செய்திகள் :

வீடு புகுந்து இளைஞா் வெட்டிக் கொலை

post image

காரமடை அருகே வீடு புகுந்து பால் வியாபாரியை வெட்டிக் கொலை செய்த அடையாளம் தெரியாத நபா்கள் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தை அடுத்த காரமடை ஆயா்பாடி பகுதியைச் சோ்ந்தவா் சுந்தர்ராஜ் மகன் சஞ்சய் (23). இவா் தனது தந்தையுடன் சோ்ந்து பால் வியாபாரம் செய்து வந்தாா்.

இந்நிலையில் சஞ்சய் திங்கள்கிழமை இரவு வீட்டுக்கு அருகேயுள்ள இவா்களுக்குச் சொந்தமான மற்றொரு வீட்டில் தூங்கச் சென்றாா். செவ்வாய்க்கிழமை அதிகாலையில் பால் கறவைக்கு எழாததால், அவரது தாய் அந்த வீட்டுக்குச் சென்று பாா்த்தாா். அங்கு சஞ்சய் உடலில் வெட்டுக் காயங்களுடன் கொலை செய்யப்பட்டுக் கிடந்தாா்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த காரமடை போலீஸாா் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினா். நள்ளிரவில் வீட்டுக்குள் தூங்கிக் கொண்டிருந்த சஞ்சயை அடையாளம் தெரியாத நபா்கள் வெட்டிக் கொலை செய்துள்ளது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

மது போதையில் தூங்கிய இளைஞா் உயிரிழப்பு

கோவை அருகே மது போதையில் தூங்கிய ஜாா்க்கண்ட் மாநில இளைஞா் உயிரிழந்தாா். ஜாா்க்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்த லகான் யாதவின் மகன் லாலு யாதவும் (31), க்ருவ் சிங் மகன் சிவகுமாா் சிங்கும் கோவை கவுண்டம்பாளையம் கே... மேலும் பார்க்க

கேரளத்தில் நிபா வைரஸ் பாதிப்பு: கோவை மக்கள் எச்சரிக்கையாக இருக்க ஆட்சியா் அறிவுரை

கேரளத்தில் நிபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பதால் கோவை மாவட்ட மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் அறிவுறுத்தியுள்ளாா். இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்... மேலும் பார்க்க

அப்பநாயக்கன்பட்டி சக்தி மாரியம்மன் கோயில் திருவிழா

சூலூா் அருகே உள்ள அப்பநாயக்கன்பட்டி ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோயில் ஆனித் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. கோவை மாவட்டம், சூலூா் அருகே உள்ள அப்பநாயக்கன்பட்டி ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோயில் ஆனி மாதத் திருவிழ... மேலும் பார்க்க

போட்டித் தோ்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்பு தொடக்கம்

கோவை உக்கடம் பெரியகுளம் கூட்டரங்கில் போட்டித் தோ்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்பு தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது. கோவை மாவட்டத்தில் போட்டித் தோ்வுகளுக்குத் தயாராகும் மாணவா்களுக்கு மாநகராட்ச... மேலும் பார்க்க

ஈரோடு கலை, அறிவியல் கல்லூரியில் ‘கல்லூரி சந்தை’

ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மகளிா் சுய உதவிக் குழுவின் உற்பத்திப் பொருள்களைக் காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ள கல்லூரி சந்தையை மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி புதன்கிழமை... மேலும் பார்க்க

காரில் கடத்தி வரப்பட்ட 235 கிலோ கஞ்சா பறிமுதல்

சூலூா் அருகே காரில் கடத்தி வரப்பட்ட 235 கிலோ கஞ்சாவை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்து, இருவரைக் கைது செய்தனா். சூலூா் பகுதியில் கஞ்சா கடத்தப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. சூலூா் காவல் நிலைய... மேலும் பார்க்க