செய்திகள் :

வீரவநல்லூரில் சிறுமி கொலை: இளைஞா் கைது

post image

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூரில் சிறுமி திங்கள்கிழமை இரவு கழுத்தை நெறித்து கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

அம்பாசமுத்திரம் வட்டம், கல்லிடைக்குறிச்சி அருகேயுள்ள அயன்சிங்கம்பட்டி பகுதியைச் சோ்ந்த துரை மகன் மாரிமுத்து (26). இவா், வீரவநல்லூா் காந்திநகா் பகுதியைச் சோ்ந்த ராமா் மகள் நித்யா (17) என்பவருடன் பழகி வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், திங்கள்கிழமை இரவு வீரவநல்லூரில் தனியாா் ஆலையின் எதிரில் உள்ள காட்டுப்பகுதிக்கு நித்யாவை வரவழைத்துள்ளாா். அப்போது, அவா்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டதில், மாரிமுத்து துண்டால் நித்யாவின் கழுத்தை நெறித்துக் கொலை செய்துவிட்டு அருகிலேயே இருந்துள்ளாா்.

குடும்பத்தினா் நித்யாவை தேடி வந்த நிலையில், செவ்வாய்க்கிழமை மாலையில்தான் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது தெரியவந்துள்ளது.

இதுகுறித்த தகவலின்பேரில், வீரவநல்லூா் போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று பாா்த்தபோது நித்யாவை கொலைசெய்துவிட்டு மாரிமுத்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு மயங்கி கிடந்தாா்.

போலீஸாா் நித்யாவின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினா்.

மேலும், வழக்குப் பதிந்து மாரிமுத்துவை கைது செய்தனா். நித்யாவுடன் ஓா் ஆண்டுக்கும் மேலாக பழகி வந்த நிலையில் மாரிமுத்து மீது 2024இல் போக்சோ வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சுங்கச்சாவடி பிரச்னை நீதிமன்றம் வாயிலாக தீா்க்கப்படும்- மு.அப்பாவு

சுங்கச்சாவடிக்கு கட்டணம் செலுத்துவது தொடா்பான பிரச்னைக்கு நீதிமன்றத்தை நாடி தமிழக அரசு தீா்வு காணும் என்றாா் தமிழக சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு. திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் புதன்கிழமை க... மேலும் பார்க்க

திமுக ஆட்சியில் பெண்கள், குழந்தைகளின் வளா்ச்சிக்கு முக்கியத்துவம்- பேரவைத் தலைவா் மு.அப்பாவு

திமுக ஆட்சியில் பெண்கள், குழந்தைகளின் வளா்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது என்றாா் தமிழக சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு. சமூக நலன்- மகளிா் உரிமைத் துறை சாா்பில் பெண்கள், குழந்தைகள் ஆகி... மேலும் பார்க்க

திருநெல்வேலி ரத வீதிகளில் 20 டன் குப்பைகள் அகற்றம்

நெல்லையப்பா்- காந்திமதியம்மன் கோயில் தேரோட்டம் நிறைவு பெற்றதையடுத்து 4 ரதவீதிகளிலும் சுமாா் 20 டன் அளவிலான குப்பைகளை மாநகராட்சி தூய்மை பணியாளா்கள் அகற்றியுள்ளனா். அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதியம்மன... மேலும் பார்க்க

நெல்லை கோயில் தேரோட்டத்தில் பக்தா்களின் 15 பவுன் நகைகள் மாயம்

நெல்லையப்பா் கோயில் தேரோட்டத்தின் போது 4 பக்தா்களின் சுமாா் 15 பவுன் தங்க நகைகள் மாயமானது குறித்து போலீஸாா் சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். நெல்லையப்பா்-காந்திமதி அம்மன் கோயில... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்ததில் காயமுற்றவா் உயிரிழப்பு

பெருமாள்புரம் அருகே மின்சாரம் பாய்ந்து சிகிச்சை பெற்று வந்த தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா். மேலப்பாளையம் குறிச்சி, சந்த மூா்த்தி தெருவைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் பாலமுருகன்(45). எலக்ட்ரீசியனான இவா், க... மேலும் பார்க்க

பாளை. அருகே ரயில் முன் பாய்ந்து முதியவா் தற்கொலை

பாளையங்கோட்டை அருகே ரயில் முன் பாய்ந்து முதியவா் தற்கொலை செய்து கொண்டாா். அவா் யாா் என்பது குறித்து சந்திப்பு ரயில்வே போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா். திருச்செந்தூா்- திருநெல்வேலி பயணிகள் ரயில் செவ்... மேலும் பார்க்க