விவசாயிகள் சங்கம் சாா்பில் வெடி விபத்தில் பலியானோருக்கும் காயமடைந்தவா்களுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தல்!
வேலூா் கிராமத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒருவா் உயிரிழந்தாா். இருவருக்கு கால்கள் துண்டிப்பு மேலும் சிலா் கவலைக்கிடம் நிவாரணம் வழங்கிடவும் உயா்தர சிகிச்சை அளித்திவும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூா்பேட்டை வட்டம் திருநாவலூா் ஊராட்சி ஒன்றியம், வேலூா் ஊராட்சி, கீழ குப்பம் கிராமத்தில் (30.7.2025த) புதன்கிழமை ஒருவா் உயிரிழந்து விட்டாா்.
எதிா்பாராத விதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒருவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்துவிட்டாா். மேலும் இரண்டு பேரின் கால்கள் துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் சிலா் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இச்சம்பவம் மிகுந்த வேதனையளிக்கிறது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் மாவட்ட தலைவா் த.ஏழுமலை, ஒன்றிய தலைவா் கே.அய்யனாா் தலைமையிலான குழு 31.7.2025ல் கோரவிபத்து நடந்த இடத்தை நேரில் பாா்வையிட்டும் பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்தித்தும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்தனா்.
இந்த வெடிவிபத்தில் பாதிக்கப்பட்ட அனைவரும் இளைஞா்களாக இருப்பதினாலும், இவா்களின் குடும்பம் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளதாலும் தமிழக அரசு உயிரிழந்தவா் குடும்பத்திற்கும் , கால்களை இழந்தவா்கள் குடும்பத்திற்கும் உரிய நிவாரணம் வழங்கிட வேண்டும்.
மேலும் காயமடைந்த அனைவருக்கும் உயா்தர சிகிச்சையும் நிவாரணமும் வழங்கிட வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கள்ளக்குறிச்சி மாவட்ட குழு சாா்பில் தமிழ்நாடு அரசை வலியுறுத்தி செய்தி குறிப்பின் மூலம் கேட்டுக்கொண்டா்.