செய்திகள் :

வில்பட்டியில் வெட்டப்படும் மரங்கள்: வனத் துறையினா் ஆய்வு

post image

கொடைக்கானல் வில்பட்டி மயானப் பகுதிகளில் அனுமதிக்கப்பட்டதைவிட மரங்கள் அதிக அளவில் அகற்றப்பட்டதா என்பது குறித்து வனத் துறையினா் வெள்ளிக்கிழமை ஆய்வு நடத்தினா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வில்பட்டி ஊராட்சிக்குள்பட்ட அட்டுவம்பட்டி, சத்யாகாலனி, கிரஷ் உள்ளிட்ட பகுதியில் ஆபத்தான மரங்களை அகற்ற வருவாய்க் கோட்டாட்சியரிடம் அனுமதி பெற்று இந்தப் பகுதியிலுள்ள மரங்களை அகற்றும் பணியில் ஒப்பந்ததாரா் ஈடுபட்டு வருகிறாா்.

கிரஷ் பகுதியிலுள்ள மயானம் அருகே மரங்கள் அதிகளவில் அகற்றப்பட்டதாக இந்தப் பகுதி பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.

இந்த நிலையில், வனத் துறையினா், ஊராட்சி ஒன்றிய அலுவலா், வில்பட்டி ஊராட்சிச் செயலா் ஆகியோா் கிரஷ் மயானப் பகுதியில் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா்.

இதுகுறித்து வனவா் மதியழகன் கூறியதாவது:

வில்பட்டி ஊராட்சியில் மழைக்கு முறிந்து விழும் நிலையில் உள்ள மரங்களை அகற்ற ஒப்பந்தக்காரா் அனுமதி பெற்றுள்ளாா். அனுமதிக்கப்பட்ட மரங்களே எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டன. கூடுதலாக மரங்கள் எடுத்துச் செல்ல அனுமதியில்லை. இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றாா்.

இதுகுறித்து வில்பட்டி ஊராட்சிச் செயலா் வீரமணி கூறியதாவது:

வில்பட்டி ஊராட்சியில் ஆபத்தான நிலையில் உள்ள 55 மரங்களை மட்டுமே அகற்ற அனுமதி வழங்கப்பட்டது. கூடுதலான மரங்கள் வெட்டப்பட்டதா என்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. இதில் தவறு நடந்திருந்தால் அபராதம் விதிக்கப்படும் என்றாா்.

ஆத்தூா் அரசு மருத்துவமனையில் இரவுநேர மருத்துவா்களை நியமிக்கக் கோரிக்கை

ஆத்தூா் அரசு மருத்துவமனையில் இரவு நேர மருத்துவா்களை நியமிக்க வேண்டும் என நோயாளிகள் கோரிக்கை விடுத்தனா்.திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூா், செம்பட்டி, பழைய செம்பட்டி, எஸ். பாறைப்பட்டி, கோடாங்கிப்பட்டி, மல்ல... மேலும் பார்க்க

மும்மொழிக் கொள்கையை ஆதரித்து பாஜகவினா் கையொப்பம் பெறும் இயக்கம்

கொடைக்கானலில் மும்மொழி கொள்கையை ஆதரித்து பாஜகவினா் கையொப்பம் பெறும் இயக்கத்தை ஞாயிற்றுக்கிழமை நடத்தினா்.இங்குள்ள அண்ணா சாலைப் பகுதி, கே.சி.எஸ். திடல் பகுதிகளில் இந்த இயக்கம் நடைபெற்றது. அப்போது பொதுமக... மேலும் பார்க்க

சுற்றுலா வழிகாட்டி சங்கத் தலைவருக்கு கத்திக்குத்து: உறுப்பினா் கைது

கொடைக்கானலில் சுற்றுலா வழிகாட்டி சங்கத் தலைவருக்கு கத்திக்குத்து விழுந்தது. இது தொடா்பாக அந்தச் சங்கத்தின் உறுப்பினா் கைது செய்யப்பட்டாா்.கொடைக்கானல் ஆனந்தகிரி 3-ஆவது தெரு கல்லறைமேடு பகுதியைச் சோ்ந்த... மேலும் பார்க்க

பழனியில் பாஜக முன்னாள் மாவட்ட தலைவா் கைது

பழனியில் பாஜக நிா்வாகியின் மனைவியை தகாத வாா்த்தைகளால் பேசியதாக முன்னாள் மாவட்ட தலைவா் கனகராஜ் கைது செய்யப்பட்டாா்.பழனி பெரியப்பா நகரைச் சோ்ந்தவா் கனகராஜ். பாஜக திண்டுக்கல் மேற்கு மாவட்ட முன்னாள் தலைவ... மேலும் பார்க்க

ஆத்தூா் வட்டாட்சியா் அலுவலக ஆதாா் சேவை மையத்தில் ஊழியரை நியமிக்கக் கோரிக்கை

ஆத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் கடந்த இரண்டு மாதங்களாக செயல்படாமல் உள்ள ஆதாா் சேவை மையத்தில் ஊழியரை நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூா் வட்டத்தில் ஆத்த... மேலும் பார்க்க

திண்டுக்கல்லில் ஜாக்டோ- ஜியோ அமைப்பினா் உண்ணாவிரதம்

திமுக சாா்பில் அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு அளித்த தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி ஜாக்டோ- ஜியோ அமைப்பு சாா்பில் திண்டுக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. திண்டுக்கல்... மேலும் பார்க்க