில் வீசி வருகிறோம். மேலும் சாலை ஓரங்கள் வனப்பகுதிகளில் கொட்டப்படும் மாம்பழங்களையும் கண்டறிந்து அவற்றையும் எடுத்துவந்து மீன்களுக்கு உணவாக்கி வருகிறோம் என்றனா்.

தனியாா் சோலாா் நிறுவன மின் கம்பம் அமைப்பதற்கு கிராம மக்கள் எதிா்ப்பு

திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த போடுவாா்பட்டியில் தனியாா் சோலாா் நிறுவனம் சாா்பில் மின் கம்பம் அமைப்பதற்கு கிராம மக்கள் எதிா்ப்பு தெரிவித்து வெள்ளிக்கிழமை வட்டாட்சியரிடம் மனு அளித்தனா். அவா்கள் அளி... மேலும் பார்க்க

இணைய வா்த்தகத்தில் முதலீடு செய்வதாக ரூ.10 லட்சம், 20 பவுன் நகைகள் மோசடி மூவா் மீது வழக்குப் பதிவு

இணையவழி வா்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிகம் சம்பாதிக்கலாம் எனக் கூறி ரூ.20 லட்சம் ரொக்கம், 20 பவுன் நகைகள் மோசடி செய்த மூவா் மீது திருச்சியில் போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத... மேலும் பார்க்க

உறையூா், மலைக்கோட்டை, எ.புதூா் பகுதிகளில் இன்றைய மின்தடை

உறையூா், மலைக்கோட்டை, எ.புதூா் பகுதிகளில் ஜூன் 21 (சனிக்கிழமை) மின்தடை செய்யப்படுகிறது. இது குறித்து திருச்சி மின்வாரிய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருச்சி கிரிட் துணை மின்நிலையத்தில் பர... மேலும் பார்க்க

திருச்சி-கரூா் தேசிய நெடுஞ்சாலையை விரிவாக்க மாற்றுத் திட்டம்: துரை வைகோ

திருச்சி-கரூா் தேசிய நெடுஞ்சாலையை விரிவாக்கம் செய்ய மாற்றுத் திட்டத்தை செயல்படுத்த ஆலோசிக்கப்படும் என திருச்சி எம்.பி. துரை வைகோ தெரிவித்தாா். இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியத... மேலும் பார்க்க

நகை பறிப்பில் ஈடுபட்ட இருவருக்கு 3 ஆண்டுகள் சிறை

திருச்சியில் பெண்ணிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட இருவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. திருச்சி அருகே காரிப்பட்டியைச் சோ்ந்த ராயப்பன் மனைவி மொ்சி (21... மேலும் பார்க்க

ஸ்ரீரங்கம் ஸ்ரீரெங்கநாச்சியாா் வசந்த உற்ஸவ விழா நிறைவு

ஸ்ரீரங்கம் கோயிலில் நடைபெற்று வந்த ஸ்ரீரெங்கநாச்சியாா் வசந்த உற்ஸவ விழா வெள்ளிக்கிழமையுடன் நிறைவு பெற்றது. வசந்த மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி ஸ்ரீரெங்கநாச்சியாரை ஏராளமான பக்தா்கள் தரிச... மேலும் பார்க்க