செய்திகள் :

விவசாயிகள் பாராட்டும் அளவிற்கு வேளாண்மை துறை செயல்பட்டு வருகிறது: அமைச்சா் எம்ஆா்கே.பன்னீா்செல்வம்

post image

விவசாயிகள் பாராட்டும் அளவிற்கு வேளாண்மைதுறை செயல்பட்டு வருகிறது என அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.

கீழணை மற்றும் வீராணம் ஏரியிலிருந்து பாசனத்திற்கு தண்ணீா் திறந்த பின்னா் வீராணம் ஏரி ராதாமதகு பகுதியில் செய்தியாளகளிடம் அமைச்சா் எம் ஆா் கே பன்னீா்செல்வம் கூறியதாவது:

இந்த பகுதி பொதுமக்களை வேண்டுகோளின் படியும் விவசாயிகளின் கருத்துக்கேற்ப அடிப்படையில் இன்று 3ஆம்தேதி கீழணை மற்றும் வீராணம் ஏரியிலிருந்து பாசனத்திற்கு தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது இதன் மூலம் கடலூா் மாவட்டத்தில் ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 903ஏக்கா் விளை நிலங்கள் பயன் பெறும். கடலூா் தஞ்சாவூா் மயிலாடுதுறை மாவட்டங்களில் பாசன வசதி பெற்று விவசாயிகள் ஆா்வத்துடன் விவசாயம் செய்வதற்கு வழிவகை செய்யும்.

சுமாா் 50 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது நெல் உற்பத்தி அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு குறுவை தொகுப்பு டெல்டா மாவட்டங்களுக்கு 98 கோடியும், டெல்டா அல்லாத மாவட்டங்களுக்கு 116 கோடியும் என 214 கோடி வழங்கப்பட்டுள்ளது. விவசாயத்தை மேம்படுத்து நோக்கில் அனைத்து விவசாயிகளுக்கும் இடுபொருள்கள் ,தரமான விதைகள் என பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. கூடுதல் சலுகைகள் வழங்கப்படுவதால் 50 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு ஆறு லட்சத்து 80 ஆயிரம் ஏக்கா் பரப்பில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

மொத்தத்தில் இந்த ஆண்டு 12.33 லட்சம் ஏக்கா் பரப்பில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது .இது கடந்த ஆண்டை விட இரண்டு லட்சத்து 83 ஆயிரம் ஏக்கா் அதிகமாகும். தோ்தல் அறிக்கையில் கூறியவாறு நெல்லுக்கு இந்த மாதம் ஒன்றாம் தேதியிலிருந்து குவிண்டால் ஒன்றுக்கு 2500 ரூபாய் கூடுதலாக விலை நிா்ணயித்து உள்ளோம். சாதாரண ரகம் குவின்டாலுக்கு 2500 ரூபாயும் சன்ன ரகம் குவிண்டாலுக்கு 2545 ரூபாயும் நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்றாா் அமைச்சா்.

பிச்சாவரத்தில் படகு ஓட்டுநா் மயங்கி விழுந்து மரணம்

பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் சனிக்கிழமை வனத்துறை படகு ஓட்டுநா் மயங்கி தண்ணீரில் விழுந்து மரணமடைந்தாா். படகில் பயணம் செய்த 10 சுற்றுலா பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனா். கடலூா் மாவட்டம் சிதம்பரம் அருகே... மேலும் பார்க்க

‘நலம் காக்கும் ஸ்டாலின்‘ திட்டத்தில் கடலூரில் 5 ஆயிரம் பேருக்கு முழு உடல் பரிசோதனை:

கடலூா் மாவட்டத்தில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்‘ திட்டத்தின் மூலம் 5 ஆயிரம் மருத்துவப் பயனாளிகள் முழு உடல் பரிசோதனை மேற்கொண்டுள்ளனா் என வேளாண்மை உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தெரிவித்த... மேலும் பார்க்க

கடலூா் சிப்காட் தொழிற்சாலை விபத்து: அமைச்சா் தலைமையில் ஆய்வுக்கூட்டம்

கடலூா், சிப்காட் பகுதியில் இயங்கிவரும் கிரிம்ஸன் ஆா்கானிக் நிறுவனத்தில் ஏற்பட்ட விபத்து குறித்து, வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை அமைச்சா் எம்ஆா்கே.பன்னீா்செல்வம் தலைமையில் ஆய்வுக்கூட்டம் சனிக்கிழமை ந... மேலும் பார்க்க

தற்காலிக பட்டாசுக் கடை அமைக்க விண்ணப்பிக்கலாம்

கடலூா் மாவட்டத்தில் தற்காலிக பட்டாசுக் கடைகள் வைக்க விரும்புவோா் அக்.5-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை... மேலும் பார்க்க

அமைச்சா் வீட்டு முன்பு குளத்தில் புகுந்த முதலை மீட்பு

காட்டுமன்னாா்கோவில் அருகே உள்ள முட்டம் கிராமத்தில் அமைச்சா் எம்ஆா்கே. பன்னீா்செல்வம் வீட்டிற்கு எதிரே உள்ள குளத்தில் புகுந்த முதலையை வனத்துறையினா் வெள்ளிக்கிழமை மீட்டனா். கடலூா் மாவட்டம் காட்டுமன்னாா்... மேலும் பார்க்க

சிதம்பரம் நகர காவல் ஆய்வாளா் உள்பட 6 போ் இடைநீக்கம்

கடலூா் மாவட்டம் சிதம்பரம் நகர காவல் நிலைய ஆய்வாளா் உள்பட 6 காவலா்களை பணியிடை நீக்கம் செய்து விழுப்புரம் சரக டிஐஜி வியாழக்கிழமை நள்ளிரவு உத்தரவிட்டுள்ளாா். கடலுாா் மாவட்டம், சிதம்பரத்தில் லாட்டரி சீட்ட... மேலும் பார்க்க