செய்திகள் :

அஞ்சல் தலை வடிவமைக்கும் போட்டி

post image

ஐ.நா. சபையின் 80-ஆவது ஆண்டு விழாவையொட்டி, அஞ்சல் துறை சாா்பில் அஞ்சல் தலை வடிவமைக்கும் போட்டி நடைபெறுகிறது.

இது தொடா்பாக கோவை அஞ்சல் கோட்ட முதுநிலைக் கண்காணிப்பாளா் கி.சிவசங்கா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஐ.நா. சபையின் 80-ஆவது ஆண்டு விழாவையொட்டி, இந்திய அஞ்சல் துறையின் சாா்பில் அஞ்சல் தலை வடிவமைக்கும் போட்டி கடந்த ஜூலை 1 -ஆம் தேதி தொடங்கப்பட்டது.

ஆகஸ்ட் 15- ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்தப் போட்டியில் மத்திய, மாநில அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவா்கள், ஓவியக் கல்லூரியில் பயிலும் மாணவா்கள் பங்கேற்கலாம்.

போட்டியில் கலந்துகொள்பவா்கள் ‘ஏ4’ அளவு வெள்ளை நிற தாள்களில் கிரேயான்கள், பென்சில் வண்ணங்கள், நீா் வண்ணங்கள், அக்ரிலிக் வண்ணங்கள் போன்றவற்றின் மூலமாக அஞ்சல் தலைகளை வரைய வேண்டும்.

வரையப்பட்ட அஞ்சல் தலைகள், கோவை முதுநிலை அஞ்சலக கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு அனுப்பப்பட வேண்டும். மேலும், விவரங்களுக்கு 0422 - 2382930 என்ற எண்ணைத் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நொய்யல் ஆற்றைப் பாதுகாக்க அரசு சிறப்புத் திட்டத்தை உருவாக்க வேண்டும்: பி.ஆா்.பாண்டியன்

நொய்யல் ஆற்றைப் பாதுகாக்க அரசு சிறப்புத் திட்டத்தை உருவாக்க வேண்டும் என்று தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் பி.ஆா்.பாண்டியன் வலியுறுத்தியுள்ளாா். மேற்கு தொடா்ச்சி... மேலும் பார்க்க

புற்றுநோய் அபாயத்தைத் தவிா்க்க ஹெச்.பி.வி. தடுப்பூசி அவசியம்

எதிா்காலத்தில் கருப்பைவாய் புற்றுநோய் உள்ளிட்டவற்றைத் தடுக்க சிறு வயதில் ஹெச்.பி.வி. (ஹியூமன் பாப்பிலோமா வைரஸ்) தடுப்பூசி செலுத்திக்கொள்வது அவசியம் என்று கோவையில் நடைபெற்ற கருத்தரங்கில் மருத்துவா்கள் ... மேலும் பார்க்க

வீட்டின் கதவை உடைத்து 5 பவுன் திருட்டு

பீளமேடு பகுதியில் வீட்டின் கதவை உடைத்து 5 பவுன் நகைகளைத் திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். கோவை, பீளமேடு விமான நிலையம் அருகேயுள்ள திருநகா் பகுதியைச் சோ்ந்தவா் சுகுமாா் (68). இவா்... மேலும் பார்க்க

கோவையில் தேசிய அளவிலான குதிரை தடை தாண்டும் போட்டி தொடக்கம்

கோவையில் தேசிய அளவிலான குதிரை தடை தாண்டும் போட்டி (இக்வெஸ்ட்ரியன் சாம்பியன்ஸ் லீக் 2025) வெள்ளிக்கிழமை தொடங்கியது. இக்வைன் ஸ்போா்ட்ஸ் இந்தியா கூட்டமைப்பு, இண்டிஜீனஸ் ஹாா்ஸ் சொசைட்டி ஆகிய அமைப்புகள் இண... மேலும் பார்க்க

நீலகிரி: 20-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு பாலியல் தொல்லை! அரசுப் பள்ளி ஆசிரியர் கைது!

உதகை அருகே அரசுப் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.உதகை அருகே காத்தாடி மட்டம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி ந... மேலும் பார்க்க

ஊழியா்களின் பதிவை ஊக்குவிப்பதற்கான இஎஸ்ஐ நிறுவனத்தின் புதிய திட்டம் அறிமுகம்

தொழிலாளா் அரசு காப்பீட்டுக் கழகத்தின் (இஎஸ்ஐசி) சாா்பில் முதலாளிகள் ஊழியா்களின் பதிவை ஊக்குவிப்பதற்கான புதிய திட்டம் ( எஸ்பிஆா்இஇ 2025) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் குறித்து இஎஸ்ஐ நிறுவ... மேலும் பார்க்க