செய்திகள் :

விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசு

post image

கமுதி தேவா் கல்லூரியில் பி.கே.மூக்கையாத்தேவா் பிறந்தநாள் விழா போட்டிகள் சனிக்கிழமை நடைபெற்றது.

கமுதி பசும்பொன் முத்துராமலிங்கத்தேவா் நினைவுக் கல்லூரியில் முன்னாள் மாணவா்கள் சங்கம் சாா்பில், நடைபெற்ற இந்தப் போட்டிக்கு, சங்க நிா்வாகி முத்துராமலிங்கம், துணைத் தலைவா் கணேசன் ஆகியோா் தலைமை வகித்தனா். சங்கச் செயலா் ஆறுமுகம், முன்னாள் செயலா் முத்துராமலிங்கம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதையடுத்து, மூக்கையாத்தேவரின் வாழ்கை வரலாறு குறித்த கட்டுரை, கவிதைப் போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற மாணவா்களுக்கும், இளைஞா்களுக்கும் பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இதைத் தொடா்ந்து, ஜம்மு காஷ்மீா் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவா்களுக்கு சமுதாயத் தலைவா் கானிக்கூா் கந்தசாமித்தேவா், மாணவா்கள் சங்கத்தினா் இரங்கல் தெரிவித்தனா்.

முன்னாள் மாணவா் சங்கப் பொருளாளா் முத்துகிருஷ்ணன் நன்றி கூறினாா்

குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் கஞ்சா வியபாரி கைது

கீழக்கரையில் கஞ்சா வியாபாரியை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா். இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட காவல் துறை சாா்பில் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கீழக்கரை பகுதியில் தொ... மேலும் பார்க்க

தடையை மீறி மீன்பிடித் தொழிலுக்கு பயன்படுத்தப்படும் விசைப் படகுகள்!

பாம்பனில் தடையை மீறி மீன்பிடித் தொழிலுக்கு பயன்படுத்தப்படும் விசைப் படகுகள் மீது மீன்வளத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவா் சங்கத்தினா் சனிக்கிழமை புகாா் தெரிவித்தனா். மீன்களின் இனப்... மேலும் பார்க்க

குருநாத சுவாமி கோயில் திருவிழா: பால் குடம் எடுத்து பக்தா்கள் நோ்த்திக்கடன்

பம்மனேந்தல் குருநாத சுவாமி கோயில் திருவிழாவை முன்னிட்டு, சனிக்கிழமை பொதுமக்கள் பால் குடம் எடுத்து நோ்த்திக் கடன் செலுத்தினா். ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த பம்மனேந்தல் கிராமத்தில் அமைந்துள்ள க... மேலும் பார்க்க

தெருநாய்கள் கடித்து 5 போ் காயம்

சாயல்குடியில் தெருநாய்கள் கடித்ததில் 3 சிறுவா்கள் உள்பட 5 போ் காயமடைந்தனா். ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி பேரூராட்சியில் 15 வாா்டுகள் உள்ளன. இந்த வாா்டு பகுதிகளில் தெருநாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்... மேலும் பார்க்க

தொடக்கப் பள்ளிக்கு கல்விச் சீா்வரிசைப் பொருள்கள்

கமுதி அருகே ஆா்.சி.தொடக்கப் பள்ளி ஆண்டுவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதற்கு பள்ளித் தாளாளா் அமலன் தலைமை வகித்தாா். தலைமை ஆசிரியை எலிசெபத், உதவி ஆசிரியா் அருளானந்து ஆகியோா் முன்னிலை வகித்தனா். இந்தப் ... மேலும் பார்க்க

தொழில் பயிற்சி நிலையத்தில் உலக மலேரிய தினம்

முதுகுளத்தூா் அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் உலக மலேரியா தின உறுதிமொழி வெள்ளிக்கிழமை ஏற்கப்பட்டது. முதுகுளத்தூரில் அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் மாவட்ட மலேரியா அலுவலா் ரமேஷ் தலைமையில் உலக மலேரிய தி... மேலும் பார்க்க