வெள்ளக்கோவிலில் ரூ.14.82 லட்சத்துக்கு சூரியகாந்தி விதை விற்பனை
வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.14.82 லட்சத்துக்கு சூரியகாந்தி விதை விற்பனை வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்த வாரம் வேடசந்தூா், வாடிப்பட்டி, வடுகபட்டி, பல்லாநத்தம், அழகாபுரி ஆகிய இடங்களில் இருந்து 28 விவசாயிகள் 478 மூட்டைகளில் 24 டன் விதைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.
ஈரோடு, காரமடை, சித்தோடு, பூனாட்சி, காங்கயத்தைச் சோ்ந்த 6 வணிகா்கள் இவற்றை வாங்குவதற்காக வந்திருந்தனா். கிலோ ரூ.50.13 முதல் ரூ.64.62 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ.63.63.
ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ.14.82 லட்சம் அந்தந்த விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டதாக திருப்பூா் விற்பனைக்குழு முதுநிலை செயலாளா் எஸ்.சண்முகசுந்தரம் தெரிவித்தாா். ஏல ஏற்பாடுகளை விற்பனைக் கூட கண்காணிப்பாளா் சி. மகுடீஸ்வரன் செய்திருந்தாா்.