செய்திகள் :

`வீடுதோறும் சென்றும் தகுதியான வாக்காளர்கள் எப்படி நீக்கப்பட்டனர்?' -ECI-க்கு ஸ்டாலினின் 7 கேள்விகள்

post image

பீகாரில் அடுத்த சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் கடந்த ஜூலை மாதம் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த (SIR) நடவடிக்கை மேற்கொண்ட தேர்தல் ஆணையம், சுமார் 65 லட்சம் வாக்காளர்களின் பெயர்களை நீக்கியது.

இதில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பிவருகின்றன.

மேலும், இது தொடர்பான வழக்கு ஒன்றில், நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் விவரங்களை வெளியிட தேர்தல் ஆணையம் மறுத்தபோதும், வெளியீட்டாக வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ஆகஸ்ட் 14-ம் தேதி உத்தரவிட்டது.

தேர்தல் ஆணையம்
தேர்தல் ஆணையம்

இத்தகைய சூழலில் நேற்று (ஆகஸ்ட் 17) செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், "பீகாரில் ஏழு கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் தேர்தல் ஆணையத்துடன் நிற்கும்போது, தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மை அல்லது வாக்காளர்களின் நம்பகத்தன்மை குறித்து எந்த கேள்விக்குறியும் எழுப்ப முடியாது" என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், "இந்தியா கூட்டணியினர் எழுப்பிய கேள்விகளுக்கு விடையளிப்பதற்குப் பதிலாக, கூடுதலான கேள்விகளை எழுப்பியிருக்கிறது தலைமைத் தேர்தல் ஆணையரது ஊடகச் சந்திப்பு" என்று தேர்தல் ஆணையத்தின்மீது 7 கேள்விகளை முன்வைத்திருக்கிறார்.

தனது எக்ஸ் தளப் பக்கத்தில் ஸ்டாலின்,

"1. வீடுதோறும் கணக்கெடுப்பு நடத்தியும், எப்படி இத்தனை தகுதியான வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்?

2. புதிய வாக்காளர்களின் பதிவு வழக்கத்திற்கு மாறாகக் குறைவாக உள்ளது. இந்த இளம் வாக்காளர்கள் கணக்கெடுக்கப்பட்டனரா? தகுதிக்குரிய நாளில் 18 வயது நிறைவுற்ற எத்தனை இளம் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர் என்பதைச் சொல்லும் தரவுகள் ஏதேனும் இருக்கிறதா?

ஸ்டாலின்
ஸ்டாலின்

3. Registration of Electors Rules, 1960-இன்கீழ் கொடுக்கப்பட்டுள்ள விசாரணை மற்றும் இரண்டு முறையீடு நடைமுறைக்கான காலவரையறை, எதிர்வரும் பீகார் மாநிலத் தேர்தலில் பெருமளவிலான வாக்காளர்களை விலக்கும் வாய்ப்புள்ளது. இவ்விவகாரத்தைத் தேர்தல் ஆணையம் எவ்வாறு தீர்க்கப் போகிறது?

4. பிற மாநிலங்களில் சிறப்புத் தீவிரத் திருத்தம் (SIR) மேற்கொள்ளப்படும்போது, இந்த நடைமுறைச் சிக்கல்களைத் தேர்தல் ஆணையம் கணக்கில் கொள்ளுமா?

5. 01/05/2025 அன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, மறைந்த வாக்காளர்களின் பெயரை நீக்குமாறு 17/07/2025 அன்று தேர்தல் ஆணையத்திடம் நாங்கள் முறையிட்டோம். இது எப்போது நிறைவேற்றப்படும்?

6. வாக்காளரின் உரிமையை உறுதிப்படுத்தும் ஆவணமாக ஆதாரை ஏற்கத் தேர்தல் ஆணையத்தைத் தடுப்பது எது?

7. “நியாயமான தேர்தல்கள்” என்பதே தேர்தல் ஆணையத்தின் இலக்காக இருக்குமானால், அது மேலும் வெளிப்படைத்தன்மையுடனும் - வாக்காளர்களுக்கு நெருக்கமாகவும் இருக்கலாமே?" எனக் கேள்விகளை அடுக்கியிருக்கிறார்.

``சமூகநீதி என்ற பெயரில் சுரண்டுவதற்கு துணை போகாதீர்'' - தூய்மைப் பணியாளர்கள் விவகாரத்தில் அன்புமணி

தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்சென்னையில் இரண்டு மண்டலங்களை தனியார்மயமாக்கக்கூடாது என்று வலியுறுத்தியும், தங்களுக்குப் பணிநிரந்தரம் கோரியும் தூய்மைப் பணியாளர்கள் ஆகஸ்ட் 1 முதல் 13 நாள்கள் ரிப்பன் மாளிக... மேலும் பார்க்க

``கிரிமீயா கிடைக்காது; நேட்டோவில் சேரக்கூடாது'' - ஜெலன்ஸ்கியை மிரட்டும் ட்ரம்ப் பதிவு

கடந்த வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 15), அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ரஷ்ய அதிபர் புதின் பேச்சுவார்த்தை அமெரிக்காவில் உள்ள அலாஸ்காவில் நடந்து முடிந்தது. இதையொட்டி, இன்று அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன்னில் ட்ரம்பை ச... மேலும் பார்க்க

செய்தியாளர்களை நெட்டித் தள்ளிய பவுன்சர்கள், அடிக்கப் பாய்ந்த சீமான்! - என்ன நடந்தது?

தொண்டருக்கு `பளார்’விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் இருக்கும் செஞ்சிக் கோட்டையை உலகப் பாரம்பர்யச் சின்னமாக அங்கீகரித்திருக்கும் `யுனெஸ்கோ’, அது மராட்டிய மன்னரான சிவாஜியின் கோட்டை என்பதாக குறிப்பிட்டிரு... மேலும் பார்க்க

Doctor Vikatan: டயாபட்டீஸ் வந்தவர்களுக்கு உடல் எடை குறைவதேன்?

Doctor Vikatan: யாரேனும் உடல் எடை குறைந்தாலே, 'சுகர் வந்துருச்சா' என்று கேட்பவர்கள்தான் அதிகம். அதே சமயத்தில், எடையைக் குறைத்தால் நீரிழிவு வராமல் தடுக்கலாம் என்றும் மருத்துவர்கள் அட்வைஸ் செய்கிறார்கள்... மேலும் பார்க்க

``சமூக சேவை, விளிம்புநிலை மக்களுக்கு அதிகாரம் அளிப்பவர்'' -சி.பி.ராதாகிருஷ்ணனை புகழும் பிரதமர் மோடி

தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பாக, துணை குடியரசுத் தலைவர் வேட்பாளராக சி.பி.ராதாகிருஷ்ணனை முன்நிறுத்தியுள்ளனர். சி.பி.ராதாகிருஷ்ணன் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் ஆவார். அவரைக் குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் ... மேலும் பார்க்க

``பாஜக தலைவர்கள் OPS-ஐ மீண்டும் கூட்டணிக்குள் கொண்டு வர வேண்டும்'' - டிடிவி தினகரன்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் செயல்வீரர்கள் கூட்டம் அக்கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் தலைமையில் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களை சந்தித்த டி.டி.வி... மேலும் பார்க்க