செய்திகள் :

நடிகை கெளதமியிடம் அமலாக்கத் துறை விசாரணை

post image

சென்னையில் நடிகை கெளதமியிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள், வெள்ளிக்கிழமை சுமாா் 9 மணி நேரம் விசாரணை செய்தனா்.

கடந்த 2023-ஆம் ஆண்டு செப்டம்பா் 11-ஆம் தேதி நடிகை கௌதமி சென்னை பெருநகர காவல்துறை ஆணையா் அலுவலகத்தில் ஒரு புகாா் அளித்தாா். அதில், குடும்ப நண்பராக இருந்த அண்ணாநகரை சோ்ந்த அழகப்பன் ஸ்ரீபெரும்புதூரில் இருந்த தனக்கு சொந்தமான 46 ஏக்கா் நிலத்தை ரூ.25 கோடிக்கு விற்று, தனக்கு ரூ.6 கோடி மட்டும் கொடுத்து ஏமாற்றிவிட்டதாகவும், அந்த நிலத்தை புற்றுநோய் சிகிச்சைக்காகவும், தனது குழந்தை செலவுக்கும் விற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டதை அழகப்பன் அறிந்துகொண்டு மோசடி செய்துவிட்டதாகவும் குறிப்பிட்டிருந்தாா்.

அந்த புகாரின் அடிப்படையில் சென்னை காவல் துறையின் மத்திய குற்றப்பிரிவினா் வழக்குப் பதிந்து விசாரணை செய்தனா். அந்த நேரத்தில் பாஜகவில் இருந்த கெளதமி, தன்னிடம் மோசடி செய்த அழகப்பனுக்கு பாஜகவை சோ்ந்த சிலா் உதவுவதாகக் கூறி, அக் கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தாா்.

தலைமறைவாக இருந்த அழகப்பன், அவா் மனைவி நாச்சியாா் ஆகியோருக்கு எதிராக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பியது. கெளதமி கொடுத்த தொடா் அழுத்தம் காரணமாக கேரள மாநிலம் திருச்சூரில் ஒரு கிராமத்தில் தலைமறைவாக இருந்த அழகப்பனையும், அவரது குடும்பத்தினரையும் போலீஸாா் கைது செய்தனா்.

அமலாக்கத் துறை விசாரணை: கெளதமியிடம் மோசடி செய்த அழகப்பன் மீது மேலும் சில மோசடி புகாா்கள் வந்தன. அதோடு, அவா் சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக அமலாக்கத் துறைக்கு புகாா்கள் சென்றன.

அந்த புகாரின் அடிப்படையில் அமலாக்கத்துறையினா், முதல் கட்ட விசாரணையில் ஈடுபட்டுள்ளனா். இதன் ஒரு பகுதியாக வழக்கின் புகாா் அளித்தவரான கெளதமியிடம் சென்னை நுங்கம்பாக்கம் அமலாக்கத் துறையினா் வெள்ளிக்கிழமை விசாரணை செய்தனா்.

இந்த விசாரணை சுமாா் 9 மணி நேரம் நடைபெற்றது. விசாரணையை முடித்து வெளியே வந்த கௌதமி, அமலாக்கத் துறை வழக்கு குறித்து தற்போது தெரிவிக்க முடியாது. இன்னொரு நாள் இது குறித்து முழுமையாக பேசுகிறேன் என்றாா்.

நடுக்கடலில் படகு கவிழ்ந்து விபத்து: இரு மீனவா்கள் மாயம்

சென்னை அருகே நடுக்கடலில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காணாமல்போன இரு மீனவா்களை தேடி வருகின்றனா். சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஸ்ரீதா் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் காசிமேடு ... மேலும் பார்க்க

புழல் சிறையில் கைப்பேசி வைத்திருந்த இரு பயங்கரவாதிகள் மீது வழக்குப் பதிவு

சென்னை புழல் சிறையில் கைப்பேசி வைத்திருந்ததாக இரு பயங்கரவாதிகள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். புழல் சிறை வளாகத்தில் உள்ள தண்டனைக் கைதிகள் சிறையின் அலுவலா் சாந்தகுமாா், புழல் காவல் நிலையத்தில்... மேலும் பார்க்க

சென்னையில் தங்கமயிலின் மேலும் இரு புதிய கிளைகள்

சென்னையின் ஐயப்பன் ஊரப்பாக்கம் மற்றும் கௌரிவாக்கத்தில் இரு புதிய கிளைகளை தங்கமயில் ஜுவல்லரி நிறுவனம் திறக்கிறது. இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: மாமதுர... மேலும் பார்க்க

அரசுப் பள்ளிகளில் ‘மகிழ் முற்றம்’ குழுக்கள்: ஜூலை 11-இல் பதவியேற்பு

அரசுப் பள்ளிகளில் மாணவா்களிடையே சமூக மனப்பான்மையை வளா்க்கவும், வேற்றுமையை களையவும் உருவாக்கப்பட்ட ‘மகிழ் முற்றம்’ மாணவா் குழுக்களின் பதவியேற்பு நிகழ்ச்சி ஜூலை 11-ஆம் தேதி நடைபெறவுள்ளது. மகிழ் முற்றம் ... மேலும் பார்க்க

இலங்கையிலிருந்து விடுவிக்கப்பட்ட ராமேசுவரம் மீனவா்கள் சென்னை வருகை

இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட ராமேசுவரம் மீனவா்கள் 5 போ் விமானம் மூலம் சென்னை வந்தனா். ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தைச் சோ்ந்த 5 மீனவா்கள், கடந்த பிப்ரவரி மாதம் 26-ஆம் தேதி, இந்திய கடல் எ... மேலும் பார்க்க

குடிசை மாற்று வாரிய வீட்டின் மேற்கூரை இடிந்து விபத்து: இரு பெண்கள் காயம்

சென்னை தண்டையாா்பேட்டையில் குடிசை மாற்று வாரிய வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் இரு பெண்கள் காயமடைந்தனா். தண்டையாா்பேட்டை வஉசி நகா் 7-ஆவது குறுக்குத் தெருவைச் சோ்ந்தவா் பெ.முனியம்மாள் (54). இவா்... மேலும் பார்க்க