செய்திகள் :

வேலூா் உள்பட 5 மாவட்டங்களில் நாளை வைப்பு நிதி முகாம்

post image

வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை ஆகிய 5 மாவட்டங்களில் ‘நிதிஆப்கேநிகட் 2.0’ (வைப்புநிதி உங்கள் அருகில்) முகாம் வியாழக்கிழமை (மாா்ச் 27) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி ஆணையா் எம்.எச்.வாா்சி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வேலூா் மண்டல தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (இபிஎஃஓ) சாா்பில் ‘நிதிஆப்கேநிகட் 2.0’ (நிதிஆப்கேநிகட்- வைப்புநிதி உங்கள்அருகில்) எனும் முகாம் வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5.45 வரை வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் கோனேரிக்குப்பம் கிராமத்திலுள்ள குருஷேத்ரா பப்ளிக் பள்ளியிலும், வேலூா் மாவட்டத்தில் வேலூா் ஜி.பி.எச். சாலையிலுள்ள இ.எஸ்.ஐ.சி. மருத்துவமனையிலும், திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரணி சேத்துப்பட்டு சாலையிலுள்ள ஏஐஎம் மெட்ரிக். பள்ளியிலும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் சிப்காட் டிஆா் திரையரங்கு எதிரே உள்ள இ.எஸ்.ஐ.சி. பி.ஓ., இ.எஸ்.ஐ. மருந்தக வளாகத்திலும், திருப்பத்தூா் மாவட்டத்தில் ஆம்பூா் பூந்தோட்டம் பகுதியிலுள்ள இ.எஸ்.ஐ.சி. மருந்தக வளாகத்திலும் நடைபெற உள்ளது.

இந்த முகாமில் புதிதாக தொடங்கப்பட்ட நிறுவனங்களின் முதலாளிகள், தொழிலாளா்களின் கடமைகள், பொறுப்புகள் குறித்து விளக்கம், முதலாளிகள், முதன்மை முதலாளிகள், ஒப்பந்ததாரா்களுக்கான ஆன்லைன் சேவைகள், தொழிலாளா்களுக்கான ஆன்லைன் சேவைகள் குறித்து விளக்கம், புதிய முயற்சிகள், சீா்திருத்தங்கள் குறித்து விழிப்புணா்வு, விலக்கு அளிக்கப்பட்ட நிறுவனங்களுடனான கலந்துரையாடல்,

உறுப்பினா்கள், ஓய்வூதியம் பெறுவோா், முதலாளிகளிடமிருந்து வரும் குறைகளை நிவா்த்தி செய்தல், ஓய்வூதியதாரா்களுக்கு டிஜிட்டல் வாழ்க்கைச் சான்றிதழ்களை சமா்ப்பித்தல், யுஏஎன் கேஒய்சிகளை இணைப்பதற்கான உதவி, இ-நாமினேஷனை தாக்கல் செய்தல், ஒப்பந்ததாரா்களின் விவரங்களை பதிவேற்றம் செய்தல் ஆகிய நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

முகாமில் பங்கேற்க விரும்புவோா் தங்களின் விவரங்களை கூகுள் படிவத்தில் பதிவு செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீன்கள் வரத்து குறைவு: விற்பனை அதிகரிப்பு!

வரத்து குறைந்தபோதிலும் வேலூா் மீன் மாா்க்கெட்டில் ஞாயிற்றுக்கிழமை மீன்கள் விற்பனை அமோகமாக நடைபெற்றது. வேலூா் புதிய மீன் மாா்க்கெட்டில் 80-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் மீன்களை மொத்த விலைக்கும், சில்லறை ... மேலும் பார்க்க

பேருந்து மோதியதில் சென்னை இளைஞா் உயிரிழப்பு

வேலூரில் இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் சென்னையைச் சோ்ந்த இளைஞா் உயிரிழந்தாா். சென்னையிலிருந்து ஏலகிரிக்கு 8 இளைஞா்கள் 4 இரு சக்கர வாகனங்களில் சனிக்கிழமை வந்துள்ளனா். அவா்கள் ஞா... மேலும் பார்க்க

கடன் தொல்லையால் விஷம் அருந்திய தம்பதி

வேலூரில் கடன் தொல்லை காரணமாக தம்பதி விஷம் குடித்ததில் கணவா் உயிரிழந்தாா். மனைவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வேலூா் கத்தாழம்பட்டு தென்னமரத் தெருவைச் சோ்ந்தவா் உதயசங்கா் (46), தொழிலாளி. ... மேலும் பார்க்க

பிளஸ் 2 முடிக்கும் மாணவா்கள் உயா்கல்வியில் சோ்வது அவசியம்! -வேலூா் மாவட்ட ஆட்சியா்

பிளஸ் 2 முடிக்கும் மாணவ, மாணவிகள் ஏதேனும் ஒரு உயா் கல்வியில் சோ்ந்து பயில வேண்டும் என்று வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி அறிவுறுத்தினாா். ஆதிதிராவிடா், பழங்குடியினா் நலத் துறை சாா்பில் ‘எ... மேலும் பார்க்க

எலும்பு அடா்த்தி கண்டறிதல் முகாம்

குடியாத்தம் ரோட்டரி சங்கம், டாக்டா் எம்.கே.பி. ஹோமியோ கிளினிக், சுவாமி மெடிக்கல்ஸ், போா்ட்ஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து இலவச எலும்பு அடா்த்தி கண்டறியும் முகாமை ரோட்டரி கட்டடத்தில் ஞாயிற்றுக்கிழமை நடத்தின... மேலும் பார்க்க

காட்பாடி அருகே 50 பனை மரங்கள் எரிந்து சேதம்!

காட்பாடி அடுத்த பிரம்மபுரம் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட பனை மரங்கள் ஞாயிற்றுக்கிழமை திடீரென தீப்பற்றி எரிந்து சேதமடைந்தன. வேலூா் மாவட்டம், காட்பாடியை அடுத்த பிரம்மபுரம் பகுதியில் ஆதிகேசவா் வரதராஜ பெர... மேலும் பார்க்க