செய்திகள் :

வெளிநாடு செல்லும் சென்னை அதிகாரிகள்; 'இந்தூருக்கு செல்லுங்கள்' - கார்த்தி சிதம்பரம் அதிருப்தி

post image

சென்னையில் தினமும் கிட்டதட்ட 5,200 மெட்ரிக் டன் குப்பைகள் தினமும் கொடுங்கையூர் மற்றும் பெருங்குடியில் இருக்கும் குப்பை கிடங்கில் கொட்டப்படுகிறது.

இந்தக் குப்பைகள் பல வகைகளில் மாற்றி பயன்படுத்தப்படுகிறது. சில குப்பைகள் மக்கவும் வைக்கப்படுகிறது.

இருந்தும், இந்த இடங்களை தாண்டி பல இடங்களில் குப்பைகளை கொட்டுவது சாதாரணமாக உள்ளது. இதைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது.

இந்தக் குப்பைகளை 'எப்படி மாற்றி பயன்படுத்தலாம்?' என்றும் மாற்று ஆலோசனைகள் செய்யப்பட்டும் நடைமுறைப்படுத்தப்பட்டும் வருகிறது.

Waste Management கற்றுகொள்ள சென்னை அதிகாரிகள்; கார்த்திக் சிதம்பரம் அதிருப்தி
Waste Management கற்றுகொள்ள சென்னை அதிகாரிகள்; கார்த்திக் சிதம்பரம் அதிருப்தி

இதற்கான தொழில்நுட்பங்களை மேலும் மேம்படுத்த வரும் மே மாதம் சென்னையை சேர்ந்த மாநகராட்சி அதிகாரிகள் பார்சிலோனா போன்ற நகரங்களுக்கு பயணம் மேற்கொண்டு, நேரில் கண்டு கற்றறிந்து வர உள்ளனர். இதற்கு உலக வங்கி நிதி வழங்குகிறது.

கார்த்தி சிதம்பரம் என்ன சொல்கிறார்?

இதுக்குறித்து மக்களவை எம்.பி கார்த்தி சிதம்பரம், "இப்படி முன்னர் போன கற்றல் சம்பந்தமான பயணங்களில் கற்றுக்கொண்ட எதாவது ஒன்று இங்கே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என்று சென்னை மாநகராட்சி கூறமுடியுமா?

மோசமான குப்பை மேலாண்மை, தெரு நாய்கள் மற்றும் கால்நடைகள், உடைந்த நடைபாதைகள், குண்டும் குழியுமான சாலைகள் ஆகியவை சென்னையின் தனிச்சிறப்புகள்.

கற்றல் பயணத்தை முதலில் இந்தூரில் இருந்து ஆரம்பியுங்கள்" என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

``RSS இந்தியாவின் கலாசார ஆலமரம்'' - ஆர்.எஸ்.எஸ் தலைமையகத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரை

நரேந்திர மோடி பிரதமரானப் பிறகு முதல் முறையாக நேற்றைய தினம் ஆர்.எஸ்.எஸ் மையத்துக்குச் சென்றிருந்தார். இங்கு மாதவ் நேத்ராலயா ப்ரிமீயம் மையம் என்கிற கண் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டியப் பின் மோடி உரையா... மேலும் பார்க்க

`சிதையும் மக்களாட்சி; உள்ளாட்சியில் அடிபட்டுக் கிடக்கும் 70% நீதி' - திமுக அரசுக்கெதிராக போராட்டம்!

28 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வலியுறுத்தியும், உரிய நடவடிக்கை எடுக்காத தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தையும், மாநில அரசையும் கண்டித்து தன்னாட்சி, அறப்போர் இயக்கம், மக்களின் குரல... மேலும் பார்க்க

`பாரதியார் இல்லத்திற்கு சுற்றுலாப் பயணிகள் வர வேண்டாம்’ - ஆட்சியர் அறிவிப்பு; காரணம் என்ன?

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் வரலாற்று பக்கத்தில் மிக நீண்ட பாரம்பரியத்தை கொண்டது. ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்தில் மிகப்பெரிய பாளையமாகவும் எட்டப்ப நாயக்கர்களால் ஆட்சி செய்யப்பட்ட பகுதியாகவு... மேலும் பார்க்க

RTI: உள்ளே நுழையும் DPDP act பிரிவு 44 (3); பறிபோகும் ஆர்.டி. ஐ உரிமை... பிரச்னை என்ன? | Explainer

`மத்திய பட்ஜெட் - 2025' மீதான விவாதம் நாடாளுமன்றத்தில் நடைபெற்று வருகிறது. மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு, வக்பு வாரிய விவகாரம் போன்ற விஷயங்களில் மத்திய அரசுக்கு எதிர்க்கட்சிகள் பல கேள்விகளை எழுப்பி வர... மேலும் பார்க்க

"அன்று இபிஎஸ் சொன்ன வார்த்தை; அவராகவே பதவி விலகுவதுதான் மரியாதை" - ஓ.பி.எஸ் பதிலடி

தூத்துக்குடியில் இன்று (மார்ச் 27) செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, " 'அ.தி.மு.க'வில் ஓ.பன்னீர் செல்வத்தை இணைக்க வாய்ப்பில்லை. பிரிஞ்சது, பிரிஞ்சதுதான். இனி அவரை சேர்ப்பதற்கு வாய்ப்பேயில்ல... மேலும் பார்க்க

மீனவர்கள் 11 பேர் கைது; இரு நாட்டு மீனவர்கள் பேச்சுவார்த்தை நடந்த நிலையில் தொடரும் சிறைபிடிப்பு!

பாரம்பரிய மீன்பிடிப்பு பகுதியான மன்னார் வளைகுடா கடல் பரப்பில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தொடர்ந்து சிறை பிடித்து வருகிறது. தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடிப்பது பல ஆண... மேலும் பார்க்க