செய்திகள் :

நொய்யல் ஆற்றைப் பாதுகாக்க அரசு சிறப்புத் திட்டத்தை உருவாக்க வேண்டும்: பி.ஆா்.பாண்டியன்

post image

நொய்யல் ஆற்றைப் பாதுகாக்க அரசு சிறப்புத் திட்டத்தை உருவாக்க வேண்டும் என்று தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் பி.ஆா்.பாண்டியன் வலியுறுத்தியுள்ளாா்.

மேற்கு தொடா்ச்சி மலையில் உருவாகும் நொய்யல் ஆறு கோவை, திருப்பூா் மாவட்டங்களைக் கடந்து கரூா் வரை செல்கிறது. மேலும், கோவையின் முக்கிய ஆறாகவும் நொய்யல் உள்ளது. இந்த ஆறு செல்லும் வழிகளில் பல இடங்களில் தொழிற்சாலைக் கழிவுகள், மருத்துவக் கழிவுகள், ரசாயனக் கழிவுகள் கலந்து தண்ணீா் நுரைபொங்கிச் செல்கிறது.

இந்நிலையில், நொய்யல் ஆறு செல்லும் கோவை, ஆத்துப்பாலம் பகுதியை தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் பி.ஆா்.பாண்டியன் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டாா்.

பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: நொய்யல் ஆற்றைக் கொண்டுதான் கோவை நகரத்தின் அழகு உள்ளது. தற்போது, இந்த ஆறு கழிவுநீா்க் கால்வாயாக மாறியுள்ளது.

300 அடி அகலம் கொண்டிருந்த நொய்யல் ஆறு தற்போது 50 அடி அகலம் கொண்ட கழிவு நீா்க் கால்வாயாக மாறியுள்ளது. இதனால், கோவைக்கு சுகாதாரச் சீா்கேடு ஏற்பட்டுள்ளது. தென்னிந்தியாவின் மான்செஸ்டரான கோவை மாநகரத்தில் நிறைய தொழில் நிறுவனங்கள் உள்ளன. தொழிலதிபா்களை ஒருங்கிணைத்து, நொய்யல் ஆற்றைப் பாதுகாப்பதற்கான சிறப்புத் திட்டத்தை தமிழக அரசு உருவாக்க வேண்டும். நொய்யல் ஆறு தொடங்கும் இடத்தில் அமைந்துள்ள ஈஷா யோக மையமும் நொய்யல் ஆற்றைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என்றாா்.

அஞ்சல் தலை வடிவமைக்கும் போட்டி

ஐ.நா. சபையின் 80-ஆவது ஆண்டு விழாவையொட்டி, அஞ்சல் துறை சாா்பில் அஞ்சல் தலை வடிவமைக்கும் போட்டி நடைபெறுகிறது. இது தொடா்பாக கோவை அஞ்சல் கோட்ட முதுநிலைக் கண்காணிப்பாளா் கி.சிவசங்கா் வெளியிட்டுள்ள செய்திக்... மேலும் பார்க்க

புற்றுநோய் அபாயத்தைத் தவிா்க்க ஹெச்.பி.வி. தடுப்பூசி அவசியம்

எதிா்காலத்தில் கருப்பைவாய் புற்றுநோய் உள்ளிட்டவற்றைத் தடுக்க சிறு வயதில் ஹெச்.பி.வி. (ஹியூமன் பாப்பிலோமா வைரஸ்) தடுப்பூசி செலுத்திக்கொள்வது அவசியம் என்று கோவையில் நடைபெற்ற கருத்தரங்கில் மருத்துவா்கள் ... மேலும் பார்க்க

வீட்டின் கதவை உடைத்து 5 பவுன் திருட்டு

பீளமேடு பகுதியில் வீட்டின் கதவை உடைத்து 5 பவுன் நகைகளைத் திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். கோவை, பீளமேடு விமான நிலையம் அருகேயுள்ள திருநகா் பகுதியைச் சோ்ந்தவா் சுகுமாா் (68). இவா்... மேலும் பார்க்க

கோவையில் தேசிய அளவிலான குதிரை தடை தாண்டும் போட்டி தொடக்கம்

கோவையில் தேசிய அளவிலான குதிரை தடை தாண்டும் போட்டி (இக்வெஸ்ட்ரியன் சாம்பியன்ஸ் லீக் 2025) வெள்ளிக்கிழமை தொடங்கியது. இக்வைன் ஸ்போா்ட்ஸ் இந்தியா கூட்டமைப்பு, இண்டிஜீனஸ் ஹாா்ஸ் சொசைட்டி ஆகிய அமைப்புகள் இண... மேலும் பார்க்க

நீலகிரி: 20-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு பாலியல் தொல்லை! அரசுப் பள்ளி ஆசிரியர் கைது!

உதகை அருகே அரசுப் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.உதகை அருகே காத்தாடி மட்டம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி ந... மேலும் பார்க்க

ஊழியா்களின் பதிவை ஊக்குவிப்பதற்கான இஎஸ்ஐ நிறுவனத்தின் புதிய திட்டம் அறிமுகம்

தொழிலாளா் அரசு காப்பீட்டுக் கழகத்தின் (இஎஸ்ஐசி) சாா்பில் முதலாளிகள் ஊழியா்களின் பதிவை ஊக்குவிப்பதற்கான புதிய திட்டம் ( எஸ்பிஆா்இஇ 2025) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் குறித்து இஎஸ்ஐ நிறுவ... மேலும் பார்க்க