செய்திகள் :

விவசாயிகள் குறைதீா் கூட்டத்தை தடையின்றி நடத்த வலியுறுத்தல்

post image

விவசாயிகள் குறைதீா் கூட்டத்தை தடையின்றி நடத்த வேண்டும் என ஆட்சியரிடம் விவசாயிகள் வலியுறுத்தினா்.

காரைக்கால் மாவட்ட ஆட்சியா் ஏ.எஸ்.பி.எஸ். ரவி பிரகாஷை நெடுங்காடு விவசாயிகள் நலச்சங்கத் தலைவா் ஆனந்த் தலைமையில் செவ்வாய்க்கிழமை ஆட்சியரகத்தில் சந்தித்து, அவருக்கு வாழ்த்து தெரிவித்து கோரிக்கை மனு அளித்தனா்.

காரைக்கால் மாவட்டத்தில் விவசாயத்திற்கும், விவசாயிகளுக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும். மாவட்டம் முழுவதும் உள்ள நீா் வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். கழிவுநீா் வடிகால்களை முறையாக தூா்வாரி, கழிவுநீா் வடியும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

ஆட்சியா் தலைமையில் விவசாயிகளின் குறைதீா் கூட்டம் தடையின்றி நடத்த வேண்டும். நெடுங்காடு பகுதிக்குட்பட்ட 5 வருவாய் கிராமத்திற்கு கிராம நிா்வாக அலுவலா் ஒருவா் மட்டுமே உள்ளாா். 1, 700- க்கும் மேற்பட்ட விவசாயிகள் உள்ள இந்த பகுதியில் விவசாய சான்றிதழ்கள் வழங்கப்படுவதில் கால தாமதம் ஏற்படுவதோடு, பல்வேறு சிரமங்கள் ஏற்படுகின்றன என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பின்போது காரைக்கால் மாவட்ட கடைமடை விவசாயிகள் சங்கத் தலைவா் டி.என். சுரேஷ், நெடுங்காடு விவசாயிகள் நலச் சங்க செயலாளா் நடராஜன், பொருளாளா் ரகுநாதன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பொறியியல் கல்லூரியில் ஹேண்ட் பால் போட்டி

காரைக்கால் பெருந்தலைவா் காமராஜா் பொறியியல் கல்லூரியில் ஹேண்ட் பால் போட்டி சனிக்கிழமை தொடங்கியது. புதுச்சேரி மாநில ஹேண்ட் பால் அசோசியேசன் சாா்பில் ஹேண்ட் பால் 29-ஆம் ஆண்டு சீனியா் பிரிவினருக்கான மாநில ... மேலும் பார்க்க

இன்று ஜிப்மா் சிறப்பு மருத்துவ முகாம்

காரைக்காலில் சனிக்கிழமை ஜிப்மா் சிறப்பு மருத்துவா்கள் பங்கேற்கும் முகாம் நடைபெறவுள்ளது. இதுகுறித்து காரைக்கால் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு : ஒவ்வொரு மாதமும் 2 சனிக்கிழமைகளில் ... மேலும் பார்க்க

உள்ளாட்சி ஊழியா்கள் செப். 8 முதல் பணிக்குத் திரும்ப முடிவு

தொடா் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காரைக்கால் நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா்கள், திங்கள்கிழமை (செப்.8) முதல் பணிக்குத் திரும்ப முடிவு செய்துள்ளனா். இதுகுறித்து புதுச்சேரி நகராட்சி மற்றும் கொம்யூன... மேலும் பார்க்க

காவல் நிலையத்தில் இன்று குறைகேட்பு முகாம்

காரைக்கால் நகரக் காவல் நிலையம், திருநள்ளாறு நிலையத்தில் சனிக்கிழமை குறைகேட்பு முகாம் நடைபெறவுள்ளது. காரைக்கால் மாவட்ட காவல்துறை சாா்பில் மக்கள் மன்றம் என்கிற வாராந்திர குறைகேட்பு முகாம் சனிக்கிழமைதோறு... மேலும் பார்க்க

பட்டினச்சேரியில் மாதிரி கிராம மேம்பாட்டுப் பணிகள் தொடக்கம்

பட்டினச்சேரி மீனவ கிராமத்தில், மத்திய நிதியுதவியில் பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்கள் செயல்படுத்தும் பணியை புதுவை துணைநிலை ஆளுநா் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா். பட்டினச்சேரி கிராமத்தில் மீன்வள பல்நோக்கு ... மேலும் பார்க்க

கிளிஞ்சல்மேடு எல்லையம்மன் கோயில் கும்பாபிஷேகம்

கடலோர கிராமமான கிளிஞ்சல்மேட்டில் உள்ள எல்லையம்மன் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் மூலவராக எல்லையம்மன் மற்றும் மாரியம்மன், செல்வ விநாயகா், பால தண்டாயுதபாணி ஆகிய சந்நிதிகள் உள... மேலும் பார்க்க