செய்திகள் :

வெய்யில் வெளுத்து வாங்கும் வேலூரில் 3-வது நாளாக மழை!

post image

பகலில் வெய்யில் கொளுத்திய நிலையில் மாலையில் வேலூரில் வெளுத்து வாங்கிய கனமழையால் சாலையில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.

வேலூர் மாவட்டத்தில் அக்கினி வெய்யில் துவங்கியதில் இருந்து பகலில் சுமார் 100 டிகிரி ஃபாரன்ஹீட் அளவிற்கு மேல் வெய்யில் கொளுத்தி வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாள்களாக மாலையில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை மாவட்டம் முழுவதும் பரவலாக பெய்து வருகிறது.

இந்நிலையில் இன்றும் தொடர்ந்து மூன்றாவது நாளாக வேலூர் மாவட்டத்தில் பரவலாக கனமழை பெய்தது. வேலூர் மாநகருக்கு உள்பட்ட சத்துவாச்சாரி, வள்ளலார், புதிய பேருந்து நிலையம், காட்பாடி ஆகிய பகுதிகளில் பெய்த கன மழை காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது.

குறிப்பாக வள்ளலார் பகுதி மற்றும் சத்துவாச்சாரி ஆர்டிஓ சாலையில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் மழை நீர் தேங்கி நின்றதால் அந்த வழியாக செல்லக்கூடிய வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிக்குள்ளாகினர்.

முன்னே செல்லும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு மழை கொட்டியதால் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு சென்றன.

நேற்றைக்கு பெய்த மழையில் அதிகபட்சமாக குடியாத்தம் மோர்தானா அணை பகுதியில் 74 மில்லி மீட்டர் மழையும், சராசரியாக மாவட்ட முழுவதும் 15.86 மில்லி மீட்டர் மழையும் பதிவாகி இருந்தது.

தமிழகத்தில் நாளை 2 இடங்களில் பாதுகாப்பு ஒத்திகை!

தமிழத்தில் வெள்ளிக்கிழமையான நாளை(மே 9) இரண்டு இடங்களில் நடைபெறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து தமிழநாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி சில முக்கிய... மேலும் பார்க்க

தில்லியே திரும்பிப் பார்க்கும் நம்முடைய மாதிரிப் பள்ளி: முதல்வர் ஸ்டாலின்

தில்லியே திரும்பிப் பார்க்கும் வகையில் நம்முடைய மாதிரிப் பள்ளி உருவாகியிருப்பதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.பள்ளிக் கல்வித் துறை சார்பில் திருச்சிராப்பள்ளி, துவாக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூர... மேலும் பார்க்க

பெரம்பூர் மாநகராட்சி பள்ளி மாணவிகள் பிளஸ் 2 தேர்வில் சாதனை!

தமிழகத்தில் இன்று பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானதையடுத்து, சென்னை, பெரம்பூர் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் சென்னையிலேயே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தைப் பிடித்து சாதனை படைத்... மேலும் பார்க்க

கண்ணீர் வேண்டாம்.. கைகள் இன்றி +2 தேர்வில் சாதனை படைத்த மாணவருக்கு ஸ்டாலின் பதில்

கைகள் இன்றி பொதுத் தேர்வில் சாதித்த மாணவருக்கு, கண்ணீர் வேண்டாம் தம்பி என தமிழக முதல்வர் ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.தமிழ்நாடு பாடத்திட்டத்தில் பயின்று பொதுத் தேர்வு எழுதிய +2 மாணவர்களுக்கான தேர்வு ம... மேலும் பார்க்க

துவாக்குடியில் ரூ. 56.47 கோடியில் புதிய கட்டடங்கள்: முதல்வர் திறந்து வைத்தார்!

திருச்சி, துவாக்குடியில் ரூ. 56.47 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்களை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.பள்ளிக் கல்வித் துறை சார்பில் திருச்சிராப்பள்ளி, துவாக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரி... மேலும் பார்க்க

அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி!

சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் அனுமதிக்கப்பட்டுள்ளார். சளி பாதிப்பு காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக... மேலும் பார்க்க