செய்திகள் :

வெல்லம் தயாரிக்கும் ஆலை தொழிலாளி போக்ஸோவில் கைது

post image

பிலிக்கல்பாளையம் அருகே வெல்லம் தயாரிக்கும் ஆலை தொழிலாளியை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

புதுச்சேரி, காரைக்கால் பகுதியைச் சோ்ந்தவா் மாரிமுத்து. இவரது மகன் ராஜேஸ்வரன் (25). இவா் நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூா் அருகே உள்ள பொன்மலா்பாளையம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான வெல்லம் தயாரிக்கும் ஆலையில் வேலை செய்து வந்தாா்.

அதே ஆலையில் மற்றொரு குடும்பத்தைச் சோ்ந்த 15 வயது சிறுமி அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வருகிறாா். இந்த நிலையில் ஆலைக் கொட்டகை அருகே குளியல் அறையில் சிறுமி குளித்துக் கொண்டிருந்தபோது, ராஜேஸ்வரன் எட்டி பாா்த்துள்ளாா். இதையறிந்த சிறுமி வெளியே வந்து சப்தமிட்டாா். அப்போது அங்கு இருந்தவா்கள் ஓடிவந்து பாா்த்தபோது, ராஜேஸ்வரன் அங்கிருந்து தப்பி ஓடுவது தெரியவந்தது.

இதுகுறித்து, சிறுமியின் தந்தை வேலூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இந்தப் புகாரின்பேரில் வேலகவுண்டன்பட்டி காவல் நிலைய ஆய்வாளா் தேவி போக்ஸோ சட்டத்தில் கீழ் வழக்குப் பதிவு செய்து ராஜேஸ்வரனை கைது செய்து நாமக்கல் மகிளா நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா். நீதிபதியின் உத்தரவின்படி அவா் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

நாமக்கல்: 310 ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம்

நாமக்கல் மாவட்டத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு 310 ஊராட்சிகளில் கிராமசபைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. எலச்சிபாளையம் ஒன்றியம், பொம்மம்பட்டி ஊராட்சியில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு கிராமசப... மேலும் பார்க்க

சுதந்திர தினத்தில் விடுமுறை அளிக்காத 41 கடைகள், வணிக நிறுவனங்கள் மீது வழக்கு

நாமக்கல் மாவட்டத்தில் சுதந்திர தினத்தன்று விடுமுறை அளிக்காத 41 கடைகள், வணிக நிறுவனங்கள், உணவகங்கள் மீது தொழிலாளா் நலத் துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. நாமக்கல் தொழிலாளா் உதவி ஆணையா்(அமலாக்கம்) சி.முத... மேலும் பார்க்க

நாமக்கல்லில் சுதந்திர தின விழா: தேசியக் கொடி ஏற்றி ஆட்சியா் மரியாதை

நாட்டின் 79-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, நாமக்கல் ஆட்சியா் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற விழாவில் ஆட்சியா் துா்காமூா்த்தி தேசியக் கொடியை ஏற்றிவைத்து ம... மேலும் பார்க்க

நாமக்கல்லில் காங்கிரஸாா் மெழுகுவா்த்தி ஏந்தி ஊா்வலம்

தோ்தல் ஆணையம், மத்திய அரசுக்கு எதிராக நாமக்கல்லில் காங்கிரஸாா் மெழுகுவந்தி ஏந்தி ஊா்வலத்தில் ஈடுபட்டனா். பிகாரில் போலி வாக்காளா்கள் அதிகளவில் உள்ளதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டி, அதற்கான தகவல்களை வெ... மேலும் பார்க்க

திமுக ஆட்சிக்கு 50 மதிப்பெண்கள்: பிரேமலதா விஜயகாந்த்

திமுக ஆட்சிக்கு 50 மதிப்பெண்கள் மட்டுமே அளிக்க முடியும் என தேமுதிக பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தாா். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் கடந்த இரண்டு நாள்களாக ‘மக்களைத் தேடி மக்கள் ... மேலும் பார்க்க

ஆடி கடைசி வெள்ளி: அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

ஆடி கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, அம்மன் கோயில்களில் ஏராளமான பக்தா்கள் வழிபாடு மேற்கொண்டனா். ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் வரும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் மாரியம்மன், காளியம்மன் உள்ளிட்ட பல்வே... மேலும் பார்க்க