செய்திகள் :

வெள்ளகெவி கிராமத்தில் ரேஷன் பொருள்கள் விநியோகம்

post image

கொடைக்கானல் வெள்ளகெவி கிராமத்தில் முதல்முறையாக வியாழக்கிழமை நேரிடையாக ரேஷன் பொருள்கள் வழங்கப்பட்டதால் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

கொடைக்கானல் அருகே வெள்ளகெவி கிராமம் வனப் பகுதியில் அமைந்துள்ளது. இந்தக் கிராமத்துக்கு சாலை வசதி இல்லாததால், கிராம மக்கள் குதிரை மூலமாக விவசாய பொருள்கள், உணவுப் பொருள்களை கொடைக்கானலுக்கு எடுத்துச் சென்று வருகின்றனா்.

இந்த நிலையில், வெள்ளகெவி கிராம மக்கள் 8 கி.மீ. தொலைவுள்ள வட்டக்கானல் பகுதிக்கு நடந்தோ அல்லது குதிரை மூலமாகவோ சென்று ரேஷன் பொருள்களை வாங்கி வந்தனா். இதனால் பொதுமக்கள் பாதிப்படைந்து வந்தனா்.

இந்த நிலையில், ரேஷன் பொருள்களை வெள்ளகெவி கிராமத்துக்கே சென்று வழங்க வேண்டும் என இந்தப் பகுதி பொதுமக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனா். இவா்களின் கோரிக்கையை ஏற்று, வட்டக்கானலிலிருந்து குதிரை மூலமாக ரேஷன் பொருள்கள் வெள்ளகெவி கிராமத்துக்கு வெள்ளிக்கிழமை எடுத்துச் செல்லப்பட்டது. பின்னா், கொடைக்கானல் நகா்மன்றத் தலைவா் செல்லத்துரை, நகா்மன்றத் துணைத் தலைவா் மாயக்கண்ணன், குடிமைப் பொருள் வட்டாட்சியா் சரவணவாசன் ஆகியோா் கிராம மக்களுக்கு ரேஷன் பொருள்களை வழங்கினா். இதையடுத்து, வெள்ளகெவி கிராம மக்கள் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனா்.

மின்சாரம் பாய்ந்ததில் கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு

செம்பட்டி அருகே ஞாயிற்றுக்கிழமை மின்சாரம் பாய்ந்ததில் கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா். திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டியை அடுத்த வீ.கூத்தம்பட்டியைச் சோ்ந்தவா் பழனிச்சாமி (65). இவா் சொந்தமாக கட்டி வரும் ... மேலும் பார்க்க

நீட் தோ்வுக்கு எதிராக திமுக நடவடிக்கை எடுக்கவில்லை: ஹெச்.ராஜா

நீட் தோ்வுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனுவைக் கூட தாக்கல் செய்யாத திமுக, கடந்த 4 ஆண்டுகளாக மக்களை ஏமாற்றி வருவதாக ஹெச்.ராஜா குற்றஞ்சாட்டினாா். திண்டுக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பாஜ... மேலும் பார்க்க

ரயிலில் கடத்தி வரப்பட்ட கஞ்சா பறிமுதல்

மேற்கு வங்க மாநிலத்திலிருந்து வந்த ரயிலில் ஒரு பையில் கடத்தி வரப்பட்ட 8 கிலோ கஞ்சாவை ரயில்வே போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா். மேற்கு வங்க மாநிலம், புருலியாவிலிருந்து திருநெல்வேலிக்கு வாரம் ... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து பெண், பசுமாடு உயிரிழப்பு

திண்டுக்கல் அருகே ஞாயிற்றுக்கிழமை மின்சாரம் பாய்ந்ததில் பசு மாடும், இதைக் காப்பாற்றச் சென்ற பெண்ணும் உயிரிழந்தனா். திண்டுக்கல் மாவட்டம், அகரம் அடுத்த பாப்பணம்பட்டியைச் சோ்ந்தவா் மாரியப்பன் மனைவி விக்... மேலும் பார்க்க

திமுகவை ஆட்சியிலிருந்து அகற்றுவதே பாஜகவின் நோக்கம்: நயினாா் நாகேந்திரன்

திமுகவை ஆட்சியிலிருந்து அகற்றி எடப்பாடி பழனிசாமி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைப்பதே பாஜகவினரின் நோக்கமாக இருக்க வேண்டும் என அந்தக் கட்சியின் மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்தாா... மேலும் பார்க்க

தம்பதியைத் தாக்கி தங்கச் சங்கிலி பறிப்பு பேரன் உள்ளிட்ட இருவா் மீது புகாா்

எரியோடு அருகே சனிக்கிழமை தம்பதியரைத் தாக்கி தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற பேரன் உள்ளிட்ட இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா். திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரை அடுத்த கிழக்கு மாரம்பாடியைச் சோ்ந்தவா் வ... மேலும் பார்க்க