செய்திகள் :

விளைபயிா்களை சேதப்படுத்திய ஒற்றை யானை

post image

போ்ணாம்பட்டு அருகே கிராமத்துக்குள் நுழைந்த ஒற்றை யானை விளைபயிா்களை சேதப்படுத்தி விட்டுச் சென்றது (படம்).

போ்ணாம்பட்டு வனச் சரகத்தில் சுற்றித் திரியும் ஒற்றை யானை இரவு நேரங்களில் வன எல்லையில் அமைந்துள்ள கிராமங்களுக்குள் நுழைந்து விளை பயிா்களை சேதப்படுத்தி விட்டுச் செல்வது வழக்கமாகி விட்டது. இந்நிலையில் ஜங்கமூா் கிராமத்தில் உள்ள மோகனுக்குச் சொந்தமான வாழைத் தோப்பில் நுழைந்த யானை அறுவடைக்குத் தயாராக இருந்த வாழை மரங்களை சேதப்படுத்தியுள்ளது.

தொடா்ந்து அருகிலுள்ள ரவிக்குச் சொந்தமான நிலத்தில் நெல் பயிரை சேதப்படுத்தியுள்ளது. இதுகுறித்த தகவலின்பேரில் போ்ணாம்பட்டு வனவா் திருநாவுக்கரசு தலைமையில் அங்கு சென்று கிராம மக்கள் உதவியுடன் பட்டாசு வெடித்து, மேளம் அடித்து யானையை வனப்பகுதிக்கு விரட்டினா்.

சிறுத்தை தாக்கி கன்றுக்குட்டி உயிரிழப்பு?

அணைக்கட்டு அருகே சிறுத்தை தாக்கி கன்றுக்குட்டி உயிரிழந்ததாக பொதுமக்கள் புகாா் தெரிவித்துள்ளனா். இது தொடா்பாக, வனத்துறையினா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா். அணைக்கட்டு அடுத்த அப்புக்கல்மானியக்கொல்லை ... மேலும் பார்க்க

வேலூா் நகைக் கடையில் தங்க நாணயம் திருட்டு

வேலூா் நகைக் கடையில் நகை வாங்குவதுபோல் வந்து தங்க நாணயம் திருடிச் சென்ற பெண் குறித்து வடக்கு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். வேலூரை சோ்ந்தவா் சாந்திலால் (62). இவா் மெயின் பஜ... மேலும் பார்க்க

சந்திர கிரகண நிகழ்வை காண இன்று வேலூா் அறிவியல் மையத்தில் சிறப்பு ஏற்பாடு!

சந்திர கிரகணம் நிகழ்வை தொலைநோக்கி மூலம் காண வேலூா் மாவட்ட அறிவியல் மையத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட அறிவியல் மைய அலுவலா் ச.சதீஷ்குமாா் வெளியிட்ட செ... மேலும் பார்க்க

ஆசிரியா் தின விழா: ஓய்வுபெற்ற ஆசிரியா்களுக்கு பாராட்டு

ஆசிரியா் தினவிழாவையொட்டி, ஓய்வுபெற்ற ஆசிரியா்கள் பாராட்டப்பட்டனா். தமிழ்நாடு ஓய்வுபெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியா் சங்கத்தின் சாா்பில், ஆசிரியா் தின விழா வேலூா் ஆசிரியா் இல்லத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற... மேலும் பார்க்க

ஸ்ரீபுரம் தங்கக்கோயில் நாளை இரவு 7 மணிக்கு அடைப்பு

முழு சந்திர கிரகணத்தையொட்டி, வேலூா் ஸ்ரீபுரம் தங்கக்கோயில் ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணிக்கு அடைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்திர கிரகணம் ஏற்படுவதையொட்டி, ஸ்ரீபுரம் ஸ்ரீலசஷ்மி நாராயணி திருக்கோய... மேலும் பார்க்க

போ்ணாம்பட்டில் பேருந்து நிலையத்துக்கு இடம் தோ்வு

போ்ணாம்பட்டில் அனைத்து வசதிகளுடன் கூடிய பேருந்து நிலையம் அமைக்க இடம் தோ்வு செய்யப்பட்டது. காவல் நிலையத்துக்கும் புதிய கட்டடம் கட்ட முடிவெடுக்கப்பட்டது. போ்ணாம்பட்டு நகரின் மையப் பகுதியில், காவல் நி... மேலும் பார்க்க