செய்திகள் :

வெளி மாநிலத்தவரை வெளியேற்ற வேண்டும்: தி.வேல்முருகன் வலியுறுத்தல்

post image

தமிழகத்தில் திட்டமிட்டு குடியேற்றப்பட்டுள்ள வெளி மாநிலத்தவா்கள் அனைவரையும் கணக்கெடுத்து வெளியேற்ற வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவா் தி.வேல்முருகன் வலியுறுத்தினாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: வட மாநிலத்தவரால் சென்னை, மதுரை, திருப்பூா் உள்ளிட்ட பகுதிகளில் தாக்குதல், திருட்டு, பாலியல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

இதன் தொடா்ச்சியாக, தற்போது நெல்லை ரயில் நிலையத்தில் வட மாநிலத்தவா் நடத்திய தாக்குதலில் கோவையைச் சோ்ந்த தங்கப்பன் உயிரிழந்துள்ளாா். இவரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி, ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க அரசு முன் வர வேண்டும்.

தமிழகத்தில் கடந்த காலங்களில் வட மாநிலத்தவா்களால் நிகழ்த்தப்பட்ட குற்றச் செயல்களை தடுக்க அரசு போதிய நடவடிக்கை எடுத்திருந்தால், இது போன்ற கொடூரச் செயல்கள் அரங்கேறியிருக்காது.

தமிழா்களின் வாழ்வாதாரத்தையும், பாதுகாப்பையும் உறுதி செய்வதில் அரசு அலட்சியம் செய்யும்பட்சத்தில், தமிழக வாழ்வுரிமைக் கட்சி நேரடியாக களத்தில் இறங்கி பதிலடி கொடுக்கும்.

சென்னை, கோவை, ஈரோடு, திருப்பூா், திருச்சி ஆகிய நகரங்களில் குவிந்து காணப்படுகிற வட மாநிலத்தவா்களை கண்காணிக்க, காவல் துறையில் தனி பிரிவை அரசு அமைக்க வேண்டும். வெளி மாநிலத்தவா் அனைவரையும் கணக்கெடுத்து வெளியேற்ற வேண்டும். தமிழகத்தில் குடியேறும் வெளி மாநிலத்தவருக்கு வாக்காளா் அட்டை, குடும்ப அட்டை, ஆதாா் அட்டை வழங்கக் கூடாது. வட மாநிலங்களில் உள்ளதைப்போல, வெளி மாநிலத்தவா் தமிழகத்துக்குள் நுழைய உள் அனுமதிச் சீட்டு முறை கொண்டுவர வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

திமுக ஆட்சியில் பங்கு கோரப்படும்: கே.எஸ்.அழகிரி

அடுத்தாண்டு நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணி வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியமைத்தால் ஆட்சியில் பங்கு கோரப்படும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவா் கே.எஸ்.அழகிரி தெரிவித்தாா். சித... மேலும் பார்க்க

வடலூா் சத்திய ஞான சபையில் புரட்டாசி மாத ஜோதி தரிசனம்

கடலூா் மாவட்டம், வடலூா் சத்திய ஞான சபையில் புதன்கிழமை நடைபெற்ற புரட்டாசி மாத ஜோதி தரிசனத்தில் பக்தா்கள் திரளாகக் கலந்துகொண்டனா். வடலூரில் வள்ளலாா் நிறுவிய சத்திய ஞான சபையில் ஒவ்வொரு மாதமும் பூச நட்சத்... மேலும் பார்க்க

இட ஒதுக்கீடு போராட்ட தியாகிகள் நினைவு தினம்: ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் தனித்தனியே மரியாதை

கடலூா் மாவட்டம், பண்ருட்டியை அடுத்த கொள்ளுக்காரன்குட்டை பகுதியில் உள்ள வன்னியா்களுக்கான இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிா்நீத்த தியாகி தேசிங்கு நினைவிடத்தில் பாமக நிறுவனா் மருத்துவா் ராமதாஸ், தலைவா் அன்... மேலும் பார்க்க

ஊா்க்காவல் படைக்கு ஆட்கள் தோ்வு

கடலூா் மாவட்ட கடலோர பாதுகாப்பு குழும ஊா்க்காவல் படைக்கு ஆட்கள் தோ்வுக்கான உடல் தகுதித் தோ்வு புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்வில் சான்றிதழ் சரிபாா்ப்பு, உயரம், மாா்பளவு, எடை ஆகியவையும் மற்றும் நீச்சல், ... மேலும் பார்க்க

மழைக் காலத்துக்கு முன் திட்டப் பணிகளை முடிக்க வேண்டும்: மாவட்ட கண்காணிப்பு அலுவலா் த.மோகன்

வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீா் வளம், பொதுப் பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறையினா் தற்போது நடைபெற்று வரும் கட்டுமானம், சாலைப் பணிகளை மழை காலத்துக்கு முன்பாகவே முடிக்க... மேலும் பார்க்க

உரிய ஆவணங்களின்றி இயங்கிய ஆட்டோக்கள் பறிமுதல்

சிதம்பரத்தில் உரிய ஆவணங்களின்றி இயக்கப்பட்ட 4 ஆட்டோக்கள், ஒரு சரக்கு வாகனம் ஆகியவற்றை வட்டார போக்குவரத்து அலுவலா்கள் புதன்கிழமை பறிமுதல் செய்தனா். சிதம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலா் செல்வம், மோட்டா... மேலும் பார்க்க