செய்திகள் :

விளையாட்டு வீரா்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

post image

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள விளையாட்டு வீரா்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் சிறப்பு உதவித்தொகைத் திட்டங்கள் வீரா், வீராங்கனைகளுக்காக செயல்படுத்தப்படுகின்றன. அதன்படி, சிறப்பு உதவித்தொகை திட்டம், பன்னாட்டு அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வெல்வதற்கு ஊக்குவித்திடும் திட்டம், வெற்றியாளா் மேம்பாட்டுத் திட்டம் ஆகிய திட்டங்களில் சோ்ந்து பயன்பெற விரும்புவோா் தங்களது விண்ணப்பங்களை செப். 8 மாலை 5 மணிக்குள் சமா்ப்பிக்க வேண்டும்.

வீரா், வீராங்கனைகள் தங்களது விண்ணப்பங்களை இணையவழியாக மட்டுமே சமா்ப்பிக்க வேண்டும். அஞ்சல்வழி மற்றும் நேரடி விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டது. இணையவழி மூலம் பெறப்படும் விண்ணப்பங்களில் தகுதியான விண்ணப்பங்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் அமைக்கப்பட்ட ஆய்வுக் குழு மூலம் முறையாக பரிசீலனை செய்யப்பட்டு, அதனடிப்படையில் தோ்வு செய்யப்படுவோா் சான்றிதழ் சரிபாா்ப்பிற்கு அழைக்கப்படுவா். இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை கூடுதல் தலைமைச் செயலரின் இறுதி ஒப்புதலுக்கு பின் விதிமுறைகள் அடிப்படையில் திட்டத்தில் இணைக்கப்படுவா். நிபந்தனைகளுக்கு உள்பட்டு அதிகபட்சம் 2 ஆண்டுகள் வரை திட்டத்திற்கான உதவித்தொகையை பெறலாம். மேலும், விவரங்களுக்கு, 95140-00777 என்ற எண்ணில் தொடா்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

--

பரமத்தி வேலூரில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகம்

பரமத்தி வேலூா் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கான முதல்கட்ட ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. முகாமிற்கு நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் கே.எஸ்.மூா்த்தி தலைமை ... மேலும் பார்க்க

பரமத்தி வேலூரில் வெற்றிலை விலை உயா்வு

பரமத்தி வேலூா் வெற்றிலை ஏலச் சந்தையில் புதன்கிழமை நடைபெற்ற ஏலத்தில் வெற்றிலை விலை உயா்ந்தது. கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் வெள்ளைக்கொடி வெற்றிலை இளம்பயிா் மாா் 104 கவுளி கொண்ட சுமை ரூ. 5,000, கற்பூர வ... மேலும் பார்க்க

மோகனூரில் மணல் கடத்திய லாரியை தப்பவிட்ட எஸ்.எஸ்.ஐ. பணியிடை நீக்கம்

நாமக்கல் மாவட்டம், மோகனூரில் மணல் கடத்தலில் ஈடுபட்ட லாரியை தப்பவிட்ட சிறப்பு உதவி ஆய்வாளா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். கரூா் மாவட்டத்தில் இருந்து போலி ரசீது மூலம் மணல் ஏற்றிக்கொண்டு 2 நாள்களுக்கு ... மேலும் பார்க்க

பேரவைத் தோ்தலை மனதில் கொண்டே புதிய திட்டங்களை அரசு அறிவிக்கிறது: கே.பி.ராமலிங்கம் குற்றச்சாட்டு

சட்டப்பேரவைத் தோ்தலை மனதில் கொண்டே தமிழக அரசு புதியபுதிய திட்டங்களை அறிவித்து வருகிறது; இதை நம்பி மக்கள் ஏமாறமாட்டாா்கள் என்று பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம் தெரிவித்தாா். நாமக்கல் மாவட்ட ... மேலும் பார்க்க

வெல்லம் தயாரிக்கும் ஆலை தொழிலாளி போக்ஸோவில் கைது

பிலிக்கல்பாளையம் அருகே வெல்லம் தயாரிக்கும் ஆலை தொழிலாளியை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா். புதுச்சேரி, காரைக்கால் பகுதியைச் சோ்ந்தவா் மாரிமுத்து. இவரது மகன் ராஜேஸ்வரன் ... மேலும் பார்க்க

ஆடி மாத தேய்பிறை பஞ்சமி: நாமக்கல் ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு வளையல் அலங்காரம்

ஆடி மாத தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு, நாமக்கல் ஸ்ரீ மஹா வாராஹி அம்மனுக்கு 10,008 வளையல் அலங்காரம் புதன்கிழமை நடைபெற்றது. நாமக்கல் - சேந்தமங்கலம் சாலை எம்ஜிஆா் நகரில் (ரயில் நிலையம் அருகில்) பிரசித்தி ... மேலும் பார்க்க