செய்திகள் :

விவோ ஃபோல்டு மொபைல் ஜூலை 14-ல் அறிமுகம்! சிறப்பம்சங்கள் என்னென்ன?

post image

விவோ நிறுவனத்தில் விவோ எக்ஸ் ஃபோல்டு 5 மற்றும் விவோ எக்ஸ்200 ஆகிய மொபைகளின் அறிமுக வெளியீட்டுத் தேதி குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

சீனாவைத் தலைமையிடமாகக் கொண்ட விவோ நிறுவனம் இந்தியாவில் அதிகம் விற்பனை ஆகும் முதல் 5 போன்களில் தனக்கென தனி இடத்தைப் பிடித்துள்ளது. அனைத்து போன்களுக்கும் சவால் அளிக்கும் வகையில் புதிய நவீன அமைப்புகளையும் செயல்படுத்திவருகிறது.

அந்த வகையில், வருகிற ஜூலை 14 ஆம் தேதி விவோவின் புதிய மாடலில் மடக்கூடிய வகையில் போன்கள் அறிமுகமாகவுள்ளன. அவை Vivo X Fold 5 மற்றும் Vivo X200 FE. இவை ஏற்கனவே ஜூன் மாதத்தில் சீனா மற்றும் தைவான் ஆகிய நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. தற்போது இந்திய சந்தைகளில் அறிமுகமாகின்றன.

Vivo X Fold 5 மற்றும் X200 FE மாடல்கள் முறையே 6,000mAh மற்றும் 6,500mAh பேட்டரி திறன்களைக் கொண்டிருக்கும். இந்த போன்களை அதிகாரப்பூர்வ வலைதளம் மற்றும் பிளிப்கார்ட் வழியாக வாங்கிக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Vivo X200 FE மொபைல் 12 ஜிபி உள் நினைவகம் மற்றும் 256 ஜிபி நினைவகம் கொண்டுள்ளது. இதன் விலை: ரூ.54,999. அதே நேரத்தில் 16 ஜிபி உள் நினைவகம் மற்றும் 512 ஜிபி நினைவகம் கொண்ட மொபைல் ரூ.59,999. 

Vivo X Fold 5 மொபைல் 16 ஜிபி உள் நினைவகம் மற்றும் 512 ஜிபி நினைவகம் கொண்டுள்ளது. இதன் விலை ரூ. 1,49,999-மாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Vivo X Fold 5 மொபைல் டைடானியம் கிரே ஷேடு மற்றும் தேவையான பல்வேறு நிறங்களில் கிடைக்கிறது. Vivo X200 FE மொபைல் அம்பெர் மஞ்சள், நீலம், லக்ஸ் கிரே ஷேடில் கிடைக்கிறது. இந்த மொபைல் 8.03 அங்குலத் திரையையும், செல்ஃபி, பின்பக்கம் என 50MP கேமராக்களையும் கொண்டுள்ளது.

இந்த போனுக்கு 80 வாட் வேகமான சார்ஜிங் மற்றும் 40 வாட் வயர்லெஸ் சார்ஜிங் ஆகியவை கொடுக்கப்பட்டிருக்கின்றன.

3.3 மி.மீட்டர் ஹெட்ஃபோன் ஜாக் இல்லாதவை, மெம்மரி கார்டு போட முடியாதவை, எஃப்எம் இல்லாதது போன்றவை குறைகளாக உள்ளன.

Vivo X Fold 5 and Vivo X200 FE are set to launch in India on July 14. These handsets have already been introduced in June in China and Taiwan, respectively. 

இதையும் படிக்க : ரூ. 10 ஆயிரத்தில் அதிக பேட்டரி திறனுடன் ஸ்மார்ட்போன்!

59 முறை அதிக சந்தா பெற்ற கிரிசாக் ஐபிஓ!

புதுதில்லி: மாணவர் ஆட்சேர்ப்பு மற்றும் தீர்வுகள் வழங்குநரான கிரிசாக் லிமிடெட், தனது ஐபிஓ-வின் இறுதி நாளில் இன்று 59.82 முறை சந்தா பெற்றதாக தெரிவித்துள்ளது.ரூ.860 கோடி மதிப்புள்ள ஆரம்ப பங்கு விற்பனையில... மேலும் பார்க்க

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 16 காசுகள் உயர்ந்து ரூ.85.39 ஆக முடிவு!

மும்பை: இன்றைய வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 16 காசுகள் உயர்ந்து ரூ.85.39ஆக நிறைவடைந்தது.அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தங்கள் குறித்த புதுப்பிக்கப்பட்ட நம்பிக்கைகளால் ர... மேலும் பார்க்க

நிலையற்ற தன்மைக்கு மத்தியிலும் சென்செக்ஸ், நிஃப்டி உயர்வுடன் முடிவு!

மும்பை: வங்கிப் பங்குகளில் கொள்முதல் மற்றும் அமெரிக்க சந்தைகளில் ஏற்பட்ட ஏற்ற இறக்கம் காரணமாக இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடுகள் அதிக ஏற்ற இறக்கத்துடன் முடிவடைந்தன.இன்றைய வர்த... மேலும் பார்க்க

முன்கூட்டியே கடனை திருப்பிச் செலுத்த கட்டணம் வசூலிக்கக் கூடாது: ஆர்பிஐ புதிய விதிமுறை

வங்கி அல்லது நிதி நிறுவனங்களிடமிருந்து கடன் பெறுவோர், அதனை முன்கூட்டியே செலுத்தும்போது, கூடுதல் கட்டணம் வசூலிக்கத் தடை விதிக்கும் புதிய விதிமுறையை ஆர்பிஐ உருவாக்கியிருக்கிறது.தனிநபர்கள் அல்லது தொழில் ... மேலும் பார்க்க

15,004 யூனிட்டுகளாகக் குறைந்த மின் நுகா்வு

இந்தியாவின் மின் நுகா்வு கடந்த ஜூன் மாதத்தில் 15,004 கோடி யூனிட்டுகளாகக் குறைந்துள்ளது. இது குறித்து அரசின் தரவுகள் தெரிவிப்பதாவது: நாட்டின் மின் நுகா்வு கடந்த ஜூன் மாதத்தில் 15,004 கோடி யூனிட்டுகளாகப... மேலும் பார்க்க

ஹீரோ மோட்டோகாா்ப் விற்பனை 10% உயா்வு

இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன நிறுவனமான ஹீரோ மோட்டோகாா்ப்பின் மொத்த விற்பனை கடந்த ஜூன் மாதத்தில் 10 சதவீதம் உயா்ந்துள்ளது. இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:... மேலும் பார்க்க